பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 31, 2007

போஸ்டர் ஒட்டுவது எப்படி???

இதுக்கெல்லாம் ஒரு பதிவான்னு காறி துப்ப தோணுச்சுன்னா... ஸ்டாப். பக்கத்துல ஒரு வாளி வச்சிருக்கேன் அதுலதான் துப்பனும் என் மூஞ்சில வெளாடப்படாது. ஆமா சொல்லிட்டேன்.கார்த்தாலதான் பகுடர் போட்டு பள பளன்னு வந்துருக்கேன்.

காறி துப்ப நினைப்பவர்களே போஸ்டர் ஒட்டுவதை ப்ற்றி கொஞ்சம் நினைத்து பாருங்கள் அல்லது டிரை செய்து பாருங்கள். அந்த கஷ்டம் புரியும்.

போஸ்டர் ஒட்டி முன்னேறி தான் மந்திரி ஆகனும் என்பதால் முதலில் 'மந்திரியாவது எப்படி' என்றுதான் தலைப்பு வைத்தேன். தயாநிதி,அண்புமணி என்று கூட்டமா வந்து கும்மியடிச்சிடுவீங்களேன்னுதான் தலைப்பை மாத்திட்டேன். ரெடி ஸ்டாட்.

1 கிலோ மைதா மாவு வாங்கிக்கனும். பிறகு 20 லிட்டர் தண்ணிய ஒரு பெரிய அலுமினிய அண்டாவுல ஊத்தி அதில மைதா 1 கிலோவையும் கட்டியில்லாம கரைக்கனும்.

இப்போ அடுப்ப பத்த வச்சி நல்லா கொதிக்க வைக்கனும். 10 நிமிஷம் ஆன பின்ன....இருங்க 10 நிமிஷத்ல நாஷ்டா முடிச்சிட்டு வந்திர்ரேன். அதுவரை நல்லா கிண்டிகிட்டு இருங்க.
1
2
3
4
5
6
7
8
9
10
ஆச்சா, இப்ப பதக் பதக்ன்னு கொப்பளம் வருதா. ஒரு தினமலரை கீழே பிரிச்சு வச்சி அதன் மேல இறக்கி வச்சி ஒரு தட்டுல 5 கரண்டி எடுத்து வச்சி அதுல கொஞ்சம் உப்பு போட்டு கலந்து தனியா மூடி வச்சிட்டு வேர்வைய தொடச்சிகிட்டே வாசலுக்கு போய் முருங்கமரத்தோடு சைக்கிள் செயினால பூட்டியிருக்குற தட்டுவண்டிய ரிலீஸ் செஞ்சி வாசலுக்கு நேரா நிறுத்துங்க.

இப்போ பசை அண்டாவ தூக்கிட்டு போய் வண்டில வச்சிட்டு நேரா போய் A-0 சைஸ் போஸ்டர (உதாரணத்துக்கு 100 Nos) கலெக்ட் பண்ணிகிட்டு, 150 ரூபா தருவாங்க அதையும் வாங்கிகிட்டு நேரா டாஸ்மார்க்குக்கு வண்டிய வுடுங்க. நீங்க ஒன்னியும் முயற்ச்சி பண்ண வேனாம் வண்டி தானா போவும்.

நமக்கு ஜாஸ்தி நேரம் இல்ல. பத்து தெரு போவனும். அதனால வெளியே நின்னுகிட்டே ஒரு மானிட்டர் 90 கட்டிங்+1 தண்ணி பாக்கெட் வாங்குறோம். பாட்டில தலைய திருகிட்டே பாக்கெட்ட ஒரு மொனய கடிச்சு பிசிரு பிளாஸ்டிக்க துப்பிட்டு இப்போ நல்லா அண்ணாந்துகிட்டு வாய நல்லா பொளந்துகிட்டு 2 லிக்குடையும் ஒரே நேரத்துல உள்ள ஊத்துறோம். 8 செகண்டுதான் ஆவும். 2 எம்டியையும் கீழே கடாசிட்டு ரெண்டு கையாலயும் கல்லாவுல இருக்கிறவன் தலைய புடிச்சி குனிய வச்சி நல்லா மோந்துக்கறோம்.(சைடு டிஷ்)

சரி. வண்டிகிட்ட போய் வேலய அங்கிட்டேர்ந்தே ஆரம்பிக்கிறோம். இப்போதான் தலைப்புக்கே வாறோமா?

போஸ்டரை பிரிச்சு பார்தா இஞ்சி இடுப்போட சிம்ரன்!!! இப்போ வலது கையில 4 வெரலால பசைய அள்ளி பக்கத்து செவுத்தில அப்பி அதில சிம்ரன் இடுப்பை அதாவது போஸ்டரின் நடு பாகத்தை ஒட்டி இன்னொரு கை பசை அள்ளி போஸ்டரின் வலது மூலையில் ஆரம்பித்து சர்ர்ர் இப்போ அங்கிருந்து கீழ் முனைக்கு சர்ர்ர். திரும்ப ஒரு கை அள்ளி விட்ட இடத்திலிருந்து இடது கை கீழ் மூலைக்கு சர்ர்ர்ர்ர். அங்கிருந்து மேல் இடது மூலைக்கு சர்ர்ர்ர்.

இப்போது ஒரு கை அள்ளி இடது மேல் மூலை டு வலது கீழ் மூலை சர்ர்ர்ர். பின்பு வலது மேல் மூலை டு இடது கீழ் மூலை சர்ர்ர். முடிஞ்சுதா.

இது முக்கியம். நன்கு கவனிக்கவும். இப்போ மேல் ரெண்டு முனையையும் ரெண்டு கையாலயும் பிடித்து போஸ்டரை செவுத்திலிருந்து பிரித்து எடுத்து அப்படியே ப்ந்து போல் கண்னா பின்னான்னு சுருட்டவும். டைட்டாக இல்லை சும்மா பொதுக்குன்னு சுருட்டவும். பின்பு அந்த பந்தை கீழே உள்ள மண்னில் விட்டெறிந்து காலால் லைட்டாக ஒரு 5,6 அடிக்கு அப்பால உருண்டு போகுமாறு உதைக்கவும்.

இப்படியாக 10 உருண்டை செய்த பின் அதையெல்லாம் பொருக்கி நம் தட்டு வண்டியில் போட்டுக்கவும். பிறகு நகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட இடத்திற்கு சென்று அந்த இடத்தில் ஏற்கனவே ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்துவிட்டு(கிழிக்காமல் ஒட்டினால் மறு நாள் பத்தையாக வந்துவிடும்) முதல் பந்தை எடுத்து ஏதாவது ரெண்டு முனையை பிடித்து நன்றாக உதறவும். பயப்பட வேண்டாம். கிழியாது. மண்ணில் போட்டு பிரட்டியதால் முன்னெ பின்னெ ஒட்டிக்காது.

இப்போது உதரறிய போஸ்டரை ஒட்டவும். பிறகு பரவலாக போஸ்டரை ரெண்டு கையாலும் நன்கு தடவவும். இது தொழில் முறை தடவல். பிறகு போட்ட கட்டிங் ஜிவ்வுனு ஆகி போனதால் எக்ஸ்ட்ரா தடவல். இப்படியாக 10 தெரு போய் 80 ஒட்டி விட்டு (20 வீட்டுக்கு) திரும்பவும் வண்டில ஏறி உக்காந்தா அது நேரா டாஸ்மாக் போகும்.

திரும்ப வீட்டுக்கு வந்து 20 போஸ்டரையும் ஏற்கனவே சேத்து வச்சிருக்கறது மேல வச்சிட்டு( ஆச்சு இதுவர 100. நாளைக்கு பாய் கடைல போடுனும்) கை,கால கழுவிட்டு மூடிவச்ச மைதா கூழை(இப்போது அதை பசைன்னு சொல்லக்கூடாது) சாப்டுட்டு குப்புறடிச்சு தூங்கனும். காலைல சீக்கிரம் எந்திரிச்சி கெலம்புனும். சத்யம்ல system administrator postக்கு ஒரு interview இருக்கு.

பதிவ படிச்சாச்சா? நானும் எனக்கு பக்கத்துல வாளியும் ரெடி.

January 30, 2007

சாமி தான் காப்பாத்தனும்

அன்புள்ள நண்பர்/நண்பிகளே, நான் அபி அப்பா என்கின்ற குமார் தொல்காப்பியன். மயிலாடுதுறைகாரன். தற்போது வந்தாரை வாழ வைக்கும் துபாய்.

நான் முடிவெடுத்துவிட்டேன் பினாத்துவது என்று..மாப்பு மாப்பு.. பிளாக்குவது என்று. நான் முடிவு செஞ்சுட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன் என்று சொன்னால் 'போக்கிரி'யால் பாதிக்கப்பபட்ட பிளாக்கர்கள் ஆட்டோ அனுப்பக்கூடும் என்பதால் அதை விடுத்து மேலே தொடர்கிறேன்.

முதலில் அதற்க்கு என்னென்ன வேண்டும்? கம்பியூட்டர் பற்றி தெறிதல் அவசியம். எனக்கு அதைப்பற்றி கவலையில்லை. ஏனனில் எனக்கும் அதற்க்கும் 20 வ்ருஷ பழக்கம்.

அப்போது நான் கல்லூரி இறுதியாண்டு. ஒரு நாள் திடீரென எங்கள் வகுப்பை காலி செய்து தருமாறு கோரி பிரின்ஸ் ஓலை விட, சந்தோஷமாய் கிராப் தியரியில் இருந்து பிச்சுகிட்டு வாய்கால் மதகில் வந்து உக்காந்த போது வண்டி வண்டியா டைல்ஸ் உள்ளே போகுது. கூடவே ஏ.சி,இலவச கொத்தனார்,கிளாஸ் கதவுகள் இத்யாதி இத்யாதி எல்லாம் போக....கொத்ஸை பிடித்து என்னான்னு கேக்க அவரோ 'இந்திரா காந்தி அஸ்தி வருதாம் தம்பிகளா. அதுக்காண்டி உங்க கிளாசை ராவோட ராவா ஏ.சி பண்ன போறோம்யா'ன்னு சொல்ல அதுக்கப்புறம் மாயவரமே அல்லோகலப் பட்டுச்சி அந்த ராத்திரி.

காலைல பட்டுன்னு கெளம்பி காலேஜுக்கு போனா, என் கிளாஸ் வாசல்ல என் புரொபசர். முகமெல்லாம் வேர்த்துருக்கு. பெரிய்ய வரிசை. மொதல்ல பி.ஜி பசங்க உள்ள போறாங்க. வெளிய செருப்பை கழட்டி வச்சிட்டு உள்ள போயிட்டு வெளிறி போயி வர்ராங்க. வந்து புரபசர் கைய புடிச்சிகிட்டு ஏதோ சொல்றாங்க.

தட தடன்னு பிரின்ஸ் வர்ரார் காலேஜ் கமிட்டி உருப்பினர்களோடு. இருக்காதா பின்ன! காலேஜுக்கே பெருமைதானே. இதையெல்லாம் விட பெருமை என் கிளாஸ் என்பதால் எனக்கு. பாவி மகன் கடேசி பெஞ்சு பார்ட்டி நானு. நடு பெஞ்சா இருந்தாலாவது என் இடத்தில் அஸ்தி வைத்து வரலாற்றில் வந்திருப்பேன். கொடுப்பின இல்லாம போச்சே. எல்லாம்விதி.

பின்பு ஒருவழியாய் 11 மணிக்கு 3rd Bsc mathematics என சொல்ல பிதுக்கியடிச்சுட்டு மொதல்ல போய் நின்னேன். கிட்ட வந்து புரபசர் மெதுவா சொன்னார் " செருப்பை கழட்டிட்டு போப்பா...அப்புறம் வைரஸ் எதுனா ஆச்சின்னா.... டேக் கேர்". மொரட்டு சங்கதியா இருக்கேன்னு நெனச்சுகிடேன். 10,10பேரா ஒவ்வொரு பேட்சா உள்ள விட்டாங்க.

மூடி வைச்சிறுந்தாங்க. லேப் அட்டென்டர் பய பக்தியோட பக்கத்துல நிக்க, ஒரு லெக்சரர் மெதுவா தொறந்து காண்பிச்சார்.

ஐ....ஐ...கம்பியூட்டர்..

இப்படியாக 20 வருஷத்துக்கு முன்னயே எனக்கும் கம்பியூட்டர்க்கும் பழக்கம் ஆரம்பித்துவிட்டது.

பின்னாள் அந்த பயமெல்லாம் சுத்தமாய் போய் விட்டது. ஆமாம் அதன் முன்பாக ஒவ்வொருத்தராக உக்காந்து போட்டோ எடுத்துகொள்கிற அளவு துளிர் வுட்டு போச்சு. அப்போது சொன்னான் ஸ்ரீதர், "டேய் மாப்ள ஜாக்ரதையா வச்சிகனும்டா இந்த போட்டோவ...பொண்னு பாக்குரப்ப இத கொடுத்துவுடலாம்டா". (அவன் இப்போ TCS ல் project Manager- USல் இருக்கான்)

அவன் சொன்னது எனக்கு வீண் போகல. அந்த போட்டொதான் கொடுத்துவிட்டோம். அபி அம்மா வீட்டிலிருந்து ஒரு போட்டோ வந்தது...ஒலை தொப்பி போட்டுகிட்டு தியோட்லைட் பாக்குற மாதிரி. ஜாடிக்கேத்த மூடின்னு இத சொல்றதா? அல்லது தன் வினை தன்னை சுடும்னு சொல்றதா?? சரி அத விடுங்க.

பின்பு நான் துபாய் வந்த பின்பு அம்மாவுக்கு கடிதம் எழுதினேன்." அம்மா, இங்கு எனக்கு நல்ல வேலை. கம்பியூட்டரில் தான் வேலை"

உடனே அம்மாவுக்கு பாசம் பிச்சிகிட்டு உடனே அனுப்புடா போட்டாவன்னு சொல்ல நா எங்கிட்டு போவேன் கம்பியூட்டருக்கு? ஒரு வழியா ஒரு கீ போர்டு கிடைக்க, அதை 14" டி.விக்கு முன்ன வச்சி அதுக்குமுன்ன நா செத்துபோன பாடி மாதிரி உக்காந்து எடுத்து அனுப்பிவச்சேன்.

4 மாச முன்னாடி அம்மா சொன்னுச்சு " தங்கம், அந்த 2 வது போட்ட மாதிரி இப்ப எடுக்கற போட்டோல்லாம் இல்லைடா" !!!!

ஆக நா அப்போவரை மானிட்டர்தான் மேட்டறுன்னு...போங்க எனக்கு வெக்க வெக்கமா வருது.

ஆக இத்தினி வருஷம் அதுகூட தாயா புள்ளயா பழகிட்டு நா ஏன் பிளாக் எழுதக்கூடது???? போன் போட்டேன்"தம்பி"க்கு.

கம்பியூட்டர கரச்சி குடிச்ச மாதிரி அவர்கிட்ட பேசிக்கிட்டே நைஸா "தம்பி எப்டியாவது ஆரம்பிச்சு குடுங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு"ன்னேன்.

அதுக்கு தம்பி "இதுல கஷ்டப்படுறத்துக்கு என்னா இருக்கு?" ன்னார்.

"ஒரே கனவா வருது தம்பி. நா கீழே படுத்துகெடக்கேன். என் மேல ஒரே பின்னூட்டமா கெடக்கு. நம்ம கொத்ஸ் ஷவல் வச்சி வாரி வாரி வெளியே போட்டு என்னய காப்பாத்த பாக்குராரு. இந்த இம்சை அரசி புள்ள இன்னும் 4,5 புள்ளங்கள சேத்துகிட்டு ஒரே கும்மாளம் தாங்கல."

வாயடச்சி போயிட்டாரு நம்ம "தம்பி"

உடனே செஞ்சி கொடுத்தார். ரொம்ப நன்றி தம்பி.

ஆனா கேட்டார் பாருங்க ஒரு கேள்வி. " நீங்க எத பத்தி எழுத போறீங்க?"

ஷாக் அடிச்ச மாதிரி போச்சு எனக்கு. பிளாக் எழுத கம்பியூட்டர பத்தி யோசிச்சோமே, என்ன எழுதறதுன்னு யோசிச்சோமா??

சரி. மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான். பிளாக் உண்டாக்கி தந்தவன் பதிவும் போடுவான்.

சரி மக்களே!! நானும் பிளாக்கர் ஆய்டேனே!!!!!!

இனி உங்களையும் என்னையும் சாமிதான் காப்பாத்தனும். வணக்கம்.

January 29, 2007

கவிதை

அபிராமி அபிராமி அபிராமி