பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 30, 2007

தசாவதாரம் - ஒரு டிரைலர்!!!

சிவாஜி படம் பல இடங்களில் சக்கை போடு போட்டாலும் பல இடங்களில் மொக்கை போட்டு கொண்டிருக்கிறது. காரணம் எத்தனை தியேட்டர் எத்தனை தியேட்டர். இந்த படத்தை பொறுத்தவரை எத்தனை நாள் ஓடுகிறதுன்னு பார்ப்பது முக்கியமில்லை. கலக்ஷன் என்ன என்பது மட்டுமே முக்கியம். ஆக படம் ஜெயித்துவிட்டது. அது போகட்டும். தசாவதாரம் என்னா ஆச்சுன்னு இனிமே நம்ம வலைப்பதிவர்கள் ஆராய கிளம்பிடுவாங்க. அதுக்கு வடம் புடிச்சு குடுத்துட்டேன் இந்த தலைப்பின் மூலமாக. ரெடி ஸ்டார்ட் மீசிக். என் தொழில் இதுவல்ல. ஏதாவது காமடின்கிற பேர்ல குப்பைய கொட்டிகிட்டு இருப்பது மாத்திரமே. மக்களே தலைப்பை பார்த்து வந்தாச்சா அபிஅப்பா பதிவுக்கு! இப்ப நம்ம கச்சேரி!

"மக(ள்)ராசனா போயிட்டு வாய்யா"ன்னு "தம்பி" ஒரு பதிவு போட்டு அனுப்பி வச்சாரு மயிலாடுதுறைக்கு. அந்த வாழ்த்து ஆண்டவன் காதிலே போய் சேர்ரத்துக்குள்ள மறுவி போய் "மவ(ன்)ராசனா போயிட்டு வாய்யா"ன்னு விழுந்து அவரும் "ஆமின்" போட்டுட்டாரு. நான் அங்க போன 3 நாள் பின்ன பையன் பொறந்துட்டான்.

அந்த முதல் 3 நாளும் நான் தங்கமணிக்கு செஞ்ச பணிவிடைகளை நம்ம டெல்லி சகோதரி நேரிடையா பார்த்து கண்கலங்கிட்டாங்க.(முத்துலெஷ்மியக்காவ், பாலிஷா விட்டுடுவோம் எதா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்).

சரி! 23ம் தேதி நம்ம பாசக்கார குடும்பம் வரும் முன்னமே டெல்லி சிங்கம் சென்ஷி அவர் அம்மா சகோதரியோடு வந்து பார்த்துட்டுட்டாங்க. சரி 23ம் தேதி நம்ம பாசகார குடும்பத்தின் சந்திப்பின் விஷயங்களை எழுதுவோம்ன்னு பார்த்தா முதல்ல கண்மணி டீச்சர் கலக்கி எடுத்து ஒரு பதிவு, பின்னாலேயே தங்கச்சி காயத்ரி ஒரு பதிவு, நம்ம சென்ஷி ஒரு பதிவு, அதோட இல்லாம நம்ம முத்துலெஷ்மி ஒரு பதிவுன்னு தூள் கிளப்ப அமைதியான நம்ம "ஜி" ஒரு பின்னூட்டம் ரெடி பண்ணி எல்லா பதிவிலும் காபி பேஸ்ட் பண்ணிகிட்டு இருக்கார். அனேகமா இந்த பதிவிலும் அதை அவர் செய்வார் என்று நம்ப தகுந்த வட்டாரம் சொல்வதால் இந்த பதிவிலே நான் அந்த வேலையை செய்து அவரின் பாரத்தை நானே சுமக்கிறேன்.

சரி நீ என்னத்த கிழிச்சன்னு கேட்பவர்களுக்கு - இலங்கையில் இப்போது நடக்கும் நிகழ்வுகளுக்கு நீங்கள் என்ன கொள்கை ரீதியான முடிவு எடுத்திருக்கிறீர்கள்? என 1947 ஆகஸ்ட் 15 முதல் ஒரு ரெடிமேட் கேள்வி எல்லா நிருபரும் நேரு முதல் மன்மோகன்சிங் வரை கேட்கும் போது ஒரே பதில் வரும் "மத்திய அரசு நிலமையை உண்ணிப்பாக கவனித்து வருகிறது"ன்னு. (இத்தினி வருஷம் இவ்வள்வு உண்ணிப்பாக கவனிச்சா கண்ணு அவுஞ்சி போயிடாது!!)...நானும் அந்த சந்திப்பில் அப்படித்தான்"நிலமையை உண்ணிப்பாக கவனித்து வந்தேன்". சரி கவனிச்சதையாவது சொல்லித்தொலை என்றால் அதுவும் முடியாது. காரணம் "என் பதிவை மீள் பதிவு செய்ய நீ யார்"ன்னு யாரும் நாக்கு மேல பல்லு போட்டு ஒரு கேள்வி கேட்க்கப்படாது. அதான்.

சரி இந்த பதிவிலே என்ன சொல்லப்போறேன்னு கதறும் கண்மணிகளுக்கு ...அதான் சொல்லிட்டேனே தலைப்பிலேயே 'ஒரு டிரைலர்". ஆம் அபி அப்பா ரொம்ப நாளா காணுமேன்னு (சந்தோஷமா) இருப்பவர்களுக்கு இது ஒரு டிரைலர் பதிவு! அவ்வளவே!

சரி ரொம்ப பீலா உட்டது போதும் என்னதான் எழுதி கிழிக்க போற அடுத்த பதிவிலேன்னு கேட்டா ஒரே நாள் இரவிலே மயிலாடுதுறையின் அத்தனை தாவணிகளும் திருட்டுபோய் அதுக்கு பதில் சுடிதாரை கொண்டு வந்து கொட்டிய குஜராத்தி/ராஜஸ்தானிய பாசிசம் பத்தி எழுதுவதா அல்லது கொஞ்சம் கூட குறையாத மயிலாடுதுறையின் குசும்பு பத்தி எழுதுவதா அல்லது எங்க ஊர் ரோடு அழகு பத்தி எழுதுவதா(மயிலாடுதுறை நகராட்சியே ரோட்டில் உள்ள குழிகளை மூடு அல்லது அரசாங்கமே டாஸ்மாக்கை மூடு) நெறைய விஷயம் இருக்கு மக்கா! பின்னி பெடல் எடுக்க! கொஞ்சம் பின்ன வர்ரேன்.


அதுக்கு முன்ன பாசக்கார குடும்ம சந்திப்பு பத்தி முத்துலெஷ்மி பதிவிலே எழுதியிருந்தாங்களே "கல்யாணம் முடிஞ்ச பின்ன சுத்தி சேர் போட்டு ரவுண்டு கட்டி உக்காந்து ரகளை அடிப்போமே"ன்னு அது சத்தியம். எல்லாரும் அன்று ஊருக்கு போன பின் என் பாடு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி! நெகிழ்வான சந்திப்பு! இந்த அண்ணாச்சிக்காக வந்த அத்தனை என் சொந்தங்களுக்கு கண்மணி டீச்சர்/கோபி/ஜெயந்தி/முத்துலெஷ்மி&மாதினி/சபரி/ராம்/ஜி/காயத்3/அவங்க அம்மா/எங்க அக்காகோதை/அபிபாப்பா எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்வேன்!

அதுபோல் ரகளை நடந்து கொண்டிருக்கும் போதே போனில் கலந்து கொண்ட மங்கை/அவங்க சரிபாதி/அவந்திகா/நம்ம புலி மற்றும் அனைவருக்கும் மிக்க நன்றி!!!

June 6, 2007

பாரதிக்கும் பாரத மாதாவுக்கும் என்ன பிரச்சனை!!! (ஒரு மீள் பதிவு)

நான் வீட்டில் நுழையும் போது பாப்பா டைகரிடம் " நீங்கள் எல்லாருமே என் குழந்தைகள்" ன்னு சொல்லிட்டு இருந்தா. நா நேரா தங்கமனிட்ட போய் டைகருக்கு என்னாச்சுன்னு கேட்டேன். வீடே கொஞ்சம் பரபரன்னு இருந்துச்சு. "டைகருக்கு ஒன்னும் ஆகல. நீங்க போய் பாப்பா தலை சைஸ்க்கு ஒரு கிரீடம், ஒரு வேல் ரெண்டும் எங்கேர்ந்தாவது புடிச்சுட்டு வாங்க. எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.சீக்கிரம் போங்க" என்னாச்சு....சரி பாப்பா ஏதாவது ஜெயசந்திரன் கோல்டு ஹவுசுக்கு மாடல் ஆகப்போவுது போலயிருக்கு. நாம கொடுத்த வேலய செய்வும்ன்னு வெளியே வந்துட்டேன்.

பாப்பா அப்பவும் டைகர்கூட அதையே பேசிட்டுஇருந்தா. வாசலுக்கு வந்தா அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் எல்லாரும் வந்து தப தபன்னு நுழைறாங்க. அப்புரம்தான் தெரிஞ்சுது. ஸ்கூல் குடியரசு தினத்துக்கு விழாவில் பாப்பாதான் பாரதமாதாவாம். இன்னிக்கு சாயந்திரம் விழா. அட்ரா சக்கை. எனக்கும் பரபரப்பு தொத்திகிச்சு. தங்கமனிகிட்ட 'கான்செப்ட்' என்னன்னு கேட்டேன். " எனக்கு நெறய வேல இருக்கு. சொன்னத செய்ங்க"ன்னு பதில் வந்தது. என் கஷ்டத்த பாத்து அபியோட பெரியம்மா பொண்ணு சொன்னா" பாப்பாவ ஸ்டேஜ்ல ஒரு ஸ்டூல் போட்டு நிருத்தி காந்தி, நேரு, பாரதி, காமராஜர்,சரோஜினி நாயுடு இப்டி பல தலைவர்கள் வேஷம் போட்ட பையன்களும் பொண்ணுகளும் சுத்தி சுத்தி வருவாங்களாம். கடைசியா பாப்பா எல்லாரையும் பாத்து "நீங்கள் எல்லாரும் என் குழந்தைகள்" என்ற டயலாக் சொல்லனுமாம்" என்றது. ஓ அதுதான் பாப்பா டைகரிடம் இதை சொல்லிட்டுருந்தாளோ.

அதுக்குள்ள பாப்பாவுக்கு மேக்கப் ஸ்டாட் ஆயிருச்சு. நமக்கு கொடுத்த வேலைய நாம பாப்போம்ன்னு வெளியே வந்தேன். டைகர் என்னய பாத்து "நீங்கள் எல்லாம் என் குழந்தைகள்"ன்னுச்சு. அடிப்பாவி டயலாக் மனப்பாடம் செய்யிறேன் டயலாக் மனப்பாடம் செய்யிறேன்னு சொல்லி நாய பேச வச்சுட்டாளேன்னு நெனச்சுகிட்டு கிரீடம், வேல் வாங்க கெளம்பிட்டேன். ஒரு வழியா வேல் மட்டும் மோப் குச்சியில் முனைல அட்டயால் வேல் மாதிரி செஞ்சு அதில ஜிகினா பேப்பர் ஒட்டி குடுத்தார் பூக்கடை சவுந்திரம்.


எடுத்துகிட்டு வூட்டுக்கு ஓடினா பாப்பா ரெடி, தங்கமனி ரெடி, எல்லாரும் ரெடி, டைகர் கூடரெடி எக்ஸப்டு நானு. நா எப்படியும் கொண்டுவரமாட்டன்ற நம்பிக்கைல தங்கமனி நெக்லெஸ்ஸ தலகீழ பாப்பா தலைல கட்டி நிமிந்து நிக்க ஈர்க்க குச்சிவச்சி கட்டி ஆனா நல்லாதான் இருந்துச்சி. "பாப்பா அப்பாகிட்ட மேக்கப்ப காட்டு"ன்னு யாரோ கூட்டத்துல சொல்ல பாப்பா வேலை கையில புடுச்சிகிட்டு லொடுக்கு பாண்டி மாதிரி நிக்குது. எங்க டயலாக்க சொல்லுன்னு நா சொல்ல "ஃஹீங்க ஃஹெல்லாம் ஹென் ஃஹொழந்தங்க" ன்னு ஏகப்பட்ட ஃ வருது. வாய் பொளந்தே வச்சிருக்கு. (லிப்ஸ்டிக் அழிஞ்சிடக்கூடாதாமா!!) பாப்பாவ பாத்தா எனக்கே பாவமா இருக்கு. அதுக்குள்ள 3 ஆட்டோ வந்து நிக்குது. சகுணம் பாக்குறாங்க அம்மா. திருஷ்டி பொட்டு வக்கிறாங்க. பாப்பா மேல பட்டும் படாமலும் மெலிசான காசி துண்ட போத்தி தங்கமனி தூக்கிகிட்டு முதல் ஆட்டோல ஏறிக்க, பைலட் மாதிரி நா என் வண்டில ஹாரன் அடிச்சிகிட்டே(வேலையும் நாதான் கைல வச்சிகனும்) போகனும்னு ஆர்டர் தங்கமனிகிட்டேயிருந்து.

நானும் கொஞ்சம் கூட வெக்கமில்லாம உழைப்பாளி ரஜினி மாதிரி... போய் ஸ்கூல்ல சேந்தாச்சு. செம கூட்டம். த்ங்கமனி, பாப்பால்லாம் ஸ்டேஜ்க்கு பின் பக்கம் மேக்கப்ரூம்க்கு போயாச்சு. நமக்கெல்லாம் அங்கு சீந்தி பாக்க ஆள் இல்லை. சரின்னு வந்து ஸ்டேஜுக்கு முன்னாடி ஒக்காந்துட்டேன். பக்கத்து சீட்ல ராமனாதன். பக்கத்து வீட்டுகாரர். அவர் பையனும் நாடகத்துல நடிக்கிறானாம். 17 பக்க வசனம் பேசுவதாக சொன்னார். அவன் 4 வது படிக்கிறான். 17 பக்கம் பேசலாம். "என்னங்க உங்க பொண்ணுக்கு 1 வரி டயலாக்தனாமே"ன்னு நக்கல் வேறு.

நிகழ்சி ஆரம்பம் ஆனது. கொஞ்ச நேரத்துலேயே ராமனாதன் பையன் நடிக்கும் நாடகம்"திருவிளையாடல்" ஆரமிச்சுது. அவரு பரவசத்துல உச்ச்த்துல இருந்தார். "சார் எங்க சார் உங்க பையன காணும்"ன்னு கேட்டேன். "அதோ அதோ"ன்னார். எனக்கு எங்கன்னே தெரியல. "அவனுக்கு என்னமா பொருந்தியிருக்கு பாருங்க சார் அந்த பிள்ளையார் வேஷம்" அப்டீன்னார். அப்பதான் தெரிஞ்சுது யானை மண்டைக்குள்ள இருக்குறது அவன் மண்டைன்னு. பொருந்தியிருகில்ல...பெருந்தொந்தியிருக்கு அவனுக்குன்னு நெனச்சுகிட்டு அவனின் 17 பக்க டயலாக்குகாக காத்திருந்தேன். "அப்பா பழம் எனக்குத்தான்" அப்டீன்னு சொன்னவுடனே அடி விசில் கிழிச்சுட்டார். நாடகம் முடியும் வரை அவன் வேறு எதுவும் பேசலை. அவரிடம் நா எதுவும் கேக்கலை. அவர் கைல இருந்த நோட்டை எங்கிட்ட கொடுத்துட்டு பையனை தேடி ஓடிட்டார். நா மெதுவா நோட்டை பிரித்து பார்த்தேன். "அப்பா பழம் எனக்குத்தான்" "அப்பா பழம் எனக்குத்தான்" அப்டீன்னு 17 பக்கத்துக்கு எழுதியிருந்துச்சு.

க்ளைமாக்ஸ் வந்துச்சு. காந்தி, நேரு, காமராஜர், சரோஜினிநாயுடு, பாரதி, சுபாஸ் சந்திர போஸ், எல்லாரும் ரெடி. எனக்கு படபடங்குது. ஸ்டேஜ்கிட்ட போயி மேல ஏறி சைடுல தங்கமனிகிட்ட நின்னுட்டேன்.(அடிபாவி நீ மட்டும் பட்டு புடவை, நா மட்டும் சாதாரண டிரஸ்ஸா?) ஒரு ஸ்டூல் போட்டு பின்னாடி பெரிய கொடி நட்டு பாப்பாவ தூக்கி நிப்பாட்டி கைல வேல கொடுத்துட்டாங்க. சுத்தி வர தலைவர் எல்லாரும் ரெடி. திரை விலக்கப்பட்டது. "ரகுபதி ராகவ ராஜாராம்" காந்தி பாட எல்லாரும் அதையே திரும்ப பாட முதல் சுத்து நல்லபடியா முடிஞ்சுது. தங்கமனி தாலிய கண்னுல ஒத்திக்க, "நானா பாரதமாதா, பாப்பாதான"ன்னு சொல்ல அந்த அவசரத்திலும் ஒரு முறைப்பை மாத்திரம் வாங்கிகிட்டு கவனிக்கலானேன். ஆனா பாப்பா லிப்ஸ்டிக் காரணத்தால் வாயை பொளந்தபடியே இருந்தாள்.

ரெண்டாவது சுத்தும் நல்லபடி முடிஞ்சுது. 3 வது சுத்து ஆரம்பம். பாப்பாவுக்கு அந்த ஜிகினா டிரஸ் ஒத்துக்கல போலயிருக்கு. முதுகுல அரிச்சுது போல. வலது கையில இருந்த வேலை இடது கைக்கு மாத்துனா. வலது கைய லாவகமா மடிச்சு...அப்போ இடதுகை வேலின் பின்பக்கம் பின்னோக்கி போக காந்ந்திதாத்தா கம்போட இடிக்க தாத்தா பின்னாடி வந்த பாரதி மேல விழ கூடவந்த சரோஜினி நாயுடுவும் தடுமாற இதுல யார் ஸ்டூல ஒதச்சாங்கன்னு தெரியல பாரத மாதா பொதக்கடீர்ன்னு குப்புரவுழுந்துட்டாங்க.(இத்தன கலேபரத்திலும் லிப்ஸ்டிக்க காப்பாத்த பாப்பா வாயை மூடலை). முதல்ல பாய்ந்தது வேற யாரு. தங்கமனிதான். பெத்த பாசம்னா சும்மாவா!! ஆனா பாப்பாவ முதல்ல தூக்கினது நாதான். பாப்பா தலைலேர்ந்து விழுந்த கிரீடத்த தங்கமனி எடுக்க நா நின்ன இடம் அப்போது மைக்குக்கு நேரா. உடனே பாப்பா "ஃஹீங்க ஃஹெல்லாம் ஹென் ஃஹொழந்தங்க" ன்னு டயலாக் விட்டா மைக்ல. (உன் கடமையுணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லியா).

கீழ எறக்கிவுட்டோன்ன புடுச்சிகிட்டா காந்திய பாத்து '' பாரதி கொரங்கு ஏண்டா என்னய தள்ளிவுட்ட..ஊவும்..ஊம்..."ன்னு அழுகை வேற. ஆஹா காந்திய பாத்து பாரதிங்கறாளே, கீழ வுழுந்ததுல எக்கு தப்பா அடி கிடி பட்டுடுச்சோன்னு நெனச்சுகிட்டு " பாப்பா அது பாரதியில்ல காந்தி"ன்னேன். "நா இப்ப என்ன பாரதமாதாவா, அதுதான் முடிஞ்சுடுச்சே. அவன் காந்தி வேஷம் போட்ட பாரதிப்பா. அவன் பேரு பாரதி" அப்ப நாதான் லூசா!!!!