பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 27, 2007

அபிஅப்பாவும் அபுதாபியும்!!! பாகம் # 2

இப்படியாக...... அபிஅப்பாவின் இரண்டாம் ஆண்டு இந்த வலைப்பூவில் ஆ"ரம்'பிக்கிறது இன்று முதல்! இந்த பதிவின் முதல் பாகத்தை இங்கே பாருங்க!

அப்படியாக நாங்க நடுங்கி கொண்டிருந்த போது முதல் சீன்ல வந்து ஒன்பது வார்த்தை டயலாக் பேசும் ஆடிட்டர் நண்பர் மாத்திரம் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கவே எங்க டைரக்டர் அவரிடம் போய் "என்ன ஓய் எப்படி டயலாக் டெலிவரி எல்லாம் ஒழுங்கா இருக்குமா தொல்ஸ் எழுதி கொடுத்த டயலாக் எல்லாம் படிச்சாச்சா?"ன்னு கேக்க அவரோ "சி ஏ சிங்கிள் அட்டெம்ட்... "ன்னு சொல்லி மணி ஆட்டி காமிக்க அவர் மேல் நம்பிக்கை வந்துடுச்சு எல்லாருக்கும்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அறிவிப்பு எங்க நாடகத்துக்கு! ஏகப்பட்ட கைத்தட்டல், எனக்கு அந்த நிகழ்ச்சிக்கு பின்ன கிட்டதட்ட கைதட்டல்ன்னாவே 1 வருடத்துக்குஅலர்ஜி ஆகியதுன்னா பார்த்து கோங்க எந்த அளவு நடுங்கியிருப்பேன்ன்னு. முதல் காட்சி திரை விலகியது. நம்ம ஆடிட்டர் மணியை தூக்கிட்டு கிளம்பிட்டார் குருக்கள் வேஷத்துல. நான் எட்டிகூட பார்க்கலை பயத்துல! அப்படியே கண்ணை மூடிகிட்டேன். விசில் சத்தமும், சிரிப்பும் என் காதை கிழித்து குடையவே "ஆஹா நம்ம ஆடிட்டர் அசத்திட்டார்"ன்னு நெனச்சுகிட்டேன். பின்ன நானே "அப்படி ஒன்னும் இல்லியே அந்த சீன்ல கைதட்டி விசில் அடிக்கும் அளவு என நினைப்பு வரவே கொஞ்சம் பயம் வந்தது.

பாரத போரில் திருதிராஷ்டிரனுக்கு லைவ் ரிலே கொடுக்கப்பட்டது போல எனக்கு பிளேடு பக்கிரி "ஆடிட்டர் மணி அடிக்கிறார், வசனம் பேச போரார்"ன்னு லைவ் ரிலே வேற இந்த லெட்சனத்துல. விசில் சத்தம் முடிந்ததும் பிளேடு பக்கிரி வந்தார். முகமே பேயடிச்ச மாதிரி இருக்கு. என்னன்னு கேட்டேன் "ஆடிட்டர் ஆடிட்டார்"ன்னு சிம்ப்பிளா சொன்னார். என்னதான் நடந்தது சொல்லுய்யான்னு சொன்னதுக்கு அவர் பேசின வசனத்தை அப்படியே சொன்னார் பிளேடு பக்கிரி!

//''(மணியடிச்சுகிட்டே வந்து) நன்னா இருங்கோ,
ஷேமமா இருங்கோ,
இந்த உலகமே சுபிட்ஷமா வையிடா ஆண்டவா
(அப்போது மணியடிப்பதை நிறுத்தி விடனும்) ....'' //

நான் எழுதி கொடுத்ததை எல்லாத்தையும் எல்லாத்தையுமே மணல்கயிறு செவிட்டு அப்பா கேரக்டர் மாதிரி கொஞ்சம் கூட ஏத்தம் இறக்கம் இல்லாம சொல்லி நாங்கள் போட இருந்த சமூக நாடகத்தை காமடி நாடகமாக ஆக்க விதை போட்டுட்டார் ஆடிட்டர்.மனப்பாடம் செய்யலாம் தப்பில்லை அதுக்காக இப்படியா?

நாடகத்தின் கதை என்னவோ இது தான். அதாவது ஒரு சேட்டுகிட்ட ஒருத்தன் வட்டிக்கு பணம் வாங்கி அவஸ்தை படுவது போலவும், சேட்டு ஒரு தமிழனை மிரட்ட இன்னுமொரு தமிழனான பிளேடு பக்கிரியை வைத்து மிரட்டுவதாகவும் இப்படியாக போகும் கதை!

ஆடிட்டர் பண்ணின காரியத்துக்கு டைரக்டர் கிட்ட எனக்கும் பக்கிரிக்கும் திட்டு விழுகுது. அடுத்தது என் சீன். எப்படி ஒன்னாம் வகுப்பு போக மாட்டேன்னு அடம் பிடிச்சனோ அப்படி கெஞ்ச ஆரம்பிச்சுட்டேன். அடுத்த சீனுக்கு வாரேன்ன்னு. ஒரு வழியா மேடைக்கு அழைத்து வரப்பட்டேன்ன்னு சொல்லுவதை விட மனோகரா மாதிரி இழுத்து வரப்பட்டேன். இப்போ உதறல் இன்னும் ஜாஸ்தியா போச்சு. என்னிடம் கடன் வாங்கியவராக நடிப்பவர் டைரக்டர் தான். சீன் படி நான் கோவமா இருக்கனும், என்னை பார்த்து கடன் வாங்கிய கேரக்டர் நடுங்கனும். ஆனா நடந்தது வேற!

நான் கட கடன்னு நடுங்கிகிட்டு இருக்கேன். முதம் முதலா பைக் ஓட்டிட்டு கீழே இறங்கியதும் கால் ரெண்டும் நடுங்குமே அது மாதிரி நடுங்க டைரக்டர் கடுப்பாகிட்டார். என்ன நெனச்சாரோ தெரியலை மேடைன்னு பார்க்காம திட்ட ஆரம்பிச்சுட்டார்!

கடன் வாங்கிய கேரக்டரில் இருந்த டைரக்டர்: "என்னய்யா எத்தனை தடவ சொன்னேன் நடுங்காதே நடுங்காதே, அதுவும் என்னை பார்த்தா ஏன் இப்படி நடுங்கி சாகறே"

சேட்டாகிய நான்: "நானாவா நடுங்கறேன், உங்களை பார்த்தவுடன் தானா உதறல் எடுக்குது"

நாங்கள் இருவரும் நாடக மேடை என்பதை மறந்து (நாடகம் தான் ஊத்திகிச்சேன்ற நினைப்பிலே) தனிப்பட்ட முறையில் பேசிகிட்டோம் மைக்கில்:-))

அப்போது ஒரு பார்வையாளர் பகுதியில் இருந்து ஒரு கிரீன் தமிழன் எழுந்து " சபாஷ், முதன் முறையா ஒரு சேட்டு தமிழன் கிட்ட கடன் வாங்கிட்டு பயப்படராண்டா"ன்னு குரல் கொடுக்க டைரக்டர் தலையிலே பல்பு எரிய, நான் அப்பவும் டியூப் லைட்டாகவே இருக்க டயலாக் எல்லாம் மாறிடுச்சு!

டைரக்டர்: யோவ் சேட்டு என் கிட்ட வாங்கின பணத்துக்கு வட்டியும் கட்டலை அசலும் தரலை, ஆனா என்ன பார்த்தா மட்டும் கை கால் உதறுதா நடிக்கிறயா?

அப்பவும் எனக்கு கதை மாறியது எல்லாம் தெரியாது!

நான்: இல்ல ஜி, நெசமாவே கை கால் நடுங்குது நடிக்கலை!

டைரக்டர்: ஒரு சேட்டு தமிழனை பார்த்து ஜி ன்னு சொல்ல வச்சேன் பாருய்யா அதான் தமிழன், சரி நீ வாங்கின பணம் எப்ப தருவ!

நான்: என்ன (வசனத்தை) மாத்தி மாத்தி பேசறீங்க ஜி! (மனசுகுள்ள அய்யய்ய டைரக்டரும் உளற ஆரம்பிச்சுட்டார், என் வசனத்தை பேசறார்ன்னு நெனச்சு கிட்டேன்.

டைரக்டர்: நானா சேட்டு மாத்தி மாத்தி பேசறேன், நீ தான்யா, இப்ப தாரேன் அப்ப தாரேன்ன்னு மாத்தி மாத்தி பேசற, இரு உன்னை நல்லா கவனிக்க ஒரு பார்ட்டி வருது.

ஆக்சுவலி அந்த வசனம் நான் பேசனும், அப்போ பிளேடு பக்கிரி வந்து குதிக்கனும், ஆனா பிளேடு பக்கிரி வந்து குதிக்காமல் யாரோ தள்ளி விட வந்து விழுந்தார். கூட்டத்தில் ஒரே சிரிப்பு, செம காமடி டிராமாவா ஆகிடுச்சு! அப்போ பக்கிரிக்கு எழுதி கொடுத்த வசனம் "பேமானி, கய்த" இப்படியாக போகும்.

ஆனா வந்து விழுந்த பக்கிரிய பார்த்தா ரவுடி மாதிரி இல்ல முகம் முழுக்க ஒழுகிய அத்தரை துடைத்து துடைத்து பேய் மாதிரி இருந்தார்.

எனக்கு அப்பவும் நடுக்கம் நிற்கலை. டைரக்டர் பக்கிரிகிட்ட முனு முனுன்னு "வசனம் பேசுங்க" ன்னு சொல்ல பக்கிரி "பே பே பே"ன்னு சொல்றாரெ தவிர "பேமானி"ன்னு முழுசா சொல்ல மாட்டேன்ன்னு அடம் பிடிக்கிறார்.

இப்பவும் கூட்டத்தில் சிரிப்பு. எனக்கு பயத்திலும் மானம் போகுது. அப்பவும் டைரக்டர் சமாளிச்சு கிட்டே "பத்தியா சேட்டு உன்னை மனுஷலால பயமுறுத்த முடியாதுன்னு தெரியும் அதான் புளிய மரத்துல இருந்து பேயை கூட்டி கிட்டு வந்துட்டேன்"ன்னு என்னன்னவோ சொல்ரார். எனக்கும் பக்கிரிக்கும் என்ன நடக்குதுன்னே புரியலை.

அப்போ டைரக்டர் "சரிய்யா சேட்டு நீ ரொம்ப நாளா தமிழ் நாட்டுல இருந்து ஹிந்திய மறந்து போயிருப்பே, அதனால "மேரா நாம் ரங்லால்"ன்னு சரியா சொல்லு, பின்ன நான் வட்டியும் அசலும் தள்ளுபடி செஞ்சுடறேன்"ன்னு சொல்ல நான் கடுப்பாகிட்டேன். என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல கூட்டமோ சிரிச்சு கிட்டே இருக்கு...நடுக்கமோ இன்னும் நிக்கலை.. கடுப்பாகி சொன்னேன் " மேரா நாமம் ரங்கநாதரோடது" .. கூட்டம் இப்படியா சிரிக்க பின்ன என் சீன் முடிஞ்சு உள்ளே போன பின்ன தான் கதை மாறிய விஷயம் தெரியும்.

ஒரு வழியா நாடகம் முடிஞ்சு, தலைவர் ரொம்ப பாராட்டினார் மைக்கிலே!

".... நாடகத்தில் "கோபுரங்கள் சாய்வதில்லை" படத்தின் வினு சக்கரவர்த்தியின் நகைச்சுவை சாயல் தெரிஞ்சாலும் இது நல்ல காமடியா இருந்துச்சு, அதிலும் அந்த படத்தில் வரும் ஈட்டிகாரனை விட தொல்ஸின் நடுக்கம் அதிகமா "நேச்சுரலா" இருந்துச்சு!(அடபாவமே நேச்சுரல் தானே) ...." இப்படியாக பேசி கிட்டு இருந்தார்.

நான் மட்டும் பேட்டி கொடுத்து கொண்டிருந்தேன்)

எப்படிங்க தொல்ஸ் இப்படியெல்லாம், சரி அடுத்த நிகழ்ச்சியில என்ன கேரக்டர்ல நடிக்க போறீங்கன்னு கேட்டவங்களுக்கு “இமயமலை சாமியார் குளிரில் நடுங்கும் கேரக்டர் பண்றேன்”ன்னு சொல்லிகிட்டு இருந்தேன். எங்க டைரக்டர் என்னை சுடுவது போல பார்த்து கொண்டிருந்தார்!

இப்படியாக ஜாலியா இருந்த அபுதாபி தமிழ் சங்கத்தின் எல்லா உருப்பினர்களுக்குமே தலைவர் ஆகிடனும்னு ஆசை வந்து பின்ன “ஆனைக்கு அல்வா வாங்கிய வகையில்” செலவு கணக்கு எல்லாம் ஆகி ஒரு வழியா முடிஞ்சு போச்சு எல்லாம். பின்ன எல்லாரும் 1 வருஷத்துக்கு அமைதியா அவங்க அவங்க வேலையை பார்க்க ஆரம்பிச்சுட்டோம். நானும் அதன் பின் 2000 வாக்கிலே துபாய் வந்துட்டேன்.

December 26, 2007

பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா!!!!



நான் அயல் நாட்டில் என் தாய் வீடாக நினைத்த அபுதாபியை விட்டு துபாய் வந்து 7 வருடம் ஆனாலும் என் நண்பர்கள் அங்கே அதிகம். இப்பவும் நான் அங்கே ஒரு தமிழ் நிகழ்ச்சியெனில் ஓடிவிடுவேன். நான் போன பதிவில் போட்ட சங்கம் இது இல்லை! அது போன கதை! இது என் நண்பர்களால் 5 வருடம் முன் ஆரம்பிக்கப்பட்ட புது சங்கம்!! பாரதி-நட்புக்காக!!! இதுதான் அந்த சங்கத்தின் பெயர்!! இதன் முழு விபரங்களும் அடுத்த அடுத்த பதிவுகளிள்!

ஆஹா நாம் வெள்ளிகிழமை அபுதாபி போகிறோம்! சரியா!!!!

அபிஅப்பாவும் அபுதாபியும்!!!

அபுதாபி எனக்கு கிட்டதட்ட தாய் வீடு மாதிரி. துபாய் எனக்கு புகுந்த வீடு மாதிரி. துபாயில் இருந்து எப்பவாவது அபுதாபி செல்லும் போது ஜெபல்அலி தாண்டியதுமே எனக்குள் ஒரு மின்சாரம் வந்துவிடும். சாலையின் நடுவே உயர்ந்து நிற்கும் விளக்கு கம்பங்கள் அபுதாபி எல்லை ஆரம்பித்ததை சொல்லிவிடும். அதிலிருந்தே பசுமை ஆரம்பமாகிவிடும்.நான் வரும் வெள்ளி கிழமை அபுதாபி செல்ல இருப்பதால் அந்த சில நினைவுகள் இங்கே!

அபுதாமி தமிழ் சங்கம் இருக்கின்றதே தப்பு தப்பு... இருந்ததே ....ஆகா என் வாழ்க்கையின் சந்தோஷ நாட்கள் அவை. கண்டிப்பாய் 15 நாட்களுக்கு ஒரு முறை ஏதாவது நிகழ்ச்சி, ஈத், பொங்கல், தீபாவளி, சுதந்திர தினம் என எதையும் விட்டு வைக்க மாட்டோம்.

அதிலும் குறிப்பாக சங்கத்துக்கு உள்ளேயே பல குழுவாக இருப்போம் கிட்டதட்ட தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி. ஆனாலும் தேர்தல் என வந்துவிட்டால் ஸாரி நிகழ்சி என வந்து விட்டால் ஒத்துமையா நின்னு நிகழ்ச்சியை ஜெயித்து விட்டு பின்ன சண்டை போட்டுப்போம். நாங்க ஒரு எட்டு பேர் அதிலே தனியாக "மன மகிழ் மன்றம்" என சொல்லி கொண்டு அடித்த லூட்டி அந்த தமிழ் சங்கத்திலே பிரமாதம். ஒருமுறை அப்படித்தான் மனமகிழ் மன்றம் தனியாக ஒரு நாடகம் போட்டுவிடுவது என தமிழ் சங்கத்திலே சொல்லி எங்களுக்கு தனியாக நேரம் வாங்கி விட்டோம். ஹில்டன் ஹோட்டல் மேல் மாடியில் நிகழ்ச்சி. சரி யார் கதை, யார் டைரக்ஷன், டயலாக் யார் என முடிவாகும் முன்னமே, எது எப்படியாகினும் நாம எல்லோருமே ஒரு ஒரு கேரக்டரில் நடித்து விட வேண்டும் என முடிவாகியது. எங்க அந்த குழுவிலே ஒரு நண்பர் சி.ஏ. சிங்கிள் அட்டெம்ப்டில் பாஸ் பண்ணினவர். அவர் மாத்திரம் ஒத்துக்க மாட்டேன்ன்னு சொல்றார் நடிக்க. எங்க கதைப்படி ஆரம்ப சீன் அவர் தான். கோவில் குருக்களாக வந்து (மணியடிச்சுகிட்டே வந்து) நன்னா இருங்கோ, ஷேமமா இருங்கோ, இந்த உலகமே சுபிட்ஷமா வையிடா ஆண்டவா(அப்போது மணியடிப்பதை நிறுத்தி விடனும்) .... இது தான் முதல் சீன். பின்ன அவர் வர வேண்டாம். இப்படி எல்லாம் அவருக்காக ஒன்பதே வார்த்தைகளிள் டயலாக் எழுதினேன். கதை வேற ஒரு நண்பர். நான் வசனம்.

எனக்கு என்னா கேரக்டர் தெரியுமா. சேட்ஜி! இன்னும் ஒரு நண்பருக்கு பிளேடு பக்கிரி கேரக்டர். காஸ்ட்டியூம்ஸ் எல்லாம் மனமகிழ் மன்ற மகளிர் அணி தயார் பண்ணியாச்சு. எனக்கு தான் சேட்டு குல்லாய் கிடைக்காமல் காயல்பட்டிணம் பாய் ஒருத்தவரின் ஜரிகை தொப்பி வாங்கி அட்ஜெஸ்ட் பண்ணியாச்சு.

நிகழ்ச்சி நாளும் வந்தது.மத்த மத்த குழுவிலும் சின்னதா ஸ்கிட், பாட்டு, வீணை வாசிப்பு, இப்படியாக நடந்து கொண்டிருந்தது. எங்க குழுவின் நாடகம் கடைசி நிகழ்ச்சி. பலத்த எதிர்பார்ப்பு எல்லோரிடமும். பிளேடு பக்கிரிக்கு முகத்திலே கருப்பு பரு இருக்கனும் என்கிற சர்வதேச விதியின் படி ஒரு அத்தர் உருண்டை வாங்கி கன்னத்துக்கு மேலே ஒட்டியாச்சு. அப்பல்லாம் பக்கிரி தைரியமாதான் இருந்தார். எனக்கு அது வரை மேக்கப் போடலை. நானும் தைரியமா இருப்பது போல "நடித்து" கொண்டிருந்தேன். தைரியமா இருப்பது போல நடிக்கிறோமே மேடையிலா நடிக்க தெரியாம போய்டும்ன்னு என்னை நானே தேத்திகிட்டேன். நாங்களாவது பரவாயில்லை, முதல் சீன்ல வரும் ஆடிட்டர் நண்பர் ரிகர்சலுக்கு கூட வரலை. ஏதோ கம்பெனில ஆடிட்டிங்ன்னு சொல்லிட்டு வரமா டிமிக்கி கொடுத்துட்டார். கதவை திறந்து பார்த்தா ஒரே விசில் சத்தம் மத்த நிகழ்ச்சிகளுக்கு. எங்கள் நாடகத்தின் டைரக்டரும்(கதை எழுதியவர்) முக்கிய வில்லன் பாத்திரத்தில் நடிக்க இருந்தவருமான நண்பர் எங்களுக்கு கடைசி நேர டிப்ஸ் எடுத்து கிட்டு இருந்தார்.

"தொல்ஸ் நீங்க சேட்ஜி இல்லியா அதனால தமிழ் தப்பு தப்பா பேசனும்"

"ஜி, நான் தமிழ் எழுதும் போது தான் தப்பா எழுதுவேன், பேசும் போது அட்சர சுத்தமா பேசுவேனே, வேணும்ன்னா ஹிந்தி தப்பு தப்பா பேசவா, கதையையை கொஞ்சம் மாத்திப்போமா"

"யோவ், சேட்டு ஹிந்தி தப்பா பேசுவானா, கதைய காமடியா மாத்தாதே"ன்னு எரிஞ்சு விழுந்தார்.

சரின்னு பிளேடு பக்கிரி பக்கமா திரும்பினார். பக்கிரியின் பயத்தின் காரணமாக முகத்தில் வியர்வை கொட்டுது அதிலே அத்தர் உருகி மூஞ்சில கோடா வழியுது. ரூம் முழுக்க அத்தர் வாசனை.

"யோவ் யோவ் என்னய்யா, உன் கேரக்டர் என்ன, பிளேடு போட்டு ரத்த வாடையா இருக்கனும்யா, இப்படி நாகூர் கந்தூரிக்கு போய் வந்த மாதிரி இருக்கியே வாசமா? சரி கருப்பு பரு எங்கே?"

"ஜி, அதான் இப்படி வழியுது"

"ஆஹா, அதை தொடைங்க"

சர்ன்னு தொடைச்சா முகமே கருப்பா விகாரமா போய் பிளேடு பக்கிரி அரிவாள் பக்கிரியா மாறிட்டார்.

எனக்கு மேக்கப் ஆரம்பிச்சாச்சு, அட்டகாசமா ஜிப்பா, குர்தா மேல் கோட், ஜரிகை தொப்பி எல்லாம் போட்டு, எல்லாத்தையு பார்த்துட்டு மகளிர் அணியினர் என்னவோ குறையுதேன்னு சொல்லி அதையும் கண்டு பிடிச்சு என் சின்ன நெத்தியிலே தெலுகு பட வில்லன் மாதிரி பெரிய நீட்டு பொட்டா சிகப்பு கலர் ஆஷா சாந்து வச்சி அழகு பார்த்துட்டு சிரிச்சு கிட்டே போயிட்டாங்க. எனக்கோ நேரம் ஆக ஆக லைட்டா கை உதறல் ஆரம்பிச்சாச்சு. அப்ப பார்த்து தமிழ் சங்க தலைவர் உள்ளே வந்து பார்த்துட்டு "ஹய், சஸ்பென்ஸா வச்சிருக்கீங்களா கதையை நான் கண்டு பிடிச்சுட்டேனே, காமடி டிராமாவா?"ன்னு கேட்டார்.

நான் "அய்யோ, எதை வச்சு காமடின்னு முடிவு பண்ணீங்க?"ன்னு கேட்டேன். அதுக்கு அவர் "நீங்க இன்னும் உங்க மேக்கப்பை கண்ணாடில பார்க்கலையா?"ன்னு கேட்டுட்டு போயிட்டார். எனக்கு உதறல் அதிகமாயிடுச்சு. ஓடிப்போய் கண்ணாடியிலே பார்த்தேன்!

இதை படித்து கொண்டிருப்பவர்களே. நீங்க வாழ்க்கையிலே அப்படி ஒரு சேட்டை பார்த்திருக்கவே முடியாது. எனக்கு சேட்ஜி வேஷம் கொடுத்த டைரக்டரின் குற்றமா, கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம ஒத்துகிட்ட என் மீது குற்றமான்னு தெரியலை. சும்மா டைபாய்டு வந்த சேட்டு மாதிரி ஒரு தோற்றம். எந்த சேட்டை பார்த்தாலும் குலோப்ஜாமூன் மாதிரி இருப்பான். என்னைய பார்த்தா எனக்கு ஜிப்பா போட்ட மாதிரி இல்ல ஜிப்பாவுக்கு என்னை போட்ட மாதிரி இருக்கு. நாமம் பார்த்தா சேட்டு போடுவது போல இல்லை ரங்கநாதர் மாதிரி இருக்கு. ஆக ஒல்லியிலே(ஆக மொத்தத்திலே இல்லை) பாம்பு புத்துக்கு படைக்க இருக்கும் சேவல் கோழிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி கதம்ப பூவை கழுத்திலே சுத்தின மாதிரி இருக்கு.

என் உதறல் என் கண்ட்ரோலை தாண்டி போக ஆரம்பிச்சுது. சீக்கிரம் நாடகம் ஆரம்பிக்க போகுது.மீதி நாளைக்கு!!!

திஸ்கி: பதிவு பெருசா ஆகிடுச்சு ஒரு காரணம்,அடுத்து முதுகுவலி திரும்பவும் ஸ்டார்ட் மீசிக்....இப்போ இன்னிக்கு முதல்....

திஸ்கி 2: பிரகாஷ்ராஜ் மட்டும் தான் எடுக்கனுமா "அபியும் அபிஅப்பாவும்"ன்னு படம் நாங்க போட மாட்டோமா "அபிஅப்பாவும் அபுதாபியும்"ன்னு:-))

December 25, 2007

துபாயில் இளையராஜா!!!

அண்ணாச்சி இரு வாரம் முன்ன ஒரு பதிவு போட்டிருந்தாரு இளையராசாவின் துபாய் நிகழ்ச்சி பத்தி. இதுக்கும் மேல விரலை வச்சிகிட்டு சும்மா இருந்தா எனக்கு ஒரு பதிவு நஷ்டமாகிவிடும். இது சம்மந்தமா யாராவது என்னை திட்டனும்ன்னு நெனச்சா குனியமுத்தூர் கோபால்சாமி என்பவரை திட்டவும். அவரை தான் எனக்கு பதிலா திட்டு வாங்க நியமிச்சு இருக்கேன் புதுசா.

நான்கு வருடம் முன்ன நடந்த A R ரஹ்மான் நிகழ்ச்சியோட இதை ஒப்பிட்டு பார்த்தா இது ஊத்திகிச்சுன்னு தான் சொல்வேன். லொடுக்குக்கு கிடைச்ச மாதிரி 1000 திர்காம் டிக்கெட்டை என் சட்டை பையில் எந்த ஒரு ஸ்பான்சரும் திணிக்காத காரணத்தால் போக வேண்டாம் என முடிவெடுத்து படுத்து தூங்கிட்டேன். பின்ன மாலை 5.30க்கு திடீர்ன்னு நன்பர்கள் 10 பேர் சேர்ந்து "போனாத்தான் என்ன?, நம்ம ராசா நிகழ்சியாச்சே"ன்னு சப்போர்ட் பண்ணவே திடுதிப்புன்னு அங்க போய் டிக்கெட் வாங்கிக்கலாம் என கிளம்பியாச்சு. எங்கே டிக்கெட் விற்பனை என தெரியவில்லை. 10 அடி உயர கேட்டுக்கு முன்னே கையிலே டிக்கெட் வச்சிருந்தவங்களை கூட உள்ளே விடாமல் ரப்சர் பண்ணிகிட்டு இருந்தாங்க. உள் பக்கம் இருந்த செக்யூரிட்டிகள் " தயவு செய்து கேட்டின் மேலே ஏறி குதிச்சிடாதீங்க, சீக்கிரம் திறந்து விடுவோம்"ன்னு நல்ல ஐடியா கொடுக்கவே மொத்தம் 5 நிமிடத்தில் 500 பேரும் உள்ளே குதிச்சாச்சு. மும்பை எலக்ட்ரிக் ரயிலில் கூட்டத்தோடு கூட்டமா ரயில் உள்ளே நுழைந்து வெளியே வருவது போல நானும் ஆட்டோமேட்டிக்கா உள்ள வந்தாச்சு. என் காலில் ஒரு செக்கியூரிட்டி தொப்பி தென்பட்டது. சும்மா டிக்கெட் வாங்காம உள்ளே வந்த கூட்டம் 50 திர்காம் வரிசையில் உட்காராமல் 6 அடி வேல் கம்பு தடுப்பு எல்லாம் அஞ்சு ஜார்ஜ் மாதிரி அனாயசமாக தாண்டி மெல்ல நகர்ந்து ஏற்கனவே காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களை புழு மாதிரி பார்த்து விட்டு 200 திர்காம் இடத்துக்கு முன்னேறி சென்றது.

அப்படியாக நான் போய் உட்கார்ந்த இடம் சரித்திரம் முக்கியம் வாய்ந்த இடம். பல ஜாம்பவான்களை விருமாண்டி மாதிரி ஒத்தை விரலால் அவுட் ஆக்கிய அம்பயர்கள் நிற்கும் இடம். பக்கத்தில் உட்காந்திருந்த ஒரு குடும்பஸ்தனிடம் மெதுவாக பேச்சு கொடுத்தேன்.."பாருங்க சார் அநியாயத்தை, டிக்கெட் வாங்காதவன் எல்லாம் முன்ன போய் கிட்டு இருக்கான், நாம தான் சிரிச்ச மூஞ்சா இருக்கோம்"ன்னு சொன்னதுதுக்கு என்னை மேலும் கீழுமா பார்த்து விட்டு "கலி காலம் சார்"ன்னு சொன்னார். மேடையின் நடுவே ஆண்மை குறைவு டாக்டர் மாதிரி கோட்டு போட்ட ஆசாமி யாருன்னு பார்த்தா அட வசந்தகுமார். இளையராசா சொதப்பினதுக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

குஸுப்புவும் அவங்க தம்பி ஜெயராமனும் நிகழ்சி தொகுப்பாளர்கள். இளைய ராஜா மேடைக்கு வரும் முன்ன ரொம்ப அலப்பரை பண்ணினாங்க. வந்தாரு ராசா, எல்லாரும் எதிபார்த்த மாதிரியே ஜனனி ஜனனி பாடினார். சும்மா சொல்ல கூடாது. ரகளை தான் அவர் குரல். அடுத்து அடுத்து பாடும் நிலா பாலு நல்லா பாடினார். அது போலவே நல்லா பேசினார். அசத்தினார். இத்தன வயசிலும் குரலில் இருந்த அதே பழைய கம்பீரம் குறையவேயில்லை.

ச்சீனி கம் பாட ஆரம்பிச்சார் பாலு சார். ஏகப்பட்ட கைதட்டல் பாலுசாருக்கு. கூட ஒரு பொண்ணு பாடிச்சுப்பா, ஸ்ரேயா கோஷல்ன்னு ஆஹா தலையை ஒரு சொடுக்கு சொடுக்கிகிட்டு, முகத்திலே வந்து விழும் முடியை தள்ளி தள்ளி விட்டுக்கிட்டு, அந்த தலைமுடி ரொம்பத்தான் டிஸ்ட்டர்ப் பண்ணிடுச்சு அந்த பொண்ணை! எண்ணை தடவி சீவி பின்னி பூவச்சிகிட்டு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். கேட்டா ஃபேஷனாமாம். அந்த பொண்ணு தலையை சொடுக்கி சொடுக்கி பாட ஆரம்பிக்கும் ஸ்டைல் எனக்கு மட்டுமல்ல இளையராசாவுக்கும் ரொம்ப பிடிச்சு போச்சுன்னு நெனைக்கிறேன். அதனால நான்கு தடவை திரும்ப திரும்ப பாட விட்டார். அப்ப பாலு சார் பிள்ளையாருக்கு வேண்டிகிட்டது போல 108 தடவை கொட்டாவி விட்டார். நானும் கூடவே விட்டேன். ஸ்ரேயா கோஷல் பாடும் போதல்லாம் ஒரு மூலையில் இருந்து மட்டும் காது கிழியும் அளவு விசில் சத்தம். அநேகமாக குசும்பனா இருக்கனுன்னு நெனைக்கிறேன்.

"சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா" பாடல் சிம்ப்ளி சூப்பர் ராஜா சாரே! மத்தபடி ஒரு கட்டத்துல "நான் ஆட போகிறேன்" என குஷுப்பு சொன்ன போது இளையராஜா மட்டுமல்ல மொத்த கூட்டமும் கொஞ்சம் ஆடித்தான் போனோம்.

எனக்கு பக்கத்திலே உட்காந்திருந்த குடும்பத்தில் மதியம் சுரைக்காய் கூட்டுன்னு நெனக்கிறேன். அந்த 5 வயசு பையனுக்கு ஒவ்வொறு பாட்டுக்கும் "இண்டர்வெல்" தேவைப்பட்டது. டாய்லெட் கூட்டி போய் போய் சலிச்சு போன அவங்க அப்பா "அதோ அந்த இடத்திலே போ இனிமே"ன்னு சொல்லி அவர் காண்பித்த இடம் நம்ம ரவி சாஸ்திரி குரளி வித்தை காட்டுபவன் போல குத்து கால் இட்டு குந்திகிட்டு ஒரு கையில் மைக்கையும் அடுத்த கையால மண்ணை தடவி தடவி ஜோசியம் சொல்லுவாரே அந்த இடம். அநேகமாக அடுத்த தடவை மண்ணை தடவி பார்த்து "மண்ணு ஈரப்பதமா, ஆனா கொஞ்சம் உப்பு ஜாஸ்தியா இருப்பதால் பந்து நல்லா சுழலும்"ன்னு எதுவாவது சொல்லுவார்.

கூட்டத்தில் தேமுதிக கொடிகள் பேனர்கள் அதிகமாகவும் திமுக கொடி பேனர் கொஞ்சமாகவும் இருந்தன. திமுக கொடிகளை கலைஞர் டிவி படம் எடுக்க லைட் போட்டா தேமுதிக பசங்க அங்க ஓடி வந்து போஸ் கொடுப்பதும் அந்த கொடியை பார்த்தது கலைஞர் டிவி காரங்க போகஸ் லைட்டை ஆஃப் செய்வதுமான கண்ணா மூச்சி விளையாட்டு நல்லா இருந்தது. இருந்தாலும் தேமுதிகவுக்கு பேராசை இத்தன கூடாது அவங்க தலைவரை போலவே.

என் பக்கத்துல இருந்த குடும்பத்தின் தலைவி தலைவனை பார்த்து "என்னங்க நிகழ்ச்சி அன்னிக்கு வந்திருக்கலாமே ரிகர்சலுக்கு கூட்டி கிட்டு வந்துட்டீங்களே நிகழ்ச்சி நாளைக்கா?ன்னு அப்பாவியா கேட்டாங்க! கிட்டதட்ட நிகழ்ச்சி பத்தின என் கருத்தும் இதுதான்.

சரின்னு கிளம்பி வந்துட்டேன். அடுத்த நாள் கோபியின் விரிவான பதிவு வந்திருந்தது. நான் முதன் முதலாக மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு ரயிலில் போகும் போது ஒரு பேப்பர் பேனா வச்சிகிட்டு நீடூர், வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், திருபாதிரிபுலியூர் என ஸ்டேஷன் பெயரை எழுதி கொண்டே போனது ஞாபகம் வந்தது கோபியின் பதிவை பார்த்த பின்!

December 16, 2007

எனக்கும் 100 சாத்தியமா?????

இதுவரை எனக்கு சாத்தியப்படாத விஷயம் இந்த 100 என்பது. அனேகமாக என் வாழ்க்கையின் முதல் 100 இதுவே. கணிதத்தில் கூட இதுவரை நான் 100 எடுத்தது கிடையாது. நான் சென்ற வருடம் டிசம்பர் 26 அன்று முதன் முதலில் "வணக்கம்" என டெஸ்ட் பதிவு போட்ட போது கூட நூறு பதிவெல்லாம் நமக்கு எங்கே என்று தான் நினைத்தேன். அதன் பிறகு யாராவது நூறாவது பதிவு என்று பதிவிட்டிருந்தால் உடனே ஓடிப்போய் என் பதிவை பார்ப்பேன். 28, 32 என்று தான் இருக்கும். திடீரென ஒரு நாள் பார்த்தா 50 பதிவு ஆகியிருந்தது. அட நாம கூட அரை சதம் வந்தாச்சேன்னு ஆச்சர்யம். அதன் பின்ன நூறு என்பதை பத்தியெல்லாம் கவலை படுவது எல்லாம் இல்லை.

20 நாள் முன்ன எதேர்ச்சையா பார்த்த போது 99 பதிவு ஆகியிருந்தது. மனசு ரெக்கை கட்டி பறக்க ஆரப்பிச்சுடுச்சு. எதுக்கும் இருக்கட்டும் என்று எண்ணி பார்த்த போது டிடாப்டில் இருந்தது எல்லாம் கணக்கில் வந்து 99 ஆகியிருந்தது. எல்லாத்தையும் கழிச்சுட்டு பார்த்தா 90 தான் வந்துச்சு. அப்ப ஆரம்பிச்ச ஸ்ட்ரெஸ் எனக்கு இந்த நிமிடம் வரை இருக்குது. நகரவே மாட்டங்குது. சரி எப்போதும் போல நமக்கு 100 என்பது எட்டாமலே போய்விடுமோன்னு ஆகிப்போச்சு.

எப்பவும் எனக்கு ஒரு கெட்ட பழக்கம். திடீர்ன்னு படம் வரைய ஆரம்பிப்பேன். ஜெக ஜோதியா ஓவியக்கலையில் பீக் வரை போயிட்டு திடீர்ன்னு டாட்டா காட்டிட்டு போட்டோ கிராபி பக்கம் போயிடுவேன். அதிலே ஒரு ஸ்டேஜ்க்கு வரும் முன்னமே மிருதங்கத்துக்கு தாவிடுவேன். சரி அதயாவது முழுசா முடிக்கலாம்ன்னு பார்த்தா அங்கிருந்து ஷெட்டில் விளையாட்டுக்கு ஓடிடுவேன். திடீர்ன்னு ஜேஸீஸ், ரோட்டரின்னு பிஸியாகிடுவேன். பின்ன கிளப் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன்.

அது போலத்தான் பிளாக்குவதும் ஆகும் என நினைத்தேன். ஆனா முழுசா செஞ்சுரி அடிச்சது எனக்கே ஆச்சர்யமா இருக்கு. இந்த ஒரு வருடத்தில் என் நண்பர்கள் எண்ணிக்கை சர்ன்னு உசந்துச்சு. ஏகப்பட்ட சகோதர, சகோதரிகள், அம்மாக்கள், நண்பர்கள் என என்னை அவங்க வீட்டு நபராகவே கருதும் அளவு நான் கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு பெருமையா இருக்கின்றது.

அது போல என எழுத்து பிழைகளையும் பொருத்து செல்லமா திட்டி, கோவமா திட்டி என்னை சரி பண்ண முயற்ச்சி பண்ணி தோத்து போன எல்லாருக்கும் சொல்லிக்கறேன் "மாப்பு மாப்பு மாப்பு". கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிகறேன். தப்பை சரி செய்யவே "வடிவேல்"ன்னு ஒரு பையன் வச்சிருந்தேன். மன்மதலீலை படத்திலே மழுங்க மழுங்க சேவ் செஞ்சுகிட்டு முதல் காட்சியில் வரும் கமலின் குமாஸ்தா படத்தின் கடைசி காட்சியில் பெரிய தாடியோட ஆவது மாதிரி ஆயிட்டான் நம்ம வடிவேல் பையன். ஒரு கட்டத்துல அவனால முடியாம "சார் நான் வெக்கேஷன் போறேன்"ன்னு போனவன் திரும்ப வந்தவுடன் பெரிய இடத்து ரெக்கமண்டேஷனோட எனக்கு கண்காணாத தூரத்துக்கு வேற பிராஜக்டுக்கு போயிட்டான். என் சாயலில் யாரையாவது பார்த்தா கூட அவனுக்கு மனசு பட படங்குதாம். கேள்வி பட்டேன். கூடிய சீக்கிரம் எழுத்து பிழை சரியாகிடும், முயற்சி பண்றேன். அதுவும் பாருங்க 90-99 பதிவு வரை ரொம்ப கொடுமை என் பதிவுகளிள் வந்த எழுத்து பிழை.

சாதாரனமாகவே எனக்கு சிரிக்க பேசித்தான், எழுதித்தான் பழக்கம். என்னையும் அறியாமல் யார் மனசாவது நோகும் படி நான் எழுதியிருந்தால் சத்தியமாக மன்னிக்க வேண்டுகிறேன். இந்த 90 முதல் 100 வது பதிவு வரைக்கும் இருந்த அந்த ஸ்ட்ரெஸ் இனி இருக்காது என நினைக்கிறேன். அதனால இனி பழைய அபிஅப்பாவை பார்க்கலாம் என சொல்லிக்கறேன்.

மேலும் ஒரு விஷயம்! நான் சமீப காலமாக சரி வர பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதில்லை என்னும் மனக்குறை எனக்கு ஏகப்பட்டது இருக்கு எனக்கு. காரணம் என் வேலை பளுதான். இரவு மட்டும் தான் தமிழ்மணம் பக்கம் வர முடிகிறது. ஆனால் இனி அந்த குறையும் இல்லாத அளவு நடந்து கொள்கிறேன்.

எனக்கு இந்த அளவுக்கு ஆதரவு தெரிவித்த தெரிவித்து கொண்டிருக்கிற என் தமிழ் மண சொந்தங்களுக்கும், தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள்!

December 12, 2007

பொங்கலுக்கு பின்னே காபி சாப்பிடுவது இப்படித்தான்!!!

பொங்கல் சாப்பிடுவது எப்படின்னா இங்க போய் பாருங்க, பின்ன இத படிக்கலாம்!!

ரெண்டு கவளம் உள்ளே இறக்கியதுமே சொர்கத்திலே இருக்கும் உணர்வு வந்துவிடும். அப்படியே ரிலாக்ஸ்டா தினமணியை புரட்டினால் "பாக். பற்றி லோக்.கில் விவாதம்" "ஆ.பி முதல்வர் ம.பி சென்றார்" "த.நா வில் மி.வா இருளிள் மூழ்கியது"ன்னு பழக்க பட்டவங்களுக்கு மட்டுமே புரியும் படியாக இருக்கும் செய்திகளை படிச்சு கிட்டே குறுக்கும் நெடுக்குமா போய் வந்து கிட்டு இருக்கும் ச்சீனாவை பார்க்காமலே பேப்பரில் கண்ணை ஓட்டிகிட்டே "ச்சீனா ரமாவுக்கு கல்யாணமாமே?"ன்னு கேட்டா அவன் "ஒத்த தெரு ரமாவா, ரெட்ட தெரு ரமாவா?"ன்னு பதிலுக்கு கேப்பான். அதுக்கு நாம் அவனுக்கே குழம்பும் விதத்தில் "ஒத்த தெருவுல ரெட்ட ஜடை போட்டு கிட்டு ஒத்த ரோஜா வச்சுகிட்டு முட்ட கண்ணா இருப்பாளே அவளை கேட்டேன்"ன்னு சொன்னா கடுப்பாகிடுவான். "உனக்கு வேற வேலையே இல்லியா வந்தா வந்த வேலைய பாரு"ன்னு சொல்லிட்டு போவான்.

அப்போ பொங்கல் கிட்டத்தட்ட கடைசி கவளம் வந்திருக்கும். ஆனா அந்த கடைசி கவளத்தை சாப்பிட கூடாது. காரணம் இருக்கு. பின்ன சொல்றேன். "ச்சீனா ஒரு பாத்திரத்துல கொஞ்சம் தண்ணி கொண்டா வெரலை கழுவிக்கிறேன், அப்படியே நம்ம ஹீரோயின கூட்டிகிட்டு வாடா"ன்னு சொல்லிட்டு சுற்றிலும் யாரும் இல்லாமையை உருதி செய்து கொண்டு விரலை சூப்பிட வேண்டியது தான்.

இப்ப தான் நம்ம ஹீரோயின் விஜயம். அதாங்க காளியாகுடி ஸ்பெஷல் ஃபில்டர் காபி!! முதல்ல இந்த தஞ்சாவூர் ஆளுங்களை பார்த்து மத்தவங்க பொறாமை படும் விஷயுமே பில்டர் காபில தான். அவங்க எல்லாம் நெனச்சு கிட்டு இருப்பாங்க தஞ்சாவூர் ஆளுங்க எல்லாம் பில்டர் காபி விஷயம் முத கொண்டு என்னா ஒத்துமைன்னு. ஆனா உள்ளுகுள்ள நடக்குற வெட்டு குத்து எங்களுக்கு தான் தெரியும். தஞ்சாவூர்ல இருந்து மாமா யாராவது வந்துட்டா போதும். பசங்க அவர் காது பட "டேய் தஞ்சாவூர்ல கோமள விலாஸ் காபிதான் நெம்ம பேமஸாம்டா, அந்த கன்றாவிய ஒரு தடவ குடிச்சேன். கழுத மூத்திரம் போல இருந்துச்சுடா பேசாம கோமண விலாஸ்ன்னு பேர் வச்சிருக்கலாம்"ன்னு வாருவானுங்க. அவரும் தஞ்சை குசும்புதானே! பதிலுக்கு "என்ன மாப்ள கழுத மூத்திர டேஸ்ட்டில QA/QC போல இருக்கே"ன்னு பதிலடி கொடுப்பாரு.இதே கும்பகோணம் ஆளுங்க வந்துட்டா “லெஷ்மி விலாஸ் பசும் பால் காபி கிளப்பாம்டா, அதுக்கு ஓனர் பஞ்சாமி அய்யராம்டா, ஹய்யோ ஹய்யோ அது பஞ்சாமி அய்யர் கடை காபி மாதிரியா இருக்கு பஞ்சாபி அய்யர் காபி மாதிரில்ல இருக்கு”ன்னு ரப்சர் பண்ணுவாங்க. அதவிடுங்க, நம்ம காளியாகுடி பில்டர் காபி பத்தி பார்ப்போம்.சாதாரனமா நீங்க பில்ட்டர் எந்த சைஸ்ல பார்த்திருபீங்க...ஒரு சான் அளவிலே தானே.

நம்ம காளியாகுடி பில்டர் எந்த சைஸ்ன்னு சரியா சொல்லனும்ன்னா, கல்யாண வீட்டுல் கல்யாண பொண்ணு கொஞ்சம் குள்ளமா இருந்தா மாப்பிள்ளைகிட்ட போய் பசங்க"என்னடா உனக்கு காளியாகுடி காபி பிடிக்கும் ஒத்துகறோம் அதுக்காக அந்த பில்டரையேவா கட்டிக்கனும்"ன்னு கிண்டலடிப்பாங்க. இப்ப புரிஞ்சுதா பில்டரின் சைஸ். ராத்திரி 9 மணிக்கு 3 கிலோ பீபரி (ஆக்சுவலி அது pure berry)ல கொஞ்சமா சிக்கரி கலந்து பில்டரின் மேல் அடுக்கில் கொட்டி லைட்டா அமுக்கி அதன் மேல் கொதிக்க கொதிக்க தண்ணீர் விட்டு காலையில் பார்த்தா கீழ் அடுக்கில் சூப்பரான டிக்காஷன் ரெடி! சுத்தமான பசும் பால் கொதிக்க வைத்து ஜீனி கம்மியா போட்டு இந்த டிக்காஷனை கலந்து ச்சீனா இதோ கொண்டு வர்ரான்னு நினைக்கிறேன். அவன் வரும் முன்னமே வாசனை வந்துடுச்சு. டபரா செட்ல தான் அதுவும் பித்தளை ஈயம் பூசினது தான். 4 இன்ச் தான் டம்ப்ளர் சைஸ். 4 மொடக்குக்கு தான் வரும் காபி. மேலே கொஞ்சம் நுரை அதை டபராவில் இருக்கும் சொச்ச காபியோடு கலந்து சூடா வாய் கிட்ட கொண்டு போய் வாயால உறுஞ்சும் முன்ன வாசனையை மூக்கால உறுஞ்சி அந்த தம்மாத்தூண்டு டம்ப்ளரை ரெண்டு கையாலும் பிடிச்சுகிட்டு முடிஞ்சா பாம்பாட்டி மாதிரி உக்காந்து கிட்டு ஒரு இழுப்பு இழுத்து பாருங்க "சொர்க்கம் மதுவிலே"ன்னு எழுதின கவிஞர் இப்படி செஞ்சிருந்தா மாத்தி எழுதியிருப்பார்.

இதுல நாம முக்கியமா கவனிக்க வேண்டியது சிலது இருக்கு. பொங்கல் நல்லா இருக்கேன்னு இன்னுமொரு பொங்கல் சாப்பிடக்கூடாது. 9 மணிக்கு மேல நெஞ்சை கரிக்கும். காபி நல்லா இருக்க்கேன்னு இன்னும் ஒன்னு வாங்கி சாப்பிட கூடாது செமத்தையா தூக்கம் வரும்.

இப்போ நாம சாப்பிட்ட பொங்கல்/காபி இது ரெண்டிலும் எது அதிக சுவைன்னு பாலமன் ஆப்பையாவை மனசுக்குள்ள இருத்தி பட்டிமன்றம் நடத்தனும். "நல்லா சொன்னாங்கய்யா ராசா தரப்புல காபி நல்லா இருந்துச்சுன்னு பாரதி சப்புகொட்டி சொன்னாலும் ராஜா புடிச்ச பாயிண்டே தனிதான்யா…ஆஹ இன்னிக்கு விஞ்சி நிற்பது பொங்கல்தான்யா”ன்னு தீர்ப்பு வந்துச்சுன்னா மனசுல டக்குன்னு அந்த கடைசி கவளம் பொங்கலை வாயில போட்டுகிட்டு வேட்டில விரலை தொடச்சிகிட்டு கிளம்பிடனும். தீர்ப்பு காபிக்கு வந்தா “ச்சீனா கொஞ்சம் டிக்காஷனை கொண்டா”’ன்னு கேட்டு வாங்கி வாயில ஊத்திகிட்டு கிளம்பிடனும். அதுக்கு பின்ன 2 மணி நேரத்துக்கு புகையிலை,வெத்தலை,சிகரட் போன்ற லாகிரி வஸ்துகளுக்கு நிச்சயம் விடுமுறை என்பது நிச்சயம்!!!

December 11, 2007

பொங்கல் சாப்பிடுவது எப்படி???

காலை நான்கு மணிக்கே பிரம்ம நேரத்தில் பொங்கல் சாப்பிட ஆயத்தமாகிவிட வேண்டும். ஐந்தேகால் வரை புரண்டு புரண்டு படுத்துகொண்டே சாப்பிட போகும் பொங்கலை பற்றிய நினைவில் சின்னதாய் கனவு காண வேண்டும். ஐந்தேகால் மணிக்கு எழுந்து முகம் மாத்திரம் கழுவி கொண்டு ..கவனிக்கவும் பல் விளக்க கூடாது, வாசலுக்கு வந்து கையை ரெண்டையும் மேலே தூக்கி சிம்ரன் மாதிரி நெட்டி முறித்து விட்டு நடையை கட்ட வேண்டியதுதான் காளியாகுடி ஹோட்டலை நோக்கி. நம்மோடு ரோட்டிலே வரும் நமக்கு தெரிந்த ஆசாமிகளிடம் "என்ன பொங்கலா?"ன்னு கேக்க கூடாது. விவகாரமா பதில் சொல்லுவானுங்க. எதுக்கு காலையிலேயே வாங்கி கட்டிக்கனும். விடிந்தும் விடியாத அந்த காலை நேரத்தில் சின்ன கடைத்தெரு வாழைப்பழ கடையில் ஒரு தினமணி வாங்கி, கும்பகோணம் வெத்தலை சுண்ணாம்பு வச்சி, பன்னீர் புகையிலை, நெய் சீவல் கொண்ட நேர்த்தியாக மடிக்கப்பட்ட பொட்டலத்தை தினமணியின் உள்ளே வைத்து மடக்கி கக்கத்தில் வைத்துக் கொண்டு "இன்னிக்கு என்ன புக் வந்திருக்கு?"ன்னு கேட்டு கடைக்காரன் "குங்குமம்"ன்னு சொன்னா "ஆனந்த விகடனை" வாங்கி சர்ன்னு மூக்கால ஒரு உருஞ்சு அந்த புது வாசனையை(நடுப்பக்கம் தவிர எந்த பக்கத்தை வேண்டுமானாலும் முகர்ந்து பார்க்கவும், இல்லாவிடில் பொங்கல் சாப்பிட போகும் மூட் போய் விட வாய்ப்பு இருக்கிறது) திரும்பவும் இப்போ காளியாகுடி நோக்கி பயணம்.

ரோட்டில் நடக்கும் நேரத்தைகூட வீணடிக்க கூடாது ஆமா அப்படியே ஆ.வியை பிரித்து சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போமை" மெதுவா படிச்சு கிட்டே நடக்கும் போது கால் எதேற்ச்சையா செருப்பை கழட்டும், விரல் தாவங்கட்டையில் டான்ஸ் ஆடும். அப்படின்னா நேஷனல் ஸ்கூல் சரஸ்வதி சிலை வந்தாச்சுன்னு அர்த்தம். அப்படியே கதை சுவாரஸ்யமா படிச்சு கிட்டு வரும் போது நாம் நம்மை அறியாமலே ரோட்டின் நடுவே வந்து கொண்டிருப்போம். அப்போது எவனாவது "வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா"ன்னு கேப்பான். அப்பதான் வாசல் கதவை திறந்து போட்டது ஞாபகம் வரும். அப்படியே நடந்தா இதோ வந்துடுச்சே காளியாகுடி!

அப்போ மணி ஐந்தரை ஆகியிருக்கும், அங்க பார்த்தா காளியாகுடி வாசலில் சென்னையில் இருந்து நாலரை மணிக்கு பஸ்டாண்டு வந்து சேர்ந்த திருவள்ளுவரில் வந்த ஏழரை ராமமூர்த்தியும், கோவை திருவள்ளுவர் கொண்டு வந்து விட்ட கமலா மாமியும் இன்ன பலரும், கொழுப்பு குறைய வாக்கிங் துரத்தி விடப்பட்ட ரிட்டையர்டு தாசில்தார் சுப்புரமணியன் சாரும் நெய் பொங்கலுக்காக விளக்காத பல்லோடு காத்து கிட்டு இருப்பாங்க. இந்த கும்பல் இருப்பதை எதிர்பார்த்தே முனுசிபல் ஸ்கூல் வாசல்லயே தினமணியை கொத்த தெரு அருவாளை பின் இடுப்பில் சொருகி இருப்பது போல சொருகி டி ஷர்ட்டால் மூடிவிடனும். ஆ.வியில் தலையை விட்டு கொண்டு எடுக்க கூடாது.

காளியாகுடியின் கொலாப்ஸ் கேட்டின் உள்ளே பூட்டிகிட்டு ச்சீனா பண்ணும் அலப்பறை தாங்கமுடியாது. மாஞ்சு மாஞ்சு சாம்பிராணி போடுவான். ஒரு வழியா கதவு திறக்கப்பட்ட உடனே "எங்கே நமக்கு பொங்கல் கிடைக்காதோ"ன்னு பாய்ந்து உள்ளே போகும் நபர்கள் கண்டிப்பாக பொண்டாட்டியை சரோஜினி ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு விட்டு விட்டு ராத்திரி தூக்கம் போன பசியில் இருப்பவர்கள் என சுலபமாக புரிஞ்சுக்கனும்.

உள்ளே போன பின் நேரா வாஷ் பேசின்(செராமிக் அல்ல சிமெண்ட்டால் கட்டப்பட்டது) பித்தளை பம்ப்பை திருகிகிட்டே முன்னே போய் ரசம் போன கண்ணாடியில் கீழே ARC விஸ்வநாதன் & கோ ன்னு கோணலா எழுதியிருப்பதை படித்து கொண்டே "ச்சீனா பல்பொடி எங்கே"ன்னு கேட்டு கொண்டே "ஞாயிறு ஷோ ரூம் உண்டு"ன்னு படிச்சு முடிக்கும் போது "காலிகட்" பல் பொடியை கையிலே திணிப்பான் ச்சீனா. வெத்தலை போட்டு வெந்த வாயிலே காலிகட் பல்பொடி பட்டவுடன் எரியுமே அதை ஆராய கூடாது அனுபவிக்கனும்.’’ஏண்டா ஆண்டவா என்னை இத்தன அழகா படச்சே”ன்னு  பின்ன வேஷ்டியால முகத்தை துடைத்து கொண்டே வந்து "இந்த தபாவும் பொம்பள புள்ளயா போச்சு, காப்பி சுமாராவே இருக்கட்டும்"ன்னு சொல்லிகிட்டு பிளாஸ்க்கை நீட்டும் கோயிஞ்சாமியை "கொஞ்சம் தள்ளுப்பா"ன்னு சொல்லிகிட்டே நாம அடுக்களை உள்ளே போயிடனும்.

கரி படிந்த சுவத்துல மஞ்சள் கலந்த சுண்ணாம்பு காளியாகுடியின் ஸ்தாபித வருஷம் 1938 அப்போ அடிச்சது. "தடுக்கு எங்கடா ச்சீனா"ன்னு கேட்டா "நீ நிக்கிறதே தடுக்கு மேல தான்னு எரிஞ்சு விழுவான். அத எல்லாம் கண்டுக்க பிடாது. நம்ம லட்சியம் பொங்கல் மட்டுமே. சம்மணம் போட்டு உக்காருவதை விட "ஃப்ரீயா விடு மாமே"ன்ற ஸ்டைலில் "தைலா"விலே பட்டு புடவை எடுக்க உக்காந்திருக்கும் பெண்களை போல ரிலாக்ஸ்டா உக்காந்து "ச்சீனா, நுனி இலை வேணாம், ஏடு எடுத்து போடுடா"ன்னு குரல் விட்டுகிட்டே "தினமணியை பிரிச்சு நம்ம வீட்டுல சோபாவுக்கு கீழே உக்காந்து கிட்டு படிப்பதை போல படிக்க தொடங்கும் போது " பத்தாள் இடம் உன் ஒருத்தனுக்கேவா"ன்னு ச்சீனா சொறிஞ்சுகிட்டே கொழுந்து வாழை இலை ஏடு போடுவான்.(மீல்ஸ் சாப்பிடதான் நுனி இலை வசதி. பொங்கலுக்கு ஏடு இலை தான் பெஸ்ட். நடுவே எந்த தடங்களும் இல்லாமல் பொங்கல் ஸ்கேட்டிங் விடும் நெய்யில்). ஈயம் பூசின பித்தளை டம்ளரில் தண்ணியோடு அதன் தலையில் நக்குன்னு வைப்பான். இலை ஏற்கனவே கழுவி இருக்கும் அதனால நாம கழுவ வேண்டாம்.

அடுத்து ச்சீனா கொண்டு வருவது கெட்டி சட்னி, கரண்டில அதை அவன் எடுக்கும் அழகே தனி, எடுத்து இலையில் ஓரத்தில் நச்சுன்னு ஒரு தட்டு. அரை உருண்டையா வந்து விழும். பின்ன போயிடுவான். நைசா அந்த சட்னியை எடுத்து நாக்கில் வைக்கும் போதே "காலிகட் பல்பொடியின் எரிச்சலுக்கு தேவாமிர்தமா இருக்கும். அப்போ நம்ம ஹீரோ "பொங்கல்" பற்றிய ஆவல் நம் வேஷ்டியில் ஜொல்லா வழியும். இதோ வந்தாச்சு பொங்கல். வெங்கல குண்டானில் கொட்டாங்குச்சி அகப்பை அது கைப்பிடி மூங்கி சிம்பு. பல வருஷமா அதே அகப்பை போல இருக்கு மோர்காரி அகப்பை மாதிரி அந்த கொட்டாங்குச்சி அப்படி ஒரு வழவழப்பாக இருக்கும். நெய்யோடு பொங்கலை அதில் அள்ளுவதும் தெரியாது அது இலையில் வந்து விழுவதும் தெரியாது. அப்படி ஒரு வாசம் நம்மை சுத்தியும் பரவும்.

பட்டிகாட்டான் முட்டாய் கடை பார்த்த மாதிரி இல்லாம புது பொண்டாட்டிய தொடுவது போல "ஐ லவ் யூ டா செல்லம்"ன்னு மெதுவா பொங்கல் குவியலின் பக்க வாட்டில் விரல் வைத்து கொஞ்சூண்டு இழுத்து, நெய்யிலே அது வழுக்கி கிட்டே வரும் அதை விரலால் எடுக்காமல் கெட்டி சட்னி பக்கமா "தள்ளி"கிட்டு போய் நடு விரலால கொஞ்சம் சட்னியை அதுக்கு ஜோடி சேர்த்து இப்போ மூணே விரல்களை பயன் படுத்தி நாக்கின் மேல் வைத்து ஆஹா ஆஹா ...எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ன்னு பாடிகிட்டே "ச்சீனா வர வர காளியாகுடி பொங்கல் முன்ன மாதிரி இல்லைடா"ன்னு சொல்லனும். அதுக்கு அவன் ஆமா 50 வருஷம் முன்னகூட உங்க தாத்தா இதே இடத்துல உக்காந்து கிட்டு எங்க தாத்தாகிட்ட இதையே தான் சொல்லியிருப்பார்ன்னு சொல்லுவான்.

பின்ன தங்கமணியை வசியம் செய்ய நினைப்பவர்கள் "ச்சீனா ஒரு பார்சேல்ல்ல்ல்"ன்னு குரல் விடலாம்.

குறிப்பு: சென்னையில் உள்ளவர்கள் இந்த பொங்கல் ருசி பார்க்க ஒரு நபருக்கு ஆகும் செலவு ரூபாய் 300!!

திஸ்கி: பதிவின் சைஸ் அதிகமா போனதால் அடுத்து குடிக்க இருக்கும் காபி நேயர்களின் விருப்பத்தை பொருத்து அடுத்த பதிவாக போடப்படும்.

December 6, 2007

டாக்டரம்மாவின் அமரிக்க விஜயம்!!!

எங்கள் பேமிலி டாக்டர்(பாசக்கார குடும்பத்தின்) திருமதி.டெல்ஃபின் விக்டோரியா அவர்கள், நமது இந்திய நடுவன் அரசின் பிரதிநிதியாக நாளை முதல் ஒருமாதகாலம் அமரிக்க விஜயம் செய்கிறார்.

அனேகமாக அணு ஆயுத ஒப்பந்தம் சம்மந்தமாக செல்வார் என நினைத்து நான் தொலை பேசிய போது "அதல்லாம் இல்லப்பா, வர வர நீ தெண்டுல்கர் மாதிரி ஆகிட்ட! அந்த கால கவாஸ்கர் மாதிரி 90 வந்த பின்னே 100 அடிக்க பயந்து கிட்டே பிட்ச்சிலே மாசக்கணக்கிலே பாய் போட்டு படுத்து கிடக்கே! மேட்டர் பஞ்சம்ன்னு பதிவு போடறே, அந்த ஒரே விஷயத்துக்காகவே நான் அமரிக்கா போறேன். வாழ்த்தி எப்படியும் ஒரு பதிவு போடுவ, பின்ன டாக்டரமா போன பிளைட்டிலே தமிழ் படம் போட்டாங்களாம்ன்னு ஒரு பதிவு போடுவே, நடு நடுவே கதிர் தம்பி பொறந்த நாள் வரும் 07/12/07 அன்று. அதுக்கு ஒரு பதிவு போடுவே! இப்படியா 100 வந்தாதான் நீ 101 வது பதிவிலிருந்து பழையபடி பதிவு போடுவ அதனாலத்தான் அமரிக்கா போகிறேன் ஒரு மாதத்துக்கு"ன்னு சொன்னாங்க!

அப்படில்லாம் இல்லிங்க மக்கா! நமக்கா மேட்டர் பஞ்சம்! வாரேன் வாரேன்! ஃப்ரஷ்ஷா! நேரம் இல்லீங்க! டிசம்பர் 2, அமீரக தேசிய தினம் கூட வேலைன்னா பார்த்துகோங்கப்பா!

ஆக, இது நெசமான வாழ்த்து பதிவுன்னு சபைல சொல்லிக்கறேன்! நல்ல படியா போயிட்டு துபாய் வழியா வாங்க டாக்டரம்மா!! வாழ்த்துக்கள்!

திஸ்கி: டாக்டரம்மாவின் அமரிக்க தொலைபேசி எண்,மற்றும் இடம் எல்லாம் "ரகசியம்"ன்னு சொல்லி என் கிட்ட சொல்லியிருக்காங்க என்பது உபரி செய்தி!!

November 29, 2007

"அதபெகொகு"ன்னா என்னா??????ஒரு கிசு கிசு!!!

வேலை பளு நிச்சயம் காரணம் இல்லை மேட்டர் பஞ்சத்துக்கு. அதுக்கும் மேல ஏதோ இருக்கு.மனசு ஒட்ட மாட்டங்குது எதிலேயும். பதிவு போடனும்ன்னு நெனச்சா தூக்கம் தூக்கமா வருது. தூங்க படுத்தா பதிவு போடனும் போல இருக்கு. ஏதாவது மேட்டர் சிக்குனாத்தானே! ஒன்னும் மாட்ட மாட்டங்குது. இதையெல்லாம் போக்க என்ன தான் வழி!

1. அய்யனார் ஒரு பதிவு சுரங்கம். அவர் ஒரு பதிவு போட்டா அவரால பத்து பேர் பொழப்பு நடத்தலாம். அப்படி ஒரு ஜீனியஸ் அவரு. எதிர் பதிவு, பின் பதிவு, சைடு பதிவு, அய்யனார் செய்வது நியாயமா? இப்படின்னு போட்டு தமிழ்மணத்துல ஜொலிக்கலாம். ஆனா அய்ஸ் இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல. அய்யனாருக்கு பஞ்சர் ஆச்சு அதனால குசும்பனுக்கு காத்து போச்சு! ஆக அய்யனாரை "பனோரமா" கொண்டு போய் குளிப்பாட்டினா பஞ்சம் போக வழி இருக்கு.பிதுங்கி பிதுங்கி பதிவு போடுவார். நாம அத வச்சி எதுனா பதிவு போடலாம். அடுத்து...

2. ஓசை செல்லா இருக்கவே இருக்காரு! முன்னல்லாம் ஓசை செல்லாவுக்கு ஒரு கேள்வின்னு பதிவு போடலைன்னா அவங்க ஒரு பதிவரே இல்லைன்னு சொல்லும் படி இருந்துச்சு, ஆனா இப்ப ஓசை இல்லாம இருக்காரு அவரும். கேள்வி கேட்டா பதிலே சொல்ல மாட்டேன்ன்னு அடம் பிடிக்கிறார். ஓசையோட வாங்க எங்க பஞ்சத்தை போக்க!

3. பொன்ஸ் எங்கன்னே தெரியல, வலைச்சரம் கூட இப்ப முத்து லெஷ்மிதான் நடத்துறாய்ங்க! பொண்ஸையாவது ஏமாத்தி வலைச்சரம் ஆசிரியரா ஆகி பதிவுன்னு ஒப்பேத்தலாம்ன்னு பார்த்தா அவங்க VRS வாங்கிட்டு முத்துலெஷ்மிகிட்ட குடுத்துட்டாங்க, முத்துலெஷ்மிய ஏமாத்த முடியாது. பதிவை படிச்சு பின்னூட்டம் போட்டாத்தான் வலைச்சரம் ஆசிரியர்ன்னு பிடிவாதமா இருக்காங்க. இது எந்த காலத்துல நடக்கும். ஆஹ இந்த முயற்சி வீண்.

4. ஜி டாக்குல இருக்கும் மெசேஜ்ஜை பதிவா போடலாம்ன்னு பார்த்தா வெட்டி, இளா எல்லாம் "எங்க பொழப்பை கெடுக்காதே"ன்னு கத்துவாங்க. இந்த ஐடியாவும் வீண்.

5.சரி குழந்தைகளுக்கு பாட்டி வடை சுட்ட கதை எழுதலாம்ன்னு பார்த்தா பவன்,நிலா,மாதினி,பொடியன்னு தூள் கிளப்பி சூடான இடுகைல துண்டு போட்டு வச்சுட்டாங்க, அதனால இந்த முயற்சி வேணாம்.போற போக்க பார்த்தா “அமரிக்க ஏகாதிபத்திய குடியுரிமை பெற்ற கல்பனா சாவ்லாவுக்கும், சுனிதா வில்லியம்சுக்கும் இந்தியா இத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?” என அசுரன் மாதிரி பதிவு போட்டாலும் போடுவாய்ங்க போல இருக்கு!!

6. இளையராஜா போல மாசத்துக்கு ரெண்டு பேர் இங்க வந்தாலாவது பதிவு ஏதாவது தேறும்ன்னு பார்த்தா கோபிதம்பி கோவிச்சுப்பான். அதனால கதிர் தம்பி மாதிரி குரங்கு குல்லா போட்டாகூட காது மட்டும் மூடாம பஸ் பஸ்ஸா ஏறி இறங்கினா ரெண்டு மூணு பதிவு தேற வாய்ப்பு இருக்கு.

7. வெட்டி,அம்பி,கைப்ஸ் எல்லாம் கைகட்டப்பட்டு பெரும் அவஸ்த்தையிலே இருப்பதால் இந்த கேப்பிலே நாம விளையாண்டாதான் உண்டுன்னு எனக்கு மனசிலே தோணுவதை எல்லாம் குசும்பன் போட்டு தாக்கிட்டு இருக்காரு. அதனால மனசிலே எதையும் நினைக்காமல் திடீர்ன்னு பதிவு போடுவது நல்ல வழின்னு படுது எனக்கு. அப்படி போட்டா மாசம் ரெண்டு பதிவாவது தேறும்.


8. குரங்கு ராதா என்னடான்னா ராயல்டி கேக்கறான். ஏதோ ஆயிரம் ஆயிரமா கொட்டுவது போல. வேணுமின்னா பாதி பின்னூட்டம் குடுக்கலாம். இல்லாட்டி "அதபெகொகு "ன்னு கிசு கிசு மாதிரி அவன் பெயரை வச்சு எழுதலாம். அதாங்க அம்பிகாவின் தங்கை பெயர் கொ ண்ட குரங்கு!


9. பெஸ்ட் ஐடியா! அண்ணாச்சி ஆசீப்பை உசுப்பேத்தி "வலைப்பதிவர் பட்டறை" துபாய்ல நடத்த வச்சி "பட்டரைக்கு இன்னும் 30 நாள், 29 நாள் ன்னு பட்டரை நடக்கும் வரை தினமும் ஒரு பதிவா போடலாம். இது எனக்கு என்னவோ சரியா படுது. துபாய் வலைப்பதிவர்களே திரண்டு வாங்க அண்ணாச்சிய பிடிப்போம். (பதிவு போட்டு) வாழ வழி செய்யுங்க அண்ணாச்சின்னு கேப்போம் வாங்க வாங்க!!

ஊதிய உயர்வு வேண்டி விண்ணப்பம்!!!

காலை எழுந்ததுமே "ஆஹா இன்னிக்கு வியாழக்கிழமையா"ன்னு ஒரு வித சந்தோஷமா இருந்துச்சு. வேலைக்கு போனதுமே ஒரு வித அசமஞ்சமா இருந்துச்சு. நேரம் நகரவேயில்லை. மாச கடைசி வேறயா, இன்னிக்குன்னு பார்த்து வியாழகிழமை வந்துடுச்சேன்னு சலிச்சு கிட்டே எதுக்கும் சம்பளம் கிரெடிட் ஆகிட்டுதான்ன்னு 3138888 க்கு போன் பண்ணினேன். "your account balance is _____ in credit, to repeate your balance press 1"ன்னு கம்பியூட்டர் பெண் கிளி சொன்னுச்சு. சரி எப்படியும் இன்னிக்கு கிரெடிட் ஆகிடும்ன்னு கொஞ்ச நேரம் கழித்து போன் பண்ணினேன் அப்பவும் அதே பதில் தான். முதல் முறை செல்லமாக சொன்ன அந்த பெண் கிளி என்னுடைய 18வது போனில் கர கர குரலில் சொன்னதையும் நான் பொருட்படுத்தாமல் கஜினி முகமதுவாக இருந்தேன். கிட்டத்தட்ட 32 வது போனில் "நாதாறி என்னய மத்தவங்களுக்கும் பதில் சொல்ல வுடுடா...கர்...தூஊஊஊஉ"ன்னு சொல்லவே, கேபின் சாத்தியிருப்பதை உருதி செய்து கொண்டு முகத்தை துடைத்து கொண்டு போனில் மொக்கை போடலாம் யாருக்காவதுன்னு நெனச்சுகிட்டு குசும்பனுக்கு போன் பண்ணினேன். "உங்க அக்கவுண்ட் பேலன்ஸ் மைனஸ் 3 திர்காம், தாங்கள் பேங்க் கம்பியூட்டர் பெண்கிளியிடம் சத்தெடுத்ததை போல என்னிடம் வம்பு பண்ணினா வெட்டிடுவேன் தங்கள் அழைப்புக்கு நன்றி"ன்னு முதல்ல இங்கிலீஷ்லயும் அதையே அரபியிலயும் சொல்லிடுச்சு.

சரி நாம் இதுக்கு பழிக்கு பழி வாங்கியே தீரனும்ன்னு நெனச்சு கிட்டு இருக்கும் போதே ஒரு தமிழ் நண்பன் லொஜிஸ்டிக் இஞினியர் வந்தான். " என்னய்யா டல்லா இருக்க வியாழக்கிழமையும் அதுவுமா...சும்மாதான இருக்க எனக்கு ஒரு லெட்டர் டைப் பண்ணி குடு, நான் இன்னிக்கு ஹெட் ஆபீஸ் போறேன். அங்க குடுக்கனும்"ன்னு சொன்னான். "என்ன லெட்டர்?'ன்னு கேட்டேன். "சேலரி இண்கிரி மெண்ட் லெட்டர் தான்! நான் இந்த கம்பெனில கடுமையா உழைக்கிறத எல்லாம் விலா வாரியா சொல்லி அதனால கூடிய சீக்கிரம் இன்கிரிமெண்ட் கொடுக்க சொல்லி எழுதி குடுய்யா மீதி எது எது சேர்க்கனுமே சேர்த்துக்கோ. அதான் பதிவெல்லாம் போடுறியே இட்டு கட்டி எழுது, அந்த ஒரு லெட்டரிலே என வாழ்க்கையில் ஒரு திருப்பம் வரணும்"ன்னு சொன்னான். என் கோவத்தை கொஞ்சம் கூட காட்டிக்காம "அடிச்சு வைக்கிறேன் ஹெட்டாபீஸ் போகும் போது வாங்கிட்டு போ"ன்னு சொல்லிட்டு லெட்டர் அடிக்க ஆரம்பிச்சேன்!



29/11/07
துபாய்

ஊதிய உயர்வு வேண்டி விண்ணப்பம்

அனுப்புனர்:

(*********)
ஆல் இன் ஆல் அழகுராஜா,
*********
*********

பெறுநர்:

உயர் திரு.**********,
*********
*********
********

உயர் திரு அய்யா,

பொருள்: ஊதிய உயர்வு கேட்டு விண்ணப்பம்

*********

மேற்படி நான் தங்கள் நிர்வாகத்தில் கடந்த ஆறு வருடங்களாக மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து வருவது சமூகம் தங்களுக்கு தெரிந்ததே.

தங்கள் கார் ஒருமுறை மணலில் சிக்கிய போது நான் பின்பக்கமிருந்து 10 பேரோடு சேர்ந்து நம்ம வடிவேலு காமடி மாதிரி "தள்ளு தள்ளு தள்ளு"ன்னு கூவிகிட்டே தள்ளி விட்டதையோ கார் கிளம்பிய பின் தாங்கள் மொத்த கும்பலையும் பார்த்து "நன்றி"ன்னு சொன்ன போது அது எனக்கு மட்டுமேயான தனிப்பட்ட நன்றி என நான் நினைத்து பெருமை பட்டு கொண்டதையோ எல்லாம் உங்களுக்கு ஞாபகப்படுத்தி ஊதிய உயர்வு கேட்கப்போவதில்லை.அந்த கார் மணலில் சர்வ சாதாரனமாக போகும் கார் என்பதோ, நான் கார் தள்ள உதவிக்கு கூப்பிட்ட பத்து பேரும் கிரீஸ் கையோடு இருந்தவர்கள் என்பதோ தங்கள் உதவியாளர் அடுத்த நாள் சொல்லித்தான் தெரியும்.

அதே போல் நம் நிர்வாகத்தின் இஃப்தார் விருந்தின் போது நோம்பு கஞ்சி உங்க மீசையில் ஒட்டியது பார்த்து நான் துடித்து போய் டிஷ்யூ கொண்டு உங்க மேல் பாய்ந்து மீதி இருந்த கஞ்சியை உங்க கோட் மேல தட்டிவிட்டேனே, அப்போது கூட டிஷ்யூ கொடுக்க வந்த என் நல்ல எண்ணத்தை பாராட்டி "நன்றி" ன்னு பாராட்டினீங்களே அதையெல்லாம் சொல்லி நான் ஊதிய உயர்வு கேட்டால் அது அசிங்கம் என்பதை நானும் அறிவேன்!

மேலும் ஒருமுறை தங்கள் தலையில் மாட்டிகொண்ட தலைகவசத்தை கழட்ட நான் உதவி செய்து அந்த என் பெரு முயற்சியில் உங்கள் விக்கும் சேர்ந்து வந்துவிட்டதே அப்போது என்னை நீங்கள் "உற்று" பார்த்ததை எண்ணி பல நாள் பலபேரிடம் சொல்லி சந்தோஷப்பட்டேன்.அப்போது கூட தாங்கள் என் பெயரையும், என் அடையாள அட்டை எண்ணையும் குறித்து வாங்கி கொண்டீர்கள், அத்தனை அன்பு என் மேல் உங்களுக்கு. அதை எல்லாம் சொல்லி நான் ஊதிய உயர்வு கேட்கப்போவதில்லை."பின் எதற்காக தர வேண்டும்?" என தாங்கள் நினைப்பது புரிகின்றது.

"உயர"மான இடத்தில் அமர்ந்திருக்கும் டவர் கிரேன் ஆப்பரேட்டரை கூட நிர்வாகத்தின் தொலை பேசி வழி கூப்பிடாமல் விசில் "ஊதி"யே கூப்பிட்டு வேலை வாங்கும் எனக்கு நீங்கள் ஏன் "ஊதி"ய உயர்வு தரக்கூடாது? இதை சிந்தித்து சீர் தூக்கி பார்த்து ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள

****************
ஆல் இன் ஆல் அழகுராஜா


**********************************************************************************************

லெட்டர் டைப் செய்து கவரில் போட்டு, நண்பன் வந்த பின்ன கொடுத்தேன். படித்து பார்த்து கையெழுத்து போட்டு கொடுக்க சொன்னதுக்கு, "யோவ், உன் லெட்டர் டிராஃப்டிங்க சந்தேகப்பட்டா நானெல்லாம் மனுஷனே இல்லய்யா, படிக்க நேரமில்ல ஹெட் ஆபீஸ் அவசரமா போறேன். அங்க போய் கையெழுத்து போட்டுக்கறேன்"ன்னு சொல்லிட்டு ஓடிட்டான். நாளை நடப்பதை யார் அறிவார்!!!

November 25, 2007

நலிவடையும் தொழில்கள்!!!

பத்தாவது வரலாறு -புவியியல் கடைசி பரிச்சை எழுதி முடித்த அடுத்த நாளே ஒட்டு மொத்த மாயவரத்து அரும்பு மீசைகளும், அரை தாவணிகளும் மயூரா டைப்பிங் செண்டருக்கு தான் ஓடும். டைபிங் கத்துக்க ஆசை என்பதை விட எதிபால் ஈர்ப்புதான் பிரதான காரணமாக இருக்கும். மேலும் இத்தனை நாள் யூனிஃபார்ம் யூனிஃபார்ம்ன்னு இருந்த பசங்களுக்கு தன் பட்டு பாவாடையையோ, கலர் பேண்ட், ஜீன்ஸ்களையோ காட்ட இது நல்ல வாய்ப்பு. மயூரா இண்ஸ்ட்டிடியூட் வாத்தியார் ராமனாதனுக்கு வயிறு கொஞ்சம் பெரிய சைஸ் என்பதால் மெக்கானிக் பை ஓட்டுவது போல ஒரு பக்கமா உக்காந்துதான் டைப்புவார்.ஆனா நாம மட்டும் நேரா நிமிர்ந்து கூன் விழாம உக்காரனும் என்பதில் கண்டிப்பா இருப்பார். asdfgf ; lkjhj முதல் 1 வாரத்துக்கு ஓடும். அப்போ தடவி தடவி நாம் அடிப்பதை நம் சீனியர் தாவணிகள் ஒரு வித நக்கலை உதட்டில் வழிய விட்டு பார்க்கும் போது மானமே போகும். இப்படியாக ஒரு வழியா zyxwன்னு தலை கீழா அடிக்கும் போது கொஞ்சம் ஸ்பீடு வந்திருக்கும். ஏபிசிடி தலை கீழா சொல்ல தெரியுமான்னு வீட்டிலே வந்து பீத்திக்க தோணும். ஸ்பீடு வரும் வரை ரெமிங்டன் மிஷின் தான். ஏறி அதன் மேல உக்காந்து அடிக்கனும் அத்தனை கஷ்டமா இருக்கும். ஃபேசிட் மிஷின் சார் தருவதே ஒரு சடங்கு மாதிரி விஷேஷமா இருக்கும். காலை பேட்சில் ஒருத்தனுக்கு கொடுத்துட்டா அது தலைப்பு செய்தி மாதிரி இரவு பேட்ச் வரை டாக் ஆஃப் த இண்ஸ்ட்டிட்டூட்டா இருக்கும். புதுசா டைப் கத்துபவனை ஈசியா கண்டு பிடிச்சிடலாம். காத்துல டைப் அடிச்சுகிட்டே இருப்பான்.

சைக்கிள் பாரிலே 4 டிம்மி பேப்பரை சுத்தி வச்சுகிட்டு டைப் கிளாஸ்க்கு போவதே அந்த காலை நேரத்தில் ஒரு வித சந்தோஷமா இருக்கும்.சத்தமில்லாமல் சில காதல்களும், பலத்த சத்தத்தோடு சில காதல்களும், காதலிக்க பொண்ணு கிடைக்காத வயித்தெரிச்சல் கோஷ்டிகள் காதலிப்பவர்களின் வீட்டுக்கு போட்டு கொடுக்கும் புண்ணிய வேலை செய்து கொண்டும், சும்மா கல கலன்னு இருக்கும் ஊரே!

ஆனால் இப்போ அதல்லாம் ஒன்னும் இல்லை. வெறிச்சோடி கிடக்கு அந்த இண்ட்டிடியூட். மயூராவின் பிரான்ச் எல்லாம் மூடியாச்சு. கேட்டா அந்த தொழிலே அழிஞ்சு போச்சுன்னு சொல்றாங்க. கம்பியூட்டர் வகுப்புக்கு கூட்டம் கூட்டமா போறாங்க. வீட்டுக்கு வீடு கம்ப்பியூட்டர் வந்தாச்சு. பல பேர் டை கத்துக்காமயே 'ஒருவிரல்"கிருஷ்ணாராவாக ஸ்பீடில் கலக்குதுங்க. டைப் மிஷின் மாதிரி ஒரே ஃபோண்ட் இல்லை. எந்த டிசைன் வேணுமோ அதில கலக்குறாங்க. தமிழ் டைப் கத்துக்க தேவையே இல்லை. அதான் கலப்பை வச்சு உழுதுடுறாங்களே! ஆஹ இனி எதிர் காலத்தில் நான் டைப் மிஷினை மியூசியத்துல தான் பார்க்க வேண்டும் என்கிற நிலை!!!

அது போல அழிந்து வரும் அடுத்த தொழில் பிரிண்டிங் பிரஸ்!! பிரஸ் உள்ளே நுழைந்தாலே அந்த பிர்ண்டிங் இங்கின் வாசனையும், தோசையில் நெய் தடவுவது போல இங்க்கை மிஷினில் தடவும் அழகும் ஆஹா சூப்பர். பிரஸ்ஸில் பிரதான பணியே அச்சு கோர்க்கும் வேலை தான்.குழியில் கிடக்கும் முழி, பொடி ஒழுகும் மூக்கின் நுனியில் வெள்ளெழுத்து கண்ணாடி, கூர்ந்து கவனிக்கும் போது வெற்றிலை காவி கலரில் 32 பல்லும் தெரிய தொழிலில் காட்டும் சிரத்தை.... அவர் தான் அச்சு கோர்ப்பவர். கண்ணை இடுக்கி இடுக்கி கவனித்து வேலை முடிந்து வெளியே வந்து ரோட்டில் போகும் அத்தனை பெரிய பஸ்ஸை கூட கண்னை இடுக்கி கொண்டே தான் பார்ப்பார். முதலாளி சம்பளம் குடுக்க லேட் ஆனால் ஒரு கொத்தாக எழுத்துகளை அள்ளி கோவணத்தில் முடிந்து கொண்டு ஈயம் பித்தளைக்கு போடும் வேலையோ, பக்கத்து பிரஸ்ஸில் "பா" "லூ" கடனா குடுன்னு சொல்லும் வேலையோ இனி இல்லை! முதல்ல எல்லாம் பிரிண்டிங்க்கு கொடுத்துட்டு ப்ஃரூப் பார்க்க ஒரு தடவை, எழுத்து டிசைன் மாத்த ஒரு தடவை, பத்திரிக்கையோ நோட்டீசோ அடிச்சு வாங்கங்காட்டிலும் தாவு தீர்ந்துடும். ஆனா இப்ப அந்த பிரஸ் எல்லாம் ஆஃப்செட் பிரஸ்ஸா மாறிடுச்சு. எல்லாம் படாபட் தான். இப்பல்லாம் கிராமத்தில் மட்டுமே அது போல பிரஸ் இருக்கு. கட்சி நோட்டீசோ, டூரிங் தியேட்டர் போஸ்டரோ அடிச்சுகிட்டு மத்த நேரத்துல ஈ ஓடிகிட்டு இருக்கு. இனி எத்தனை காலத்துக்கு இருக்குமோ! நம் சந்ததியினருக்கு இப்படியெல்லாம் பிரஸ் இருந்துச்சுன்னு தெரியாமலே போக நேரிடும்.

அடுத்து ரெக்கார்டு பிளேயர், அந்த கருப்பு தோசை ரெக்கார்டு, அது தயாரிக்கும் HMV கம்பனி, அந்த முள் மாட்டிகிட்டு "அப்பா பழம் எனக்குத்தான் அப்பா பழம் எனக்குத்தான் அப்பா பழம் எனக்குத்தான்" என வினாயகர் கதருவது எல்லாம் இப்போ ஐப்போட் உள்ளே அடங்கி நம்ம சட்டை பாக்கெட்டில் உக்காந்துகிச்சு!!

அதே போல பிலிம் ரோல்! இன்னும் அதிகமா போனா 10 வருஷம் தாக்கு பிடிக்குமான்னு தெரியலை! இது போல காலப்போக்கில் அழிந்து வரும் வேற என்னன்ன தொழில் இருக்குதோ! விஞ்ஞானத்தின் இந்த அபரிமிதமான வளர்ச்சி சரியா தப்பான்னே தெரியலையே!

November 22, 2007

அன்புள்ள கமலஹாசன் அவர்களுக்கு!!!!

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் கமல் அவர்களுக்கு!

தங்கள் விருமாண்டி படம் பார்க்க நேர்ந்தது ஒரு விபத்தாக! நான் சாதாரணமாக உங்கள் ஃபெயிலியர் படம் மட்டுமே பார்த்து பரவசப்படும் ஒரு அப்பாவி! உதாரணமாக ராஜபார்வை முதல் அன்பேசிவம்,ஆளவந்தான் வரை!!

ஆனால் நீங்க குரு முதல் எடுத்த கமர்சியல் படம் பத்தி பேச நான் வரவில்லை! ஆனால் கமர்சியல் கம் டெக்னிக்கல் படம்ன்னு நீங்க பில்டப் குடுத்த படம் பத்தி பேச போறேங்க!! அதாங்க அதில ஒன்னு "விருமாண்டி"

சாரே! சிறைத்துறை என்பது பற்றி தெரியுமா உங்களுக்கு? உங்க பேய்க்காமன் கேரக்டர் நீங்க ஊர்ல இருந்த போது ஒரு சப் இண்பெக்ட்ர், பின்ன நீங்க கோர்ட்ல நிக்கும் போது வற்றாறுங்க, பின்ன நீங்க சிறை
யில போகும் போது சிறையிலே வற்றாறு! ஒரு போலீஸ் அதிகாரி சிறைக்குள் போக கூட முடியாது அது தெரியுமா?

சிறைதுறையும், காவல்துறையும் தனி தனி டிபார்ட்மெண்ட்னு உங்களுக்கு தெரியுமா?

டெபுடேஷன்ல கூட வரமுடியாது இந்த ரெண்டு டிபார்ட்மெண்டிலே அது தெரியுமா????(நான் ஒரு முக்கிய அதிகாரிகிட்ட கேட்டேன்!! அது முடிடியாதாம்!!!)

பேய்காமன் இங்க சிறைல வர்ராராமா, அவர் இங்கிட்டும் வந்து பழி வாங்குராராம்!!\\

நல்ல காமடி படமா இருந்துச்சு எனக்கு:-)))

சிறை என்றாலே ஜெயிலர் எல்லாம் காலர்ல கருப்பு பட்டை போட்டுகிட்டு இருப்பானுங்க! டேய் டேய்ன்னு கூவ தோனுது!! அட பாவிகளா தமிழ் நாட்டிலே 8 பெரிய ஜெயில் இருக்கு ஆனா டி.ஐ.ஜி 2 பேர், ஐ.ஜி 1 பேர் ஆஹ 3 பேர் தவிர, 8 எஸ்.பி 11 பேர் தவிர யாரும் காலர்ல கருப்பு பட்டை கிடையாது! லூசு பசங்களா! தமிழ் சினிமாவிலே விட்டா கண்விக்ட் விக்டர் கூட கருப்பு பட்டை போடுவான் போல இருக்கே!!

கன்விக்ட் வார்டன் என்பவன், போலீஸ் லாகபப்புல வச்சிருக்கும் அவங்க நம்பிக்கையுரிய கைதி அவ்வளவே!!

வார்டன் என்பது போலீஸ்காரன் அதாவது PC

சப் ஜெயிலர் என்பது ஈக்குவல் to சப் இண்பெக்டர்

ஜெயிலர் என்பது இண்ஸ்பெக்டர்

அதுக்கு அடுத்ததே சிறைதுறையில் டி எஸ் பி கேடரில் உள்ள ADSP

அவர் சீக்கிரமா SP ஆகிடுவாரு

காரணம் சிறை துறை என்பது சின்ன துறை!!

ஆனா வருமானம் உள்ள துறை!!!

கமல்! கவனிங்க! இனிமே ஜாக்கிரைதையா இருங்க!!!


இப்படிக்கு


அபிஅப்பா

ஏண்டா தமிழ்நாட்டு மானத்தை வாங்குறீங்க!!!!

நம்ம தமிழ் நாடு இன்ஃப்ரா ஸ்ட்டெக்சர் நல்லா இருக்கு! ஆனா இது போல படம் பார்த்தா எல்லாம் காக்கி சட்டை போட்டவன் எல்லாம் கூர்க்கான்னு சொல்லும் காலம் வரும், இது போல படம் வந்தா!!!!!

உங்களுக்கு தெரியுமா? தான் பிறந்த ஊரில் ஒருத்தன் தாசில்தாரா, ஆர்டிவோவா,கலெக்ட்டரோ இருக்க முடியாது இந்த தமிழ் நாட்டில்!!!! ஆனா தமிழ் சினிமாவில் முடியும் !!!! எத்தனை அபத்தம்!!!!

November 20, 2007

நாங்களும் ரவுடிதான்! ஜீப்புல ஏத்திகோங்க!!!

பத்தாவது முடிச்ச உடனே எங்க கூட படிச்சதுல ஒரு குரூப் பசங்க சிதம்பரம், நாகை, புத்தூர்ன்னு பாலிடெக்னிக்ல சேர்ந்துட்டானுங்க. நாங்க மட்டும் அழுத்தி முக்கியாவது அட்லீஸ்ட்(!) ஒரு டாக்டராகி செல்வம் டாகடருக்கு எதிர்த்தாப்புல கடை விரிச்சிடலாம்ன்னு 'ஏ' குரூப் சேர்ந்துட்டோம். பின்னதான் தெரிஞ்சுது பாட்டனி ஒரு பாடாவதின்னு. வரிசையா எல்லா டெஸ்டிலும் 75க்கு 1 மார்க்குக்கு மேல என்னால தாண்ட முடியலை. பின்ன 1க்கு பக்கத்துல ரெண்டு முட்டை போட்டு நான் 100க்கு 75 மார்க்காக்கும்ன்னு வீட்டிலே சொல்லி கையெழுத்து வாங்கியது இந்த பதிவுக்கு சம்மந்தம் இல்லாத விஷயம். விஷயம் என்னான்னா அந்த பாலிடெக்னிக் பசங்க எல்லாம் விடிய காலைல ஏக்கே 47 மாதிரி மினி டிராஃப்ட்ர் தூக்கிட்டு சைக்கிள்ள ரயில்வே ஸ்டேஷன் போய் அங்கிருந்து சிதம்பரமோ, புத்தூரோ போய் படிச்சுட்டு, அதோட விடாம எங்களை சீண்டுவதே தொழிலா இருந்தானுங்க.

"மாப்ள எங்க பிரின்சி இருக்காரே பொல்லாத ஆளுடா, ஆனா எங்க புரபசர் தங்கம் தெரியுமா, சரி உங்க வாத்தியார் எப்படி இருக்கார், ஹெட்மாஸ்டர் இப்பவும் பொடி போடுறத விடலையா?" அவுக எல்லாம் காலேஜ்ல படிக்கிறாய்ங்கலாம்!! அது தான் போகட்டும்ன்னா "டேய் எங்க சீனியர்ஸ் தொல்ல தாங்கலைடா, ராகிங் எந்த வருஷமும் இல்லாத அளவு இந்த வருஷம் அதிகம்"ன்னு வெயில் பற்றிய வானிலை அறிக்கை வாசிப்பானுங்க! அய்யோ எங்களை ஒருத்தனும் ராகிங் பண்ண மாட்டங்குறாங்களேன்னு ஏக்கமா இருக்கும். பின்ன திடீர்ன்னு வந்து "மாப்ள இன்னிக்கு ஜூனியர் வெல்கம்டா, எங்க சீனியர்ஸ் எல்லாம் தங்கம்டா, அவனவன் வந்து அவன் பிடிச்ச சிகரட்டை எங்க வாயில் வச்சி பீர் பாட்டிலை குலுக்கி தலையில ஊத்தி செம கவனிப்புடா, நாங்களும் பீர், தம்முன்னு அவனுங்க கூட செம் டான்ஸ்டா, அது கிடக்கட்டும் மந்த்லி டெஸ்ட் எல்லாம் நடத்துராங்களா உங்க வாத்தியார் எல்லாம்? எங்க புரபசர் அசைன்மெண்ட் எழுத சொல்லி படுத்தறார்டா, சரி எங்களை பார்த்த்து பீர், தம்முன்னு கெட்டு போயிடாதீங்கடா, ஸ்கூல் பசங்களா லெச்சனமா இருங்க அதல்லாம் எங்களை மாதிரி காலேஜ் எல்லாம் போன பின்ன பார்த்துக்கலாம்...வர்ட்டா". இப்படியே தான் கொல்லுவானுங்க.

11 வது தான் அப்படி போச்சுன்னா, 12 வது படிக்கும் போதும் அவனுங்க தொல்லை தாங்க முடியலை. " மாப்ள, இந்த வருஷம் ராகிங் போன வருஷத்தை விட டாப், எங்க சீனியர்ஸ் அசந்துட்டானுங்க, அடிச்சு தூள் பண்றோம்ல...ஒருத்தனை ரயில்ல பிச்சை எடுக்க விட்டேன் பாரு செம சிரிப்பு, ஆமா கேக்க மறந்துட்டேனே இலக்கிய மன்றம் எல்லாம் நடக்குதா, எங்களுக்கு இன்ஜினியர்ஸ் அசோசியேஷன்ல இருந்து வர்ர வாரம் செமினார் எடுக்க வர்ரானுங்க, செம போர் அடிக்கும், சரி வர்ட்டா"ன்னுட்டு போயிடுவானுங்க!

திடீர்ன்னு ஒரு நாள் வருவானுங்க! " மாப்ள எங்க குரூப்புக்கும், கடலூர் குரூப்புக்கும் சிதம்பரம் ஸ்டேஷன்ல முட்டிகிச்சு, நாங்க லோக்கல் பசங்களை வச்சு பிரிச்சு எடுத்துட்டோம் அவனுங்களை, அது காலேஜ்ல பெரிய பிரச்சனை ஆயி ஸ்ட்ரைக்குடா, மாயவரம் பேர காப்பாத்திட்டோம்ல. பிரின்சியே எங்களை பார்த்தா "குட்மார்னிங் சார்"ன்னுட்டு போறாருல்ல இப்ப"ன்னு கிழிச்சு போடுவாங்க. இதல்லாம் கேக்க கேக்க எங்களுக்கு காலேஜ் மேல் ஒரு வெறித்தனமான ஆசை வந்துடுச்சு, என்ன கோர்ஸ் எடுக்கலாம் என்பதை விட ரேகிங், ஸ்ட்ரைக் இதிலே நாட்டம் அதிகமா ஆகிடுச்சு! காலேஜ் போன பின்ன பிரின்சிபாலை பார்த்து "குட்மார்னிங் பிரின்சிபால்"ன்னு எப்படி சொல்வதுன்னு பலவிதங்களிள் கண்ணாடிக்கு முன்னாடி நின்னு கிட்டு கோணிகிட்டு, ராணுவ ஸ்டைலில் எல்லாம் சொல்லி பார்த்து கிட்டோம். மாலை வீட்டுக்கு வந்து சாப்பிடும் போது அம்மா "ஏண்டா டல்லா இருக்கே"ன்னு கேட்பது போலவும் அதற்கு நாங்கள்"அந்த புரபசர் சரியான முசுடும்மா"ன்னு சொல்வது போலவும் கனவுபோல நினைத்து பார்த்து கொண்டோம். ஆனா இப்ப பாருங்க அபிபாப்பா சொல்லுது "எங்க பிரின்சி நாளைக்கு எல்லாரையும் கலர் டிரஸ்ல வர சொன்னாங்க"ன்னு. நான் கூட கேட்பேன் அதுகிட்ட "உங்க டீன், ரீடர், புரபசர் எல்லாம் என்னா சொன்னாங்கன்னு! அதுக்கு என் கிட்ட ஒன்னும் சொல்லாது அவங்க அம்மா கிட்ட போய் "ஏம்மா நல்ல மாப்பிள்ளையே உனக்கு கிடைக்கலையா"ன்னு கேட்டுட்டு போகும்:-))

இப்படியாக நாங்க கஷ்டப்பட்டு பின்ன காலேஜ்ல சேர்ந்தோம் பலவித ரேகிங் கனவுகளோட! எல்லாரும் புது சைக்கிள் சகிதமா முதல் நாள் போனா, எங்களுக்கு பெரிய ஏமாற்றம். வாசல்ல சாக்லெட் வச்சிகிட்டு, ஜீனி தட்டு வச்சிகிட்டு சீனியர்ஸ். அடப்பாவமே எங்க காலேஜ்ல ரேகிங் என்பதே இல்லியாம். என்ன கொடுமை இது. கெஞ்சவா முடியும் அவங்களை பார்த்து "எங்களை ரேகிங் பண்னுங்க ரேகிங் பண்ணுங்க"ன்னு. சரி நாம் குடுத்து வச்சது அவ்வளவு தான்ன்னு நெனச்சுகிட்டு, ஸ்டைக் வரும் நாளை எதிர் பார்த்து காத்திருந்தோம். ஒருதலை ராகம் படத்திலே பார்த்திருப்பீங்க எங்க காலேஜை, ஒரு வாய்க்கால் இருக்கும் அதை தாண்டிதான் போனனும். அந்த மதில் மேல வரிசையா சீனியர்ஸ்தான் உக்காந்து இருப்பாங்க. ஆனா நாங்க அந்த மதிலை கைப்பற்றி ராஜ பரிபாலனம் செஞ்சு கிட்டே இருந்தோம். எப்படா ஸ்ட்ரைக் வர்ரும்ன்னு இளவு காத்த கிளியா காத்து கிடந்தோம்.

ஒன்னும் வர்ர மாதிரி தெரியல. அப்படித்தான் ஒருநாள் மதில்ல உக்காந்து அரட்டை அடிச்சுகிட்டு இருந்தப்ப நெய்வேலி குரூப் பசங்க ட்ரெயின்ல இருந்து வந்தானுங்க. அப்ப நான் "டேய் இன்னிக்கு ஸ்ட்ரைக்காம்டா உள்ளே ஒரே ரணகளமா இருக்கு"ன்னு அவுத்து விட அதையே வேத வாக்கா நம்பி அவனுங்களுக் திரும்ப போய் காலேஜ் எதிர்ல நின்னுட்டானுங்க. அவனுங்க கூட்டமா நிற்பதை பார்த்து வரும் கூட்டம் எல்லாம் அங்கயே நிக்க ஸ்ட்ரைக்குக்கான மேக மூட்டம் கருப்பா கண்ணுக்கு தெரிஞ்சுது. சரின்னு நாங்களும் வெளியே வந்து அந்த ஜோதில ஐக்கியமாகிட்டோம்.

பின்ன தான் விஷயம் கேள்விப்பட்டு மனோகரன் என்ற எங்க காலேஜ் சேர்மன்(மாணவர் தலைவர்) ஓடி வந்தான். வந்தவனுக்கு ஆனந்த கண்ணீர்! நம்மால சாதிக்க முடியாதது தானா எப்படியோ நடந்துடுச்சேன்னு. வந்தவன் நேரா கொடிகம்பம் பக்கத்துக மேடை மாதிரி இருக்கும் ரோட்டிலே அதிலே ஏறி நின்னு "மாணவர்களே! நான் பலமுறை நிர்வாகத்தை எச்சரித்தும் நமக்கு குடிதண்ணீரோ, கழிவறை வசதிகளோ இன்னும் செய்து கொடுக்காத காரணத்தால் நான் வேறு வழி இல்லாமல் இந்த ஸ்ட்ரைக் நடாத்துபடி ஆகிவிட்டது, உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் நாளையும் இது தொடரும், அமைதியாக கலைந்து செல்லுங்கள்"ன்னு பெருமையை தட்டிகிட்டு போனான்.

பின்னதான் வந்துச்சு பிரச்சனை. 2 நாள்ல ஸ்ட்ரைக் முடிஞ்ச பின்ன ஒரு குரூப் லெக்சரர்ஸ் தன்னோட உளவு வேலையை ஆரம்பிச்சு ஸ்ட்ரைக்குக்கு காரணம் என்னன்னு கண்டு பிடிக்க முயற்சி பண்ணி மொத்தமா ஒரு 30 பேரை சந்தேகத்தின் பேரில் பிடிச்சாங்க.அவங்களை திருவாளர் திருமதி மாதிரி தனி தனியா விசாரிச்சா ஒருத்தனும் சரியா பதில் சொல்லலை! அதிலே இந்த அப்பாவியும் ஒருத்தன். எல்லாரும் அப்பாவை அழைச்சுகிட்டு வரனும்ன்னு சொல்ல ஆஹா நாமலும் ரவுடிதான் ரவுடிதான்ன்னு வண்டில தொத்திட்டோம்டான்னு சந்தோஷமா வீட்டுக்கு போனா அப்பா ருத்ரதாண்டவம் ஆடுறாங்க! அப்பவும் நான் நக்கலா "விடுங்கப்பா நான் தான் அப்பவின்னு சொல்றேன்ல, சும்மா வாங்க நீங்களும் காலேஜ் வாசலை மிதிச்ச மாதிரி இருக்கும்"ன்னு நக்கல் பண்ண அப்பாவும் ஒத்துகிட்டாங்க.

காலேஜ் போனா அங்க எல்லா அப்பாவும் ஒன்னுகூடிட்டாங்க! அது அது எங்களை போட்டு வார்த்தையால துவம்சம் பண்ண ஆரம்பிச்சுடுச்சு. உளவு துறை புரபசர் வந்தார். எல்லா அப்பாவும் ஆளுக்கு ஒன்னா பேச எங்கப்பாவும் ஏதோ பேசாட்டி தெய்வ குத்தம் மாதிரின்னு நெனச்சுகிட்டு "சார் யார் தப்பு செஞ்சாங்களோ அவங்களை சஸ்பெண்ட் பண்ணுங்க, பாருங்க என் பையன் அப்பாவி, நீங்க பண்ண காரியத்தால நான் வேலையை விட்டுட்டு வந்திருக்கேன்"ன்னு சொல்லி வைக்க, ஆஹா அப்பா சும்மா இல்லாம கவுத்திட்டீங்களெ அப்பான்னு நெனச்சுகிட்டேன்.

கஷ்டப்பட்டு உளவு துறை மூலமா கண்டுபிடிச்ச புரபசர் தன் திறமை குறைத்து மதிப்பிடுவதை ஒத்துப்பாரா. "யார் சார் இவனா உங்க பையனா அப்பாவி, இவன் தான் 1 வாரமா இந்த பசங்களை ராத்திரி ராத்திரி சந்திச்சு ரகசிய கூட்டம் போட்டு, பிட் நோட்டீஸ் குடுத்து, சுவத்திலே எழுதி, ஸ்ட்ரைக் நடந்த அன்னிக்கு காலையிலே வந்து ஆட்கள் திரட்டி, போதா குறைக்கு அடியாட்கள் செட் பண்ணி கல்லூரி சொத்துகளுக்கு சேதம் உண்டு பண்ண திட்டம் போட்டிருந்தான். நாங்க சரியான நேரத்திலே கவனிச்சு தடுத்தோம், எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு"ன்னு ஒட்டு மொத்த பழியையும் என் மேல போட்டாரு. ஆஹா " "டேய் இன்னிக்கு ஸ்ட்ரைக்காம்டா உள்ளே ஒரே ரணகளமா இருக்கு"ன்னு சொன்ன இந்த 6 வார்த்தைக்கு பின்ன இத்தன இருக்கா, அப்பா பழிவாங்கிட்டீங்களே அப்பா, என்னை ஒரு தீவிர வாதி அளவு ஆக்கிட்டீங்களே ஒரு வரி மீட்டிங்ல பேசி!!!வெளியே வந்தா நான் ஏதோ வெடிகுண்டு தயாரிச்சதா பேசிகிட்டானுங்க ரகசியமா!!!

பின்ன என்னாச்சு, மன்னிப்பு கேட்டு காலேஜ்க்கு வந்தாச்சு! மதிலுக்கு மேல யாரும் உக்காராத மாதிரி கூர்மையா கட்டிட்டாங்க! அதுக்கு பின்ன எப்ப ஸ்ட்ரைக்கு நடந்தாலும் நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படாத குறை தான், டக்குன்னு அப்பாவுக்கு லெட்டர் போகும் நிர்வாகத்தில் இருந்து. அப்பாவும் பதிலுக்கு லெட்டர் போடுவாங்க.இப்படி அடிக்கடி அப்பாவுக்கும் நிர்வாகத்துக்கும் நிறைய கடித தொடர்பு என்னால் நீடித்ததால் அது இரு பக்கமும் பழகி போய் நான் காலேஜ் விட்டு வந்த பின்னயும் தொடர்ந்தது."உங்க கார் நம்பர் YMZ 5454 சூப்பர்"ன்னு அப்பாவும், பதிலுக்கு நிர்வாகம் "நீங்க ஏன் surf க்கு மாற கூடாது"ன்னு பதிலும் ....இப்பவும் லெட்டர் தொடர்பு இருக்கான்னு அப்பாகிட்டே கேக்கனும்!!!

November 19, 2007

என் சின்னக்காவுக்கு இன்னிக்கு பிறந்த நாள்!!!

என் பெரியக்காவை அனேகமமக அத்தனை பிளாக்கர்ஸ் அததவது என்னோடு தொடர்பு உடையவர்கள் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு! ஆனால் எனக்கு ஒரு சின்ன அக்கா உண்டு! கோபத்திலும், குணத்திலும்,அழகிலும், அன்பிலும் எல்லலம் எனக்கு கிட்டத்தட்ட un predictable charector அவங்மாதிரியே ஒருத்தங்க எனக்கு சகோதரியய கிடைச்சாங்க வலை உலகில்!!

ரெண்டு அக்காவும் நானும் தம்பியும் சேர்ந்துட்டால் வீட்டில் கலகலப்புக்கு பஞ்சமே இல்லை. தம்பி தான் ஆரம்பிப்பான், "அம்மா பெரியக்காவுக்கு வருஷ புளியும், கூழ் வடகமும் குடுத்தியே, நான் கொண்டு போய் கொடுத்தனே, அது குறை சொல்லுதும்மா, பத்தலைன்னு"ன்னு ஆரம்பிப்பான். பெரியக்கா பேந்த பேந்த முழிக்கும்!!

அப்ப ஆரம்பிக்கும் சண்டை! சும்மா ஜக ஜோரா சின்னக்கா இருக்கும் 1 வாரமும் எங்களுக்கு களை கட்டும். பாவம் அம்மாவுக்கு தான் கண்னை கட்டும்!!

வழக்கம் போல என் சின்னக்கா என் கூட பேசுவதில்லை! ஆனா தங்கமணி, குழந்தைகள்ளோடு நல்ல உறவு! எனக்கு அந்த குறை இல்லாமல் தணிக்கும் என்னை திட்டிகொண்டே இருக்கும் என் சகோதரி, என் கல்லூரி ஜூனியர், என் பள்ளி கால மஹா ஜூனியர் முத்து லெஷ்மிக்கு இன்று பிறந்த நாள்! இடட்டை வாழ்த்து! ஆனந்த விகடனிலும் வந்தாச்சு!!!

வாழ்க வாழ்கப்பா!!!!!

November 13, 2007

நன்றி! இனி எல்லாம் சுகமே!!!

இன்றைக்கு எங்க ஊர் மகாராஜாவும் மகாராணியும் ஜம்முன்னு கல்யாணம் பண்ணிகிட்டு தேர்ல ஊர்வளம் வரும் நாள்.ஆமாம் மாயூரநாதரும், அவயாம்பிகையும் திருக்கல்யாணம் செய்து கொண்டு தேரில் வரும் நாள். இதே போல சமீபத்துல! கொஞ்சம் வருஷம் முன்னதான் நான் இதே நாளிள் பிறந்தேன். பெரிய குடும்பம் அதனால இப்ப அபிக்கோ, தம்பி நட்ராஜ்க்கோ இருக்கும் முக்கியத்துவம் எல்லாம் அப்போ இல்லை. நான் பிறந்தது உறவுகாரங்களுக்கு ஒரு கால்கிலோ ஜீனி செலவு, அவ்வளவே! எங்க வீட்டுக்கு ஒரு பத்து காப்பி செலவு. ஆனா அம்மாவுக்கு மட்டும் கொஞ்சம் சந்தோஷம் இருந்திருக்கும். இப்படியாக நான் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் காலங்களில் பள்ளி நாட்களில் திடீரென புது சட்டை போட்டுகிட்டு ARC ஜுவல்லரி பசங்களோ, வேறு சிலரோ எல்லாருக்கும் சாக்லெட் குடுக்கும் போது "இது அவங்களுக்கு மட்டுமேயான விஷேஷம் போலயிருக்கு"ன்னு நெனச்சுப்பேன்.மேலும் எனக்கு என் பிறந்த தேதி என்பது 27\6\66 தான். எனக்கு மட்டுமல்ல குரங்குராதா முதல் அன்றைக்கு யார் யாரெல்லாம் ஸ்கூலில் சேர்ந்தார்களோ எல்லாருக்குமே அது தான் பிறந்த நாள்.

பின்பு ஏழாவது எட்டாவது படிக்கும் காலங்களில் எனக்கும் சாக்லெட் கொடுக்க ஆசை வந்தது. ஆசை மட்டுமே வந்தது. கொடுக்கவில்லை. பின்பு கல்லூரி நாட்களில் கேக் வெட்ட ஆசை வந்தது. ஆனால் வெட்டவில்லை. பின்பு அந்த சிந்தனையே இல்லாமல் வளர்ந்துவிட்டேன். பின் திடீரென 1995ம் ஆண்டு நவம்பர் 13 அன்று காலையில் ஒரு போன் "என்னங்க பிறந்த நாள் வாழ்த்துக்கள்"ன்னு. எனக்கு சொரேர்ன்னு இருந்துச்சு. அப்போது எனக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. வேற யாரு தங்கமணிதான்! சரின்னு சுதாரிச்சுகிட்டு "சரி உங்களுக்கு எப்போ பிறந்த நாள்?"ன்னு ஏதோ கேட்டு வச்சேன். என்ன சொன்னாங்கன்னு ஞாபகம் இல்லை. அது தான் எனக்கு முதன் முதலாக மத்தவங்க கிட்ட இருந்து வந்த என் வாழ்க்கையின் முதல் வாழ்த்து. உடனே அம்மாவுக்கு போன் பன்ணி "அம்ம்ம்ம்மா, எனக்கு எப்போ பிறந்த நாள்?"ன்னு கேட்டேன். அதுக்கு அம்மா "அய்ப்பசி இருவத்திஏழு"ன்னு சொன்னாங்க. அதுக்கு நான் "இங்கிலீஷ்ல சொல்லும்மா"ன்னு சொன்னதுக்கு "அய்ப்ஸ் டொண்டிசவன்"ன்னு சொன்னாங்க! ( நக்கல் பிறவியில இருந்தே வந்துடுச்சுங்கப்பூ)

இப்படியாக 13 வருடங்களாக தவறாமல் தங்கமணி வாழ்த்தும், பெத்தவங்க வாழ்த்தும், கூட பிறந்தவங்க வாழ்த்தும், அபிபாப்பா, இந்த வருடம் முதல் நட்ராஜ் வாழ்த்தும்(ஆமாங்க காலையில போன்ல விசில் அடிச்சான்) கிடைத்து கொண்டிருக்க இந்த வருடம் கொஞ்சம் அதிகப்படியாகவே வாழ்த்து மழையில் நனைந்து விட்டேன். காரணம் தமிழ்மணம்!

நேற்று இரவு முதன் முதலாக வந்த வாழ்த்து தல பால பாரதிகிட்டயிருந்து வந்த போன்! ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது! பின் வரிசையா போன்! பின் இரவு 12 வரை நெட்டில் உலாத்திட்டு படுத்து காலை 4க்கு எழுந்து பின் இபோதான் வர்ரேன்.

இடையிடையே நிறைய போன்கள், ரொம்ப மிகிழ்வாய் இருந்தது!! இப்போ வந்து பார்த்தா நெட்ல எப்போதும் போல நிறைய பின்னூட்டம் வந்திருக்கும்ன்னு பார்த்தா நிறைய பதிவு வந்திருந்தது!! அதைப்பற்றி நாளை விரிவான பதிவு போடலாம் என இருக்கிறேன்! ஆக்சுவலி இந்த பதிவு வாழ்த்து சொன்னவங்களுக்கு நன்றி சொல்லும் பதிவு இல்லைப்பா! அது நாளைக்கு! நான் உங்க எல்லாரையும் கேட்க நினைத்த கேள்வி ஒன்னுதான்! எனக்கு என்ன பரிசு குடுத்தீங்க???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

என்னடா இவன் இப்படி கேட்கிறானேன்னு நினைக்காதீங்க! எனக்கு ஒரு பரிசு வேணும்! தருவீங்களா?

உடனே “ஆஹா அபிஅப்பா எதுக்கோ அடிபோடறான், அவன் ஊர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பணம் கேக்க போகிறான், ஸ்கூலுக்கு கேக்க போகிறான் என பயப்பட வேணாம்! அது போல விஷயங்களுக்கு அபிஅப்பா வரமாட்டான்!

என் வலையுலக நண்பர்களே! உங்களை எல்லாம் எனக்கு எப்படி தெரியும்? வலையுலகம் மூலமாகத்தானே? அதே போல நம்மோடு நம்மாக வலையில் சந்தோஷமாக சுற்றி திரிந்த நம் சகோதரி அனுராதா அவர்கள் கொஞ்சம் கஷ்டத்துல இருக்காங்க! நாம் ஏன் அவங்களுக்காக வரும் வெள்ளிகிழமை 16\11\07 அன்று காலை 8 மணிக்கு கூட்டு பிரார்த்தனை செய்ய கூடாது? அப்படி செய்தால் இது உலகலாவிய கூட்டு பிரார்த்தனையாக இருக்குமே?? அது கடவுளின் காதை எட்டுமே? செய்வீங்களா? இல்லை பெரியவங்களா பார்த்து ஏதாவது ஒரு உகந்த தேதி நேரம் சொல்லுங்க! அப்ப வச்சுப்போம்! இதை பத்தி பின்னூட்டத்துல டிஸ்கஸ் பண்ணுங்க! இதுவே நான் எதிபார்க்கும் பரிசு!!

இதிலே கடவுள் கொள்கை\மறுப்பு கொள்கை இதல்லாம் வேணாமே ப்ளீஸ்!! மறுப்பவர்கள் “உளமாற” அவங்க நல்லா இருக்கணும்ன்னு நெனைச்சா போதுமே!!

மதம் கூட வேண்டாமே!! அவங்க அவங்க இஷ்டபடி கும்பிடலாமே!

பரிசு கிடைக்குமா எனக்கு உங்களிடமிருந்து??????
ஆனால் ஆசையுடன் எதிர்பார்க்கிறேன்!!!!

November 12, 2007

அன்புள்ள என் இனிய தமிழ்மண சொந்தங்களே!!

அன்புள்ள தமிழ்மண சொந்தங்களுக்கு, நான் அபிஅப்பா எழுதுவது. நான் மிக்க நலம். அது போல் அங்கு தாங்கள் சுகமறிய ஆவல். என்ன! நான் கொஞ்சம் பிசியாகி போன பின்ன என்னை மறந்துட்டா என்ன பண்றதுன்னு தான் இந்த அவசர கடிதம்!

சரி நான் தான் பிஸியாச்சேன்னு மத்தவங்களுக்கு போன் பண்ணி தமிழ்மணம் எப்படி இருக்குன்னு விசாரிச்சா, நான் கேட்ட 15 பேருமே "என்னங்க அபிஅப்பா, நான் இருக்கும் பிசில தமிழ்மனம் பக்கம் தலை வச்சு படுக்கவே நேரம் இல்லை"ன்னு இன்ஸ்டண்ட் பதில் சொல்றாங்க. ஆனா நான் நடு நடுவே எட்டி பார்க்கும் போது பதிவு போட்டுகிட்டும், பின்னூட்டம் போட்டுகிட்டும் தமிழை வளர்த்துகிட்டு இருக்காய்ங்க(ஜஸீலா மன்னிக்கனும் நான் பொதுவாதான் சொன்னேன்:-))

மத்தபடி துபாய்ல என்னா விஷேஷம்ன்னு கேட்டா, வரும் 15ம் தேதி வெள்ளி கிழமை ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்துல இளையராஜா பிரபல பாடகர்களோட பின்னி பெடலெடுக்க போறார். நான் நேரமின்மையை காரணம் காட்டி (பாட) வர இயலாமையை தெரிவித்து விட்டேன். ஆனாலும் நல்ல ஆரோக்கியமான ஸ்பான்சர் கிடைக்கும் பட்சத்தில் 4 மணி நேரமானாலும் பங்கேற்க உத்தேசம். இந்த நேரத்தில் நான் சென்ர முறை A.R.ரஹ்மான் கச்சேரி அல் அஹல்யா ஸ்டேடியத்தில் நடந்த போது போய் முஸ்தபா முஸ்தபா பாடலுக்கு சிகர் லைட்டரை பத்தவச்சி தூக்கி பிடிச்சு என்னை பார்த்து பலரும் அப்படியே செய்து என்னடா முதுகு பக்கம் சூடா இருக்குதேன்னு திரும்பி பார்த்து அலறி பத்தவச்ச பலாச்சுலாக்கிய திட்டிகிட்டே அந்த உயரத்தில் இருந்து விழுந்து, ஒரு பிரபல வலைப்பதிவர் கீழே விழுந்து கிடக்காரேன்னு கூட பார்க்காம என் மேல் பூனை வாக் நடத்திய யானை மாமி ஞாபகத்துக்கு வர்ராங்க.

அது போகட்டும்! என் முதுகுவலிக்கு கணினி தான் காரணம் என டாக்டர் கண்டபடி சொன்னாலும், எனக்கு என்னவோ ராமன் சேட்டா “பிரியாணி” என்ற பெயரில் தரும் மஞ்ச சோறுதான் காரணம் என நினைத்து என் மாஞ்சா சோத்தை காப்பாத்திக்க திரும்பவும் சொந்த சமையல் ஆரம்பித்து விட்டது இந்த வார உபரி செய்தி. மேலும் “இட்லி”யை இட்லி என்றும் தோசையை தோசை என்று சொல்லாமலும் “இட்டேலி” “தோஷா”ன்னு சொல்லும் ராமன் சேட்டாவின் கொலவெறி கூட நான் சொந்த சமையலுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் நண்பர்கள் சொல்கிறார்கள்.

தமிழ்மணத்துலதான் வரலியே தவிர போன் மொக்கை எப்போதும் போல தொடர்கிறது. கோபி வழக்கம் போல போன் செய்து “ம் சொல்லுங்க வேர என்ன சேதி” என்பதும், சென்ஷி மெனக்கெட்டு போன் செய்து “நான் ரொம்ப பிசியா இருக்கேன், பின்ன பேசறேன்”ன்னு சொல்வதும், லொடுக்கு போன் செய்து “என்ன அபிஅப்பா, பிரகாஷ்ராஜ் தன் அடுத்த படத்துக்கு “அபியும் அபிஅப்பாவும்”ன்னு பேர் வச்சிருக்காரே, உங்க கருத்து என்ன அது பத்தி”ன்னு கேட்டப்ப “அது ஒரு இன்பியல் சம்பவம்”ன்னு நான் சொல்லியதும், கதிர் தம்பி போன் செய்து “எனக்கு அம்மை போட்டிருக்கு யார்கிட்டயும் சொல்லவேணாம் வருத்த படுவாங்க”ன்னு சொல்லியதும் அதற்கு நான் “என் வாயாலே சொல்ல மாட்டேன்”ன்னு சொல்லியதும்,ஜஸீலா தீபாவளி வாழ்த்து சொல்ல போன் செஞ்சு வாழ்த்து 2 செகண்டும் மீதி கம்பனி நிகழ்வுகளும் பேசியதும், ஜூபைர்,மின்னல்,எல்லாம் தீபாவளி வாழ்த்து சொன்னதும் இந்த வார நிகழ்வுகளில் சில!!

சரி விஷயத்துக்கு வாரேன்! நான் வழக்கம் போல இந்த வருடமும் மலைஏற போறேன்! அதாங்க இமயமலை. ரசிகர்கள் வழக்கம் போல என் பி.ஏ. கத்திய நாராயனா(அதாங்க என் கூட எப்பவும் கத்திகிட்டே இருப்பானே)கிட்ட உங்க பொக்கே, பரிசு பொருட்கள் எல்லாத்தையும் தந்திடுங்க:-)), வெளியூர் அன்பர்கள் வசதிக்காக அபிஅப்பாவின் உலக சுற்று பயணம் பின்னர் வெளியிடப்படும். அப்போது நேரிடையாக பரிசுகளை தந்து விடலாம்.

என்றும் அன்புடன்

அபி&நட்ராஜ் அப்பா

தமிழ்மணத்தின் திஸ்கி: அடங்கொய்யால, ஆள் கிடைக்காம உன்னை தெரியாதனமா 1 வாரத்துக்கு ஸ்டார் ஆக்கினா நீ “சூப்பர் ஸ்டார்” ரேஞ்சுக்கு பில்டப்பு குடுக்கிறியா???

November 8, 2007

"தீபா"வளி!! from அபிஅப்பா!!!!

இந்த "தீபா"வளிங்குற பேரே எனக்கு இப்பல்லாம் அல்வா சாப்பிடும் அளவு இனிக்குதே அது ஏன்? அது சம்மந்தமா பின்ன பேசி ஒரு முடிவுக்கு வருவோம். அப்ப சின்ன பையனா வால் பையனா இருந்த போது எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் அசை போட்டால் ஒரு 4 பதிவு போடலாம். அத்தனை சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் அத்தனையும்.

ஜனவரி 1 ம் தேதி தேதி காலண்டர் வாங்கி வந்த உடனே அவசர அவசரமாக திருப்பி பார்த்து பின் பக்கம் "இந்து பண்டிகைகளில் தீபாவளி என்ன்னிக்குன்னு பார்த்து அன்று முதல் தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என கணக்கு போட்டு "ஆண்டவா இன்னும் இத்தனை நாள் இருக்கான்னு ஏங்கி சோர்ந்து போவதும் பின்ன தீபாவளிக்கு 1 மாதம் முன்னமேயே அந்த தீவாளி ஜுரம் பத்திப்பதும் ஆஹா அந்த 1 மாதம் தினமும் கொண்டாடம் தான்.

உனக்கு சட்டை எடுத்தாச்சான்னு ராதா பேச்சை ஆரம்பிச்சு வச்சு தீபாவளி வெடியை பத்த வைப்பான். "இல்லைடா, அப்பா மெட்ராஸ்ல போய் எடுத்து வரேன்ன்னு சொல்லியிருக்காங்க"ன்னு மெதுவா பிட்டை போடுவேன். அதுக்கு அவன்"எனக்கு எடுத்தாச்சுடா, அப்படியே தங்கம் ஜரிகைல தக தகன்னு இருக்கு" - இது ராதா! டேய் ராதா அதையும் நம்பி வச்சேனேடா பாவி, அது கூட பரவாயில்லை, 7 வது படிக்கும் போது "திரிசூலம்" 200 வது நாள் வெற்றி விழாவுக்கு K.R.விசயா அந்த படத்துல நடிச்ச எல்லாரையும் சிவாஜி உள்பட தன்னோட சொந்த பிளைட்டுல ஏத்திகிட்டு மெட்ராஸ்ல இருந்து மதுரைக்கு தானே தானே ஓட்டிகிட்டு போனாங்கன்னும் அதுல வளைச்சு வளைச்சு டைவ் எல்லாம் அடிச்சு கூட்டிகிட்டு போனாங்கன்னும் சொன்னியே ராஸ்கோல், நானும் அதை என் கல்யாணத்து வரை நம்பி அதை பெருமையா தங்கமணி கிட்ட சொல்லி அவங்களும் "பே"ன்னு அழுது "போயும் போயும் ஒரு மகா அப்பாவியை என் தலையில கட்டி வச்சுட்டாங்களே"ன்னு என் மானத்தை வாங்கினாங்களே...ரைட்டு விடுடா ராதா..தீபாவளி கதைக்கு வருவோம்.

முதல் விஷயம் புது சட்டை தான். பின்ன தான் கங்காதரன் சைக்கிள் கம்பனியின் வெடி சமாச்சாரம் எல்லாம். அப்பல்லாம் வார் வைக்காத டிராயரும், ஸ்டிப் காலர் சட்டையும், தொள தொள சட்டையாக இல்லாமல் டைட் பிட்டிங்குமே எனக்கும் என் தம்பிக்கும் பிராதானமாக இருந்தது. "ஜென்ஸ் டைலர்" கடையில் தான் தைக்க வேண்டும் என்பது கிட்டத்தட்ட லட்சியமாக இருந்தது. "ஜென்ஸ் டைலர்" என்பது ஆண்களுக்கான தையலகம் என்பது எங்களுக்கு தெரியாது. உசத்தியான டைலர் அது மட்டுமே தெரியும். ஆனால் அதிலே எல்லாம் அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் மட்டுமேயான ஒன்றாக இருந்தது. எங்களுக்கு வீட்டு திண்ணை டைலரோ அல்லது கார்ஷெட் டைலரோ தான் கதி.

இந்த கதையெல்லாம் அடுத்த தீபாவளிக்கு சொல்லிக்கலாம்! இன்னிக்கு நடந்த கதை கேளுங்க! காலை நானே ஊருக்கு போக முடியாத கோவத்தில் தூக்கம் இல்லாம தூங்கிட்டு இருந்தேன்! நம்ம கோபிக்கு நைட் டூட்டியா, அவன் அழும்பு தாங்காது! எப்போதும் போல எழுப்பினான்! ஆனா காலை 6க்கு இல்லை 4.30க்கு. “ஹலோ! வணக்கம், வெடி வெடிச்சீங்கலா?- இது கோபி! அதற்க்கு நான் “இல்ல இன்னும் கொஞ்ச நேரத்துலப்பா”ன்னு சொல்லி வச்சுட்டேன்.

உடனே அடுத்த போன்! என் ரூம் மெட்க்கு! ஒரே அழுகை சத்தம்! அதிலேயே வாழ்த்தும் கூட, “அண்ணே உனக்கு தலை தீவாளி வாழ்த்து, இருந்தாலும் நான் அழுவறத்துக்கு காரணம் நீ கேக்கவே இல்லியே?””

“சொல்லும்மா கேக்கறேன்””—இது நண்பர்

“கலையிலே இருந்து என் போன் காணும்ண்ணே, நீ ஆசை ஆசையா வாங்கி குடுத்தது எனக்கு”

“சரி சரி ஓக்கே, நான் ஜனவரி வரும் போது வாங்கியாறேன்”

“சரிங்கண்ணே”

கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் போன் வந்தது!

“என்னங்க தீவாளி வாழ்த்து!”

“சரி செல்லம், என்ன இன்னிக்கு இத்தன சந்தோஷம்”

“நான் திருந்திட்டேங்க, உங்க தங்கச்சி கூட இனிமே சண்டை எல்லாம் போடமாட்டேன், காலையில கூட இங்க வந்தாங்க, என்னமா பேசி அனுப்பினேன் தெரியுமா?””

“ரொம்ப சந்தோஷம், சரி நான் விடிஞ்ச பின்ன பேசறேன்””

கொஞ்ச நேரம் பின்ன அடுத்த போன்!

“அண்ணே அவரு மிலிட்டரில இருந்து இப்ப போன் பண்ணுவாரு, என் கிட்ட போன் இல்லன்னா ரொம்ப கோவமாயிடுவாரு, அதனால அவருக்கு போன் பண்ணி சொல்லுன்னே”

அப்போ எனக்கு சுத்தமா தூக்கம் தெளிஞ்சு போச்சா, நான் தலையை தூக்கி “ஹல்லோ நான் அப்பவே சொல்லனும்ன்னு நெனச்சேன்ப்பா, ஒரு வேளை உன் பொண்டாட்டி காலைல போனை தூக்கி சாக்கடையிலே போட்டிருக்குமோ?””

அவ்வளவுதான் சத்தமா கேட்டேன்!

திரும்பவும் போன் சென்ஷிடமிருந்து எனக்கு! “அண்ணே வெடி வெடிச்சாச்சா?”

அதற்கு நான் “வெடிச்சாச்சு! மீதியை காலையில் விலாவாரியா பேசிக்கலாம்”ன்னு சொல்லி வச்சேன்!

அப்பாடா வெடி வெடிச்சாச்சு தீபாவளிக்கு!!!

November 1, 2007

இவர் ஒரு மல்டி நேஷனல் கம்பனியின் முதலாளி! நம்புவீங்களா???



இவர் பெயர் மைன்கான். வயது 67 ஆகிறது. ஒரு வருடம் முன்ன என் கம்பெனியில் ஒரு 300 பேர் கொண்ட குழுவாக கூலி தொழிலாளிகள் பங்ளாதேஷிலிருந்து வந்து இறங்கினர். நேரிடையாக ஏர்ப்போட்டில இருந்து சைட்டுக்கு வந்துட்டாங்க. எல்லோரையும் ஐம்பது ஐம்பது பேரா வரிசையா நிக்க வச்சு ஸ்டீல் செக்ஷன், மேசனரி செக்ஷன், கார்பெண்ட்ரி செக்ஷன், கான்கிரீட் செக்ஷன் ன்னு யார் யாருக்கு தேவையோ பிரிச்சு கொடுத்து கிட்டு இருந்தாங்க. அப்போ மேலே சொன்ன மைன்கான் எல்லா வரிசையிலும் முதல்ல போய் நிற்பதும் அவரை கையை பிடித்து இழுத்து வரிசையில் இருந்து அப்புறப்படுத்தி "ஹய்யோ இத நான் வச்சிகிட்டு மாரடிக்க முடியாது" என்பதைப்போல எல்லோரும் நிராகரிப்பதும், இவரும் சளைக்காமல் ஊமை பாஷை மாதிரி ஏதோ சொல்வது அதாவது அவர் சொல்லும் தொணி"நான் நல்லா வேலை செய்வேன் என்னையும் ஆட்டையிலே சேர்த்து கோங்க" என்பதை போலவும் இருந்தது. ஒரு கட்டத்திலே 299 பேருக்கும் யூனிஃபாம் எல்லாம் குடுத்து அங்கிருந்த படியே வேலைக்கு அனுப்பி விட இவர் மாத்திரம் அவமானத்தாலும், எங்கே தன்னை நாட்டுக்கு திருப்பி அனுப்பிடுவாங்களோன்னு ஒரு வித மிரட்ச்சியிலும் இருந்தார். பங்களாதேஷ் பணம் இரண்டு லெட்சம் குடுத்து வந்திருக்கார். கொஞ்ச நேரம் பின்னே உயர்ரக தொழிலாளர் குடியிருப்பு(என்னமா தமிழ் படுத்தியாச்சு) கேம்ப் பாஸ் வந்தார் தனக்கு 12 கூலிகள் வேண்டும் துப்புரவு பணிக்காகன்னு, பின்ன அங்க இங்கன்னு தேத்தி இவரையும் உப்புக்கு சப்பாணியா கேம்ப் கிளீனிங்க்கு அனுப்பி விட்டாங்க.

அந்த கேம்ப் கீழ்தளம் 80 ரூம், முதல் மாடி 80 ரூம் இரண்டாவது மாடி 80 ரூம் அப்படின்னு இருக்கும். ஒவ்வொறு தளத்துக்கும் 4 பேர் வீதம் சுத்தம் செய்ய பணிக்கப்பட்டனர். நம்ம கதாநாயகனை தவிர மீதி எல்லாரும் வாலிப வயசு ஜவான்கள். சின்ன பசங்க தான். ஆனா கீழ்த்தளத்தில் இவருக்கு பணி கொடுக்காமல் இவரை நைசா இரண்டாம் மாடிக்கு அனுப்பிட்டாங்க அந்த பசங்க. இந்த 12 பேருக்கும் அங்கேயே ஒரு ரூமில் தங்குமிடம்.

இவருக்கு வேலை காலை 4.00 மணிக்கு ஆரம்பம். எழுந்து இரண்டாம் தளத்தில் உள்ள அத்தனை கச்சடா கூடையையும் சேகரித்து கீழ்த்தளத்தில் ரோட்டோரமாக இருக்கும் கச்சடா ஸ்கிப்பில் கொண்டு வந்து போட வேண்டும். அது முடியவே காலை 7.00 ஆகிவிடும். கிட்டத்தட்ட 30 தடவை இரண்டாம் மாடிக்கும் ரோட்டுக்கும் போய் வரணும். 80 ரூம் என்றால் சுத்தளவு எப்படியிருக்கும் நெனச்சு பாருங்க. பின்ன அந்த இரண்டாம் தளத்தை முழுவதும் பிரஷ் பண்ணி மோப் போட்டு முடிக்கணும். இது தான் அவர் வேலை. சொல்வது சுலபம் ஆனா 30 தடவை மாடிக்கும் ரோட்டுக்கும் வெயிட்டை தூக்கி இறக்கினாலோ அல்லது இறக்கும் போது பார்த்தாலே கூட போதும் நமக்கு மூச்சு முட்டும். இவர் வேலை முடிய 12.00 ஆகும் அதுக்கு பின்ன ரெஸ்ட் தான். எங்கிருந்து ரெஸ்ட், சமைக்கனும் சாப்பிடனும் இதல்லாம் முடிய அவருக்கு 2.30 ஆகும். பின்ன மாலை சும்மா ஒரு ரவுண்ட் அடிச்சு கீழே கிடக்கும் கச்சடாவை எடுத்து கூடையில் போடனும். 8 மணி நேரம் வேலை என்றாலும் 3 மணி நேரம் ஓவர்டைம் போட்டு அவருக்கு சம்பளம்ன்னு பார்த்தா 800 திர்காம் கிடைக்கும். இவர் கூட வந்த எல்லாருக்கும் சைட்டில் வேலை செய்பவர்களுக்கும் அதே 800 தான் கிடைக்கும்.

முதல் இரண்டு நாள் அவர் வேலை செய்வதை பார்த்து எனக்கு ரொம்ப பாவமா போயிடுச்சு. 3 வது நாள் நான் வேலை முடித்து வரும் போது பார்த்தா இவர் மூக்கு உடைந்து ரத்தமா பிலாஸ்ட்டர் போட்டு, பல் உதட்டில் குத்தி ரத்தம், முகமும் வீங்கி போய்.. எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. 67 வயது பெரியவர் இப்படி தூர தேசத்துல வந்து துணைக்கு ஆள் கூட இல்லாம....ரொம்ப கொடுமை இது. மோப் அடிச்ச சோப் தண்ணியில் மாடிப்படியில் வழுக்கி விழுந்துட்டாராம்.

நாங்க எல்லாம் பேசிக்கிட்டோம், சரி இவர் ஊருக்கு போவது தான் நல்லது ரெண்டு லெட்சம் போனாலும் உயிராவது மிஞ்சுமேன்னு. பின்ன இவருக்கு வைத்தியம் பார்த்த கேம்ப் டாக்டர் 3 நாள் ஓய்வுக்கு எழுதி குடுத்துட்டார். 3 நாள் லீவ் முடிஞ்சு வந்தார் இரண்டாம் மாடிக்கு, திரும்ப வேலை செய்ய ஆரம்பிச்சுட்டார்.

திடீர்ன்னு ஒரு நாள் வந்து கேட்டார் சிகரட் வேணுமான்னு. இரண்டு மாடி இறங்கி ரோட்டுக்கு போய் வாங்கி வர எல்லாருக்குமே ஒரு அலுப்பு இருக்கும். சரி அதனால இவரிடமே வாங்கிகலாம் என நண்பர்கள் முடிவெடுத்து அவரிடம் வாங்க ஆரம்பிச்சாங்க. கடையில் விற்கும் அதே ரேட் தான். அவர் மனித வெடிகுண்டு மதிரி இடுப்பிலேயே ஒரு மினி சிகரட் கடை வச்சுட்டார். மாலை 5.00க்கு எலோரும் வர ஆரம்பிச்சதும் இவர் வியாபாரம் ஆரம்பிச்சுடும். நான் கூப்பிட்டு கேட்டேன் ஒரு நாள் "இதுல என்ன கிடைச்சுட போவுது"ன்னு. அதுக்கு அவர் ''ஒரு நாளைக்கு 50 பாக்கெட் விக்குது அதனால எனக்கு 15 திர்காம் கிடைக்குது"ன்னு சொன்னாரு. அப்படின்னா 450 ரூபாய் சம்பாதிக்கிறார். வெரிகுட் நல்லதுன்னு நெனச்சு கிட்டேன். பின்ன ஒரு நாள் சமைக்க அலுப்பு பட்டு கிட்டு ஹோட்டல் போனேன் இரவு. அப்போது அவர் ஒரு பத்து பதினைந்து சாப்பாடு பார்சல் வாங்கிட்டு இருந்தார். நான் கூப்பிட்டு என்ன இது யாருக்குன்னு கேட்டேன். அதுக்கு அவர் "ஒரு சாப்பாடு வாங்கி வந்து குடுத்தா 1 திர்காம் குடுப்பாங்க, சில சமயம் 50 பில்ஸ் குடுப்பாங்க ஆனா தினமும் 15 பேருக்காவது வாங்கி குடுப்பேன். நான் தினமும் இந்த ஹோடல்ல வந்து 15, 20 சாப்பாடு நான் வங்கறதால எனக்கு ஒரு சாப்பாடு ஃப்ரீ"ன்னு சொன்னார். ஹய் குட் குட் இதிலே ஒரு 450 வந்துடுமே, பாவம் இவர் ஆண்டவன் இப்பத்தான் லைட்டா கண்ணை தொறக்கறார் இவர் விஷயத்துலன்னு நெனச்சு கிட்டேன்.

இங்கே எல்லாருக்கும் வாஷிங் மிஷின் இருந்தாலும் டூட்டி முடிந்து வந்தால் சன் டிவி/சேட்டிங்ன்னு செம பிசியா ஆகிடுவதால?? யாருக்கும் தன் துணிகளை துவைக்க நேரம் இருக்காது. எங்களை நம்பியே ஒரு பெரிய லாண்டரி கம்பனி இருக்குது. இன்றைக்கு துணி எடுத்து போனால் 2 நாள் பின்ன வரும் அதுவும் துணிகளை மாற்றி மாற்றி பாடாவதியா இருக்கும். சில சமயம் அழுக்கே போகாது. ஆனாலும் எங்க வாஷிங் மெஷின் சும்மாவே கிடக்கும். தொட மாட்டோம்ல்ல! ஒரு நாள் நம்ம மைன்கான் வந்து தான் அந்த துணிகளை துவைத்து தருவதாகவும் இன்று கொடுத்தால் அடுத்த நாள் டெலிவரின்னும் சொன்னார். சரின்னு கொடுத்தோம். வாங்கிட்டு போனார். இங்கே ஒரு உருப்படிக்கு 1 திர்காம். அதான் வாஷிங் மிஷின் நிறைய இருக்கே, இவர் சர்ஃப் மாத்திரம் வாங்கி எல்லாத்திலயும் போட்டு மொட்டை மாடில காய வைத்து காலை 3.30க்கு எடுத்து போய் அவர் ரூமிலே போட்டு விட்டு கச்சடா எடுக்க கிளம்பி விடுவார். 12.00 மணிக்கு வேலை முடிந்ததும் சாப்பிட்டு விட்டு அயர்ன் பண்ண ஆரம்பிச்சு ,அயர்ன் பண்ண தெரியும் ஆனா மடிக்க தெரியாது அதனால் ஹேங்கரில் மாட்டி மாட்டி மாலை நாங்க வந்த் உடனே வந்து கொடுத்து விடுவார்.

இப்படியாக ஒரு நாளைக்கு 50 உருப்படிகள் தேறிடும் அவருக்கு. சரியான சுத்தம் நல்ல சர்வீஸ் என்பதால் மேலும் சில பேர் குடுக்க முன் வந்த போது தனக்கு அயனிங் தெரிய வில்லை என சொல்லி வாங்க மட்டேன்னு சொல்லிட்டார். இப்போது அவரின் மாத வருமானமே 3200 திர்காமாக ஆகி விட்டதே. ஆனால் தொடந்து எல்லோ ரும் வற்புறுத்தவே அவர் கூட வந்த கிளீனிங் ஜவான் இலங்கை பையன் அவனிடம் அயனிங் மட்டும் "சப் காண்டிராக்ட்" விட்டார். அவனுக்கு ஒரு உருப்படிக்கு 25 பில்ஸ் இவருக்கு 75 பில்ஸ், ஆனால் ஒரு நாளைக்கு 100 உருப்படி கலெக்ட் பண்ன ஆரம்பிச்சுட்டார். பின்ன முதல் மாடியில் உள்ளவர்கள் துணி போட ஆரம்பித்ததும் ஒரு பீகாரி பையனை வச்சுகிட்டார். அதே காண்டிராக்ட் பேசிஸ்ல. உருப்படிக்கு அவனுக்கு 25 பைசா அயர்னிங்க்கு. இப்போ அவருக்கு 150 உருப்படிகள் வர ஆரம்பிச்சதால துணி கலெக்ட் செய்ய உலர்த்தி எடுக்க ஒரு நேப்பாளி பையன் போட்டுட்டார். ஆனால் இவனை சம்பளத்துக்கு வச்சுகிட்டார்

ஆனால் இவர் கூட வந்த ஜவான்கள் 800 தான் சம்பாதிக்கிறங்க. இவரை வேலைக்கு சேர்த்துக மாட்டேன்ன்னு உதாசீன படுத்தியவர்களை காட்டிலும் இவர் 2 மடங்கு சம்பாதிக்கிறார். மனுஷன் கொஞ்ச நேரம் சும்மா இருந்து நான் பார்த்ததில்லை. அவரை கூப்பிட்டு பேசுவேன், அப்போது சொன்னார், இவர் கூலி வேலை செய்து சம்பாதிச்சதை உறவு காரங்க ஏமாத்திட்டதாகவும், பின்ன தனக்கும் தன் மனைவிக்கும் எந்த ஆதரவும் இல்லாம போனதாகவும் சேர்த்து வச்ச 2 லெட்சத்தை 45 வயசுன்னு போட்டு பாஸ்போர்ட் எடுத்து இங்க வந்ததாகவும் சொன்னாரு.

பாஷைன்னு பார்த்தா இவருக்கு வங்காளி மட்டுமே தெரியும். வேற ஒன்னுமே தெரியாது. எல்லாம் ஊமை பாஷை தான். சரி, இசைக்கும், உழைப்புக்கும் என்ன பாஷை வேண்டி கிடக்கு. இப்ப சொல்லுங்க வங்காளியான இவர்கிட்ட நேப்பாளி,இந்தியன், ஸ்ரீலங்கன்,எல்லாம் வேலை பார்க்கிறாங்க அதனால "மைன்கான் A to Z" கம்பனியை நாம் ஏன் "மல்டி நேஷனல்(வேலை பார்க்கும்) கம்பனின்னு சொல்லக்கூடாது???"

வெட்டி தம்பிகிட்ட ஜாலியா ஒரு கலாட்டா!!!

வெட்டி தம்பி ஒரு பதிவு போட்டிருந்தாரு, அதிலே எனக்கு ஒத்து வராத சில கருத்துகள் மட்டும் இங்க விமர்சிக்கறேன். கோவிக்காதீங்க வெட்டி தம்பி, இது சும்மா ஜாலிக்கு தான்!

//மெட்ராஸ்ல இருந்து திருச்சி போகறதுக்கு ஏர் பஸ்ல போகலாம்னு போய் விசாரிச்சிருக்கான். ஒரு சீட் தான் இருக்குனு சொல்லியிருக்காங்க. அதே சமயம் ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரும் அங்க வந்திருக்கான். உடனே பஸ் கண்டக்டர் (ஏர் பஸ்ல இருக்கறவர் பேரு கண்சக்டரா இல்லை க்ளீனரா?) 100 ரூபாய் அதிகமா சொல்லியிருக்கான். உடனே என் அண்ணன் சாதாரண பஸ்ல போனா அந்த 100 ரூபாய்க்கு திருச்சிக்கே போயிடலாம்னு ஏர் பஸ்ல போகாம சாதாரண பஸ்லயே போயிருக்கான். நம்ம ஆளு (சாப்ட்வேர் தான்) நூறு ரூபா அதிகமா செலவு பண்ணி ஏர் பஸ்ல போயிருக்கான்.

இந்த இடத்துல தப்பு யார் மேலனு எனக்கு தெரியல. ஏமாந்தவன் ஒருத்தன் வரான், நூறு ரூபாய் ஏத்தி சொன்னாலும் சேர்த்து வாங்குவானு சொன்ன அந்த பஸ்காரன் மேல ஏங்க யாருமே தப்பு சொல்ல மாட்றீங்க? ஏமாத்தறவனைவிட ஏமாறவன் மேல ஏன் உங்களுக்கு எல்லாம் இந்த கோபம்? யாரும் விருப்பட்டு ஏமாறதில்லைங்க.//

அதாவது அந்த 100 ரூபா இருந்தா சாதா பஸ்ஸிலே போயிடலாம்! அப்படின்னா கிட்ட தட்ட 75% உங்க சாப்ட் வேர் கம்பனி அதிகமா விலை கொடுக்க தயாரா இருக்குது, பஸ்ஸிலே மட்டுமல்ல தனக்கு தேவைப்பட்ட எதையுமே, அப்படித்தானே! ஒரு 10% அதிகமா கொடுத்து பிலாக்கிலே போனா கூட ஒத்துக்கலாம். இல்ல ஒரு அவசர ஆத்திரம்ன்னா 25% அதிகமா கொடுக்கலாம். ஆனா 75% அதிகமா பஸ்காரன் கேட்டான்னா என்னா காரணம் ஏற்கனவே "கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா" சாப்ட்வேர் கிட்ட அவன் இது போல பல தடவை சுகம் அனுபவிச்சு இருக்கணும். நீங்க பழக்க படுத்தீட்டிங்க அப்படி! எங்க ஒரு கிராமத்து விவசாயிகிட்ட கேட்டு பார்க்க சொல்லுங்க, நீங்க சொன்னாலும் பஸ்காரன் கேக்க மாட்டான். என்னவோ 100 ரூபாய் அதிகம் குடுத்துட்டு அந்த சாப்ட்வேர் ஊர் போய் சேரும் வரை குலுங்கி குலுங்கி அழுத மாதிரில்ல "ஏமாந்தவன்"ன்னு சொல்லியிருக்கிய தம்பி! ஜஸ்ட் லைக் தட் 100ஐ "வெட்டி" விட்டுட்டு லேப்பிய மடில வச்சுகிட்டு ASL அடிச்சு கிட்டு போன பார்ட்டிய "ஏமாந்தவன்"ன்னு அடைமொழி சொல்வதை விட "பேட் மேன்"ன்னு சொல்லலாம். அய்யய்யோ அடிக்க வராதீங்க பாலாஜி, "ஃபேட் மேன்" அதாவது "கொழுப்பு மனிதன்"ன்னு சொல்லலாம்.

//இது மட்டுமில்லை. இந்த ஹோட்டல் எல்லாம் அதுக்கு மேல. ஒரு சிக்கன் பிரியாணி அறுபது ரூபாய். சைட் டிஷ் எல்லாம் நூறு நூத்தியிருபது. இப்படி தான். ஒரு ட்ரீட்னு 5 பேரோட போனா ஆயிரத்துல இருந்து இரெண்டாயிரம் வரைக்கும் தாராளமா செலவு ஆகும்.நம்ம ஆளுங்களுக்கு வாரத்துக்கு ஒரு தடவை இப்படி போயாகனும். ஆனா இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு கொடுத்த ஐட்டத்தையே அறுபது ரூபாய்க்கு ஏத்தனவங்க மேல ஏன் யாருக்குமே கோபம் வரல?//

அங்க என்ன தெரியுமா ஆகியிருக்கும், முதல்ல பொதுமக்களுக்கு கொடுக்கும் அதே விலைக்கு தாங்க கொடுத்திருப்பாங்க ஹோட்டல் காரங்க, அங்க போன சாப்ட்வேர் சர்வருக்கு 200 ரூவா டிப்ஸ் கொடுத்திருக்கும்.(எனக்கு தெரிஞ்ச நண்பன் கொடுத்தான், நான் பார்த்தேன்) இப்படி 4 பார்ட்டி வந்துட்டு 200 200ன்னு டிப்ஸ் கொடுத்துட்டு போன பின்ன அந்த சர்வர் 800 ரூபாயை ஆட்டிகிட்டே போயிருப்பான் முதலாளி முன்னாடி! ஆஹா நாம முதல் போட்டு ஹோட்டல் வச்சா நம்ம விட அதிகமா சர்வர் லாபம் பார்க்கிறானே, சர்வருக்கே 200 டிப்ஸ்ன்னா நாம இந்த பார்ட்டிகளுக்கு விலை ஏத்தினா தப்பே இல்லை, அதுங்களுக்கும் பெருமையா இருக்கும் ச்சார் ஆத்மி சாப்பிட்டோம் ஏக்கசார் ஆச்சுன்னு அதுங்களும் சந்தோஷமா பீத்திகிட்டுமேன்னு நெனச்ச முதலாளி ஏத்திட்டான். இதுல அவன் தப்பு என்னா இருக்கு. 1000 ரூவாய் செலவு பண்ணிய சாப்ட்வேர் அடுத்த தடவை அந்த ஹோட்டலுக்கு போகலைன்னு சொல்லுங்க முதலாளி சர்ன்னு பேக் வாங்கிடுவார்! இப்ப என்னாச்சு, உங்களால எல்லாருக்கும் கஷ்டம்.

//சாப்ட்வேர் இஞ்சினியர் இவ்வளவு சம்பாதிக்கிறானு சொல்றீங்களே. அவன் எவ்வளவு சேமிக்கிறானு யாருக்காவது தெரியுமா?//

எப்படி சேமிக்க முடியும், இல்ல எப்படி சேமிக்க முடியும்! இப்படி தெண்ட செலவு செஞ்சா??


//ஒரு கிராமத்துல இருக்குற கவர்மெண்ட் பள்ளிக்கூட ஆசிரியர் சேமிக்கிறதைவிட கொஞ்சம் அதிகமா அவன் சேர்த்து வைக்கலாம். அவ்வளவு தான். //

ஊக்கூம், ஒருகாலும் முடியாது, 1வது வாத்தியாரின் சம்பளம் தெரியாம பேசாதீங்க, அது தவிர எங்க அவருக்கு நிலம் இருக்குதோ அங்க மாத்தல் வாங்கிட்டு போய் சுகமா இருக்கும் வாத்தியாரையும் தெரியும். 4 , 5 வாத்தியார் சேர்ந்துகிட்டு லோன் போட்டு வட்டிக்கு விடும் ஆயிரக்கணக்காண வாத்தியாரையும் எனக்கு தெரியும். அவங்க சாமர்த்தியம் உங்களுக்கு வராது!

//இருபத்தியொரு வயசுல எப்படியோ படிச்சி முடிச்சிட்டு வரான். கேம்பஸ்ல வேலை கிடைச்சா பரவாயில்லை. ஆனா அப்படி கிடைக்கலைனா அந்த வேலை கிடைக்க அவன் படற கஷ்டம் வேற எந்த துறைக்கும் குறைவானதில்லை. அப்படியே கஷ்டப்பட்டு வேலைக்கு போனவுடனே அவன் வாங்கற சம்பளம் அவனுக்கு ஒரு பெருமையையும், தலை கனத்தையும் தருது. //

இது சாப்ட்வேர் மாத்திரம் அல்ல பொது தான் எல்லா துறைக்கும். அதான் நீங்களே ஒத்துகிட்டீங்களே!

//சாப்ட்வேர் இஞ்சினியருங்க வாங்கற சம்பளமெல்லாம் மொத்தமா ரியல் எஸ்டேட்காரவங்ககிட்டயும், செல் போன் கம்பெனிகளிடமும், ஹோட்டல் ஓனருங்ககிட்ட தான் போய் சேருது. கொஞ்சம் கொஞ்சம் தியேட்டர் ஓனருங்ககிட்டயும், ஏர் பஸ்காரங்கட்டயும் போய் சேருது.//

ஆஹ நீங்க சொல்ல வர்ரது என்னான்னா, ரியல் எஸ்டேட்காரனும், ஹோட்டல் ஓனரும் , செல்கம்பனி காரனும் தான் உங்க காசை கொள்ளை அடிச்சுட்டான். அப்படித்தானே. அதனால அவன் தான் உங்க சாப்ட்வேர் கம்பெனி ஆளுங்களை விட பணக்காரன். ஆனா பணத்தை தண்ணியா செலவழிக்கும், தெண்டமா செலவழிக்கும், பொருளாதாரத்தை சீர்குலைக்கும் குற்றச்சாட்டு அவனுங்க மேல வராம உங்க மேல ஸாரி சாப்ட்வேர் மேல மட்டும் வர காரணம் என்ன வெட்டி தம்பி, காரணம் என்னான்னா இவனுங்க எந்த காரணம் கொண்டும் 75% அதிகம் கொடுத்து ஆம்னில போக மாட்டான். எதிர்ப்பான், இல்லாட்டி அட்லீஸ்ட் "ஹிண்டு"க்கு லெட்டர் எழுதுவான்.

//பிரியாணி இதையெல்லாம் விட ஒரு டூ-வீலர், அப்பா, அம்மாவோட இருக்குற வீடு, அம்மா கைல சமைச்ச ரசம், துவையல் இதெல்லாம் தாங்க சொர்க்கம். பெரு நகரங்களிலிருக்கும் சாப்ட்வேர் கம்பெனியெல்லாம் கொஞ்சம் சிறு நகரங்களுக்கு கொண்டு வந்து பாதி சம்பளம் கொடுத்தாக்கூட போதும். நம்ம ஆளுங்க எல்லாம் ஓடி வந்துடுவாங்க. //

லேபிளை மாத்துங்க, நாப்பத்தி ஐந்தா ஆகட்டும்:-))

//அதை விட்டுட்டு நீ எப்படி நாற்பதாயிரம் சம்பாதிக்கலாம்னு சண்டை போடறதோ, புலம்பறதோ சரியில்லைங்க//
அப்படி யாரும் புலம்பவில்லை பாலாஜி, தெண்டமா செலவு பண்ணி மத்தவங்களுக்கு தொல்லை குடுக்காதீங்க, இதால பாதிக்கப்டுவது ஏழைகள் இல்லை. நடுத்தர வர்க்கம் தான். கொஞ்சம் யோசிங்கப்பா!!!
.

October 25, 2007

எங்க துபாய்ல வெள்ளின்னா ரெண்டு:-))

இந்த பதிவு என்னான்னு புரியாதவங்க இதன் முதல் பாகத்துல இங்க பாருங்க. "ஏன் இப்படி நடு ரோட்டிலே திட்டிகிறாங்க இண்டீசண்ட் ஃபெல்லோஸ்"ன்னு மனசுல நெனச்சுகிட்டு வீட்டு படி ஏறினேன், சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மா என் கண்ணுக்கு கல்கத்தா காளி மாதிரியே தெரிஞ்சாங்க!!! என்ன பிரச்சனை அம்மாவுக்குன்னு தெரியலையேன்னு நெனைச்சுகிட்டு கிட்ட போனேன். அம்மாவும் வாடா என் ராசாங்க்குற மாதிரி கைய நீட்ட கிட்ட ஓடினேன். அப்படியே ஆசையா என் புறங்கழுத்த பிடிச்சு ஆசை தீர_____________________(மிருகவதை சட்டம் அம்மாவின் மேல் பாய எந்த மகன் ஒத்துப்பான்) அதுல நடுவே டயலாக் வேற " பாவி பயலே பத்து ரூவா தெண்டமாக்க பாத்தியே"ன்னு. இது என்னான்னு புரியாதவங்க பதிவின் இரண்டாம் பாகம் பாருங்க!!

அது வேற ஒன்னும் இல்லீங்க, எங்க அம்மா அடிக்கடி விடும் டயலாக் தான் அது. நான் பிறந்த போது மருத்துவம் பார்த்தவங்களுக்கு ஃபீஸா பத்து ரூவா கொடுத்தாங்கலாம், அதை தெண்டமாக்க பாத்துட்டனாம். ங்கொக்கமக்கா தஞ்சாவூரு நக்கலுக்கு ஒரு எல்லையே இல்லியா! சரி விஷயத்துக்கு வருவோம், சம்பவம் வெளிவிவகார துறை அமைச்சர் மூலமா முதல்வர் காதுக்கு போக அவரும் சைக்கிளை சீட்டுல உக்காராம ஓட்டிகிட்டே வந்துட்டார் விசாரணைக்கு. அக்க்கியூஸ்டு நான் குத்தவாளி கூட்டிலே நிக்கிறது மாதிரி முற்றத்துல நிக்க எல்லாரும் ரவுண்டு கட்டி நிக்க முதல்வர் நேரா விசாரணையே இல்லாமல் தீர்ப்பு சொல்லிட்டாரு. இனி ரோடு கிராஸ் பண்ணி எதிர்த்தாபோல இதுக்கும் ஔவையார் வேண்டாம். கொல்லை வழியா போய் ஆரியபாலா ஸ்கூல்ல போட்டுடலாம்ன்னு ஏகமனதா முடிவு பண்ணி அடுத்த நாள் சித்தப்பா என்னை கொல்லை வழியாக பின் தெருவில் இருக்கும் ஆரிய பாலா ஸ்கூலுக்கு கொண்டு போனாரு. போகும் போதே நல்லா வழிய பார்த்துகிட்டேன்.

அங்க போன பின்ன தான் அழுத கண்ணும் சிந்திய மூக்குமா ஒருத்தனை பார்த்தேன். அப்பல்லாம் நான் அழுவதில்லை. சீனியர்ல்ல! முதல் ஸ்கூல் பார்த்து ரெண்டாவது ஸ்கூல் வந்தாச்சுல்ல. "இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்"ன்னு கிரிமினல் சிந்தனை மட்டுமே இருந்தது எனக்கு. மெதுவா கிட்ட போய் "டேய் உம் பேரு என்னாதா"ன்னு கேட்டேன், அப்போ எனக்கு "டா" வராது. அதுக்கு அவன் "நாதா"ன்னு சொன்னான். அப்ப அவனுக்கு "ரா" வராது. அழுதுகிட்டே ஒரு சாக்லெட் எடுத்து குடுத்தான், அப்ப தெரியாது நாங்க ரெண்டு பேரும் பிற் காலத்துல அடிக்க போகும் கூத்து. அந்த ஸ்கூல் பின்புறம் தான் அவன் வீடு. சரின்னு கொஞ்ச நேரம் ஷேமம் எல்லாம் விசாரிச்சுட்டு அடப்பாவி அப்பா அம்மாக்களே நம்ம வீட்டில தான் இந்த கொடுமைன்னு பார்த்தா உலகம் முழுக்க "குழந்தையீயம்" கொடுமை நடக்குதான்னு அதை உடனே தடுத்தாகனும்ன்னு கிளம்பிட்டோம். "சரிதா ராதா நான் இந்த பக்கமா நேரா போறேன் நீ பின்னாதி நதந்து போ"ன்னு சொல்லிட்டு கிளம்பி வீடு வந்து சேந்தாச்சு.

வீட்டுல முடிவு பண்ணிட்டாங்க, இவனை எங்க விட்டாலும் வந்துடுவான். அதனால புது தெரு ஸ்கூல்ல (கொஞ்சம் பின்னால இருக்கு) சேர்த்துடுவோம்ன்னு முடிவு பண்ணி அடுத்த நாள் என் பாட்டி என்னை தூக்கிகிட்டு ஒரு காசி துண்டை என் மண்டையிலே சுத்தி பாகிஸ்தான் வாசிம்கானை படத்துக்கு படம் கோர்ட்டுக்கு அழைச்சுட்டு போவாரே விசயகாந்து அது போல போனாங்க. அங்க போய் தலை கட்டை பிரிச்சு வுட்டா எந்த வாத்தியாரை பார்த்தாலும் வீரப்பா மாதிரியே இருக்கு. "உக்காருடா"ன்னு கரகரன்னு சொல்றாரு சாரு! சரின்னு கதவு ஓரமா உக்காந்து கொஞ்ச நேரம் பின்ன நைசா வெளியே வந்து கால் போன போக்கிலே எங்கே போகும் இந்த பாதைன்னு இளைய ராஜா மாதிரி பாடிக்கிட்டே நடந்தேன். அப்பவும் அந்த மஞ்ச பையும் ஹிண்டு பேப்பரையும் விடலை. அப்ப புது தெருவின் குறுக்கே போகும் வாய்காலின் தண்ணி சத்தம் நல்லா இருந்துச்சு சலசலன்னு. அதிலே இறங்கி காலை தண்ணில விட்டுகிட்டு பையை தலை மாட்டுக்கு வச்சிகிட்டு படுத்துகிட்டு சின்ன சின்ன கல்லா எடுத்து தண்ணில போட்டுகிட்டு ஒரு கவிஞர் ரேஞ்சுக்கு சுகமா இருந்தேன்.

அப்ப பார்த்து நம்ம வெளி"விவகார"ம் ஸ்கூல்ல உளவு பார்க்க போய் அங்க நான் இல்லாமையால் வீட்டுக்கு போய் சொல்லி பாட்டி, அம்மா, முதல்வருக்கு சேதி போய் தலைவரும், பின்ன சித்தப்பாவின் சேக்காளிங்க ன்னு ஆளுக்க்கு ஒரு பக்கமா கிளம்பிட்டாய்ங்க. கடேசில என்னை பிடிச்சு சைக்கிள்ல முன்னால உக்காரவச்சி சித்தப்பா சாத்திகிட்டே வந்தாரு.

அதுக்குள்ள என் பாட்டி "பத்து எருமை வாங்கி மாடு மேய்ச்சாலும் மேய்க்கட்டும் இனி ஸ்கூல் வேண்டாம்"ன்னு அழுத்தம் திருத்தமா தீர்ப்பு சொல்ல (என்னய மாடு மேய்க்க விடுறதிலேயே குறியா இருந்தாங்கப்பா பாட்டி) அப்படியே எல்லாரும் ஒத்து கிட்டு ஒரு வருஷம் போகட்டும். அஞ்சு வயசிலே சேர்த்துக்கலாம்ன்னு விட்டுட்டாங்க.

அடுத்த ஆயுத பூஜை வந்துச்சு. சரி பையன் தெருவிலே இருந்த மூணு ஸ்கூல்லயும் படிச்சுட்டான், இனி மேல் படிப்புக்காக முறைப்படி நேஷனல்ல சேர்த்துடலாம்ன்னு முடிவு பண்ணி மாலை, மிட்டாய் எல்லாம் வாங்கி அப்பா, சித்தப்பா சகிதமா ஸ்கூல் போய் அப்பா சேர்த்து விட்டாங்க. அவங்க ஒன்னாப்பு படிக்கும் போது அன்னபாக்கியம் டீச்சராம். அவங்க கிட்ட தான் நானும் படிக்கனும்ன்னு பிடிவாதமா 1 A விலே சேர்த்தாங்க. அப்பாவுக்கே டீச்சர்ன்னா அப்ப எப்படி இருப்பாங்க, கிட்டதட்ட ரிட்டையர்டு ஆகிற மாதிரி. ஆனா பக்கத்து கிலாஸ் 1 C யிலே நம்ம ராதா. ஒன்னுக்கு போக வெளியே வரும் போது ராதா ரொம்ப பீத்திகிட்டான். "எங்க டீச்சர் தாண்டா அழகு, உங்க டீச்சர் உங்க பாட்டி மாதிரி இருக்காங்கன்னு" என் ஈகோவை தட்டி விட்டான்.

ரெண்டு கிளாசுக்கும் நடுவே ஒரு தட்டி தான். கீழே ஒரு ஆள் புகுந்து போகும் அளவு இடைவெளி இருக்கும். நான் அன்ன பாக்கியம் டீச்சர் கிளாசில் கடைசி வரிசையில் இருந்தனா. அப்படியே கீழ கடல் கன்னி மாதிரி படுத்துகிட்டு பாதி உடம்பு தலை முதல் வயிறு வரை லெஷ்மி டீச்சர் கிலாசில் வைத்து கொண்டு மீதி பாகம் 1 A விலே வச்சிகிட்டு ராதாவோட பேசிகிட்டே பொழுதை போக்கி கொண்டிருந்தேன். அப்போ கால்ல சுள்ன்னு அடி, டக்குன்னு உடம்பை 1 Aக்கு பாம்பு மாதிரி திருப்பி கொண்டு வந்தா பெரம்போட அன்னபாக்கியம் டீச்சர். "உனக்கு லெஷ்மி டீச்சர் கிளாஸ்க்கு தான் போகனும்ன்னா அங்கயே ஓடு"ன்னு சொல்ல அதான் சாக்குன்னு சர்ன்னு அதே தட்டி வழியா பூந்து லெஷ்மி டீச்சர் கிளாஸ்க்கு வந்துட்டேன்.

அப்படித்தான் மக்கா நான் படிக்க??? ஆரம்பிச்சது.

நீயெல்லாம் ஒரு பொம்பளையா?????

பள்ளிகூடம் போகலாமான்னு நம்ம டீச்சர் கொசுவத்தி சுத்தி வச்சு அது நமக்கும் பத்திகிச்சு. சரி நம்ம பங்குக்கும் நாமளும் சுத்திவிடுவோமேன்னு கிளம்பிட்டேன்.

நான் படிக்க வந்ததே ஒரு விபத்துங்க. பள்ளிகூடத்தில் சேர்க்கப்பட்டேன்ன்னு சொல்றது தப்பு. துரத்தி விடப்பட்டேன்:-) அப்படி என்ன தப்பு செஞ்சேன் அந்த நாலு வயசிலே, என்ன எல்லா பிள்ளைகளும் செய்யும் வால் தனம் மாதிரி ரெண்டு மடங்கு அதிகமா செஞ்சுட்டேன். அதுக்கு போய் அத்தன பெரிய தண்டனை. அதல்லாம் ரொம்ப ஓவர். அம்மா தேங்காய் துருவினால் அந்த பூ எடுத்து தின்பதில்லை. முழு மூடியா வேணும். அதில் என் எலிபல்லுக்கு எட்டிய தூரம் வரை ரவுண்டா கடிச்சுடுவேன். தொழில் சுத்தமா இருக்கும்.கடிச்ச தேங்காவை வாயிலே வச்சிகிட்டு கொஞ்சம் ஜீனியையும் வாயிலே கொட்டிகிட்டு என் அம்மாவை விட ஸ்பீடா ஓடுவேன். அய்யாவை பி(அ)டிக்க முடியாதுல்ல!! ரேழியில் கிடக்கும் செருப்பை எல்லாம் எடுத்து வாசலில் இருக்கும் சாக்கடையில் டபக் டபக்ன்னு போட்டுட்டு அதிலிருந்து வரும் பொலக் பொலக் சத்தத்தை ரசிப்பேன். வீட்டுக்கு விருந்தாளி வந்தா ஒரு மஞ்ச பையோடத்தான் வரணும், செருப்பை அதிலே போட்டு எரவானத்திலே மாட்டிடனும், அது அப்போ எங்க வீட்டிலே எழுதப்பட்ட சட்டமாக இருந்தது.

அக்காவின் பென்சில் எடுத்து என் கைக்கு எட்டிய தூரம் வரை வீடு முழுக்க சுவத்திலே மாடர்ன் ஆர்ட் வரைந்து விடுவேன். பார்க்க அப்படி ஒரு அம்சமா இருக்கும்.அதை ரசிக்க தெரியாத அப்பாவுக்கு சுண்ணாம்பு அடிக்கும் செலவு மட்டுமே மனதில் நிற்க்கும். (இப்போ கூட தங்கமணிகிட்ட சொல்லிட்டு தான் வந்தேன் அபிபாப்பா சுவத்திலே கிறுக்காம பார்த்துக்கோன்னு) அப்பாவின் சைக்கிள் காத்தை மெதுவா பிடுங்கிவிட்டு அதன் மேல் உள்ளங்கை வைத்து எனக்கு நானே கூசிக்கிட்டு புளகாங்கிதமடைவேன். அப்பா என்னவோ அவங்க காத்தை பிடுங்கி விட்டமாதிரி ஆபீஸ் போகும் சமயத்தில் குய்யோ முறியோன்னு கத்துவாங்க.

இப்படியாக கிருஷ்ணலீலைகள் அதிகமாக அதிகமாக வீட்டில் பொதுக்குழு கூடி "அதை" நிறைவேற்றும் பொருப்பு வீட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சராகிய என் சித்தப்பாவுக்கு தரடப்பட, அடுத்த நாள் ஆரவாரமாக எனக்கு குளியல் எல்லாம் போட்டு சாம்பிராணி எல்லாம் போட்டு விஷயத்தை என்னிடம் சொல்ல வச்சேன் பாருங்க கச்சேரி, வீட்டையே தூள் கிளப்பிட்டேன். ஒரு வழியா சமாதான பேச்சு வார்த்தை நடந்தது என்னிடம். புஸ்தக மூட்டை இருந்தால் தான் போவேன்ன்னு ஒரு கோரிக்கை வைக்க அம்மா டபடப்ன்னு ஓடிப்போய் பீரோவில் மடித்து "ஜாக்கிரதையா" சேமித்து வைத்த "நியூ கொழும்பு ஸ்டோர்" மஞ்ச பைய தூக்கிட்டு வர நான் புஸ்தகம் எங்கேன்னு கேக்க அம்மா மாவு சலிக்க தந்திஆபீசர் வீட்டிலே இருந்து வாங்கி வத்த ஹிண்டு பேப்பரை எடுத்து நாலா மடிச்சு கண்ணீரோடு மஞ்ச பையிலே திணிக்க(பாவம்ன்னு விட்டாதான் என்னா) புஸ்தக மூட்டை ரெடி, சரின்னு சித்தப்பா என்னை தூக்கிக(ரொம்ப வெயிட் எல்லாம் கிடையாது. சில்லரை காசை சட்டை பையில் போட்டது மாதிரி தான் இருக்கும் வெயிட், ஆனா தம்பிய தூக்க மட்டும் முழு பலபிரயோகம் செய்யனும்) அப்ப தான் அடுத்த கோரிக்கை வைத்தேன். பாட்டியும் கூட வந்தாதான் ஸ்கூல் போவேன்னு.

அதுக்கு அம்மா "மாமி சும்மாதான இங்க உக்காந்து என்கிட்ட நச நசன்னு கிட்டு இருக்கீங்க, கூட போங்க ஓன்னாவது படிச்ச மாதிரியாவது இருக்கும்."...ம் நக்கல்... சரி சித்தப்பாகூட நேர் எதிரே மெயின் ரோட்டை கிராஸ் பண்ணினா இருக்கும் ஔவையார் ஸ்கூலுக்கு ஔவையார் சகிதமா போனேன். அந்த ஸ்கூல்ல மொத்தமே ஒரு சார், ஒரு டீச்சர் தான். ரெண்டு பேருமே தண்ணி வாங்க்கி குடிக்க ஆசுவாசப்படுத்திக்க என் வீட்டுக்கு தினமும் வர்ரவங்கதான். அதனால எனக்கு பெருசா பீலிங் எல்லாம் இல்லை. உக்காந்தாச்சு. எல்லோரும் ஓரோன் ஒன்னு சொல்லும் போது நான் மட்டும் வாயை இருக்கி மூடிக்கிட்டேன். டீச்சர் கெஞ்சி பார்த்த பின் அடுத்த கோரிக்கை வச்சேன். "பாட்டியும் ஓரோன் ஒன்னு சொல்லனும்"ன்னு. வேற வழி! சொன்னாங்க. கும்பலா எங்க கூட என் பாட்டியும் சொன்னாங்க. டீச்சர் எல்லாருக்கும் தனி தனியே வெரிகுட் சொல்லும் போது( அது என்னவோ ஆஸ்கார் மாதிரி பசங்களுக்கு) பாட்டிக்கும் வெரிகுட் சொல்ல அது அவங்களை அவமானப்படுத்தியதா நெனச்சுகிட்டு பாட்டி ஒன்னாவது படிப்பை அன்னிக்கோட டிசி வாங்கிகிட்டு டிஸ்கண்டியூ பண்றதா சொல்லிட்டாங்க, பின்ன அம்மா கெஞ்சி கூத்தாடி அவங்களையும் என்னையும் ஸ்கூல் அனுப்பினாங்க அடுத்த நாள்.

என் கூட சேர்ந்து பாட்டியும் நல்லாதான் படிச்சாங்க, ஆனா கணக்கு சொல்லிகுடுக்கும் போது மட்டும் முந்தானைய தரையில விரிச்சு லைட்டா கண் அசந்துடுவாங்க. பக்கத்திலேயே நானும் படுத்து கண கச்சிதமா வாயில விரல் வச்சுகிட்டு தூங்கிடுவேன். இப்படியா பத்து நாள் போன பின்ன ஒருநாள் திடு திப்புன்னு ஸ்கூல் இன்ஸ்பெக்டர் வந்துட்டார். நாங்க சுகமா தூங்கிட்டு இருக்கும் போது எழுப்பப்பட்டோம். சாருக்கும், டீச்சருக்கும் செம திட்டு கொடுத்துட்டு போயிட்டார் இன்ஸ்பெக்டர். சாரும் டீச்சரும் மெதுவா பாட்டிகிட்ட வந்து "நீங்க இனிமே ஸ்கூல்க்கு வரவேண்டாம்"ன்னு சொல்ல அது பெரிய அவமானமா போயிடுச்சு பாட்டிக்கு.

"என்னைய அவமானப்படுத்திய இந்த ஸ்கூலுக்கு இனி நானும் வரமாட்டேன், என் பேரனும் வரமாட்டான், அவனை மாடு மேய்க்க வச்சாலும் வைப்பேனே தவிர இந்த ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன்"ன்னு வீர சபதம் போட்டுட்டு (அடங்கொக்கமக்கா) என் கையை பிடிச்சு தர தரன்னு இழுத்து கிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்க. அம்மாவுக்கு தான் ரொம்ப கவலையா போச்சு. ஸ்கூல் எதிர்த்தாபோல தானே, அதனால அடுத்த நாள் அம்மாவே என்னை தர தரன்னு இழுத்துகிட்டு வந்து ஸ்கூல்ல விட்டுட்டு போயிட்டாங்க. கொஞ்ச நேரம் உக்காந்து இருந்தேன். வாசலையே பார்த்துகிட்டு இருந்தேன். அம்மா வீட்டின் உள்ளே போனதுதான் தெரியும் நானும் கிளம்பிட்டேன். வாரு வச்ச தொள தொளா டிராயரும், அரைக்கை தொள தொளா சட்டையும் போட்டு கிட்டு களத்தூர் கண்ணம்மா கமல் மாதிரி இருந்த அபிஅப்பா கிளம்பிடுச்சு வாயிலே விரல் வச்சுகிட்டு புஸ்தக மூட்டையை தோளில் மாட்டிகிட்டு (ஹிண்டு பேப்பரையும், மஞ்ச பையையும் தூக்கி எறிஞ்சுட்டு போனாதான் என்ன...லூசு லூசு). தெனாலில கமல் ரோடு கிராஸ் பண்ணுவது போல ரெண்டு காதையும் பொத்திகிட்டு கண்ணை மூடிகிட்டு ரோட்டை கிராஸ் பண்றேன். அப்படியே கிருஷ்ணருக்கு ஆறு வழி விட்ட மாதிரி ரோட்டின் நடுவே நான் மட்டும் தனி வழில அசால்ட்டா நடந்து வர ஒரே கிரீச் கிரீச்ன்னு சத்தம், வடகரையிலே இருந்து வந்த நாலாம் நம்பரும் வேற ரெண்டு மூணு பஸ்ஸும் சரக் புரக்குன்னு நிக்க ரோட்டோரமா போய்கிட்டு இருந்த ஒரு அம்மா ஓடி வந்து என்னை கையை பிடித்து இழுக்க அந்த டிரைவரெல்லாம் கீழே குதித்து "நீயெல்லாம் ஒரு பொம்பளையா புள்ளைய தனியா விட்டுட்டு முன்னாடி போயிட்டியே"ன்னு திட்ட பின்ன என்ன அந்த அம்மா அவங்களை வண்டை வணடையா வாரிடுச்சு.

"ஏன் இப்படி நடு ரோட்டிலே திட்டிகிறாங்க இண்டீசண்ட் ஃபெல்லோஸ்"ன்னு மனசுல நெனச்சுகிட்டு வீட்டு படி ஏறினேன், சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மா என் கண்ணுக்கு கல்கத்தா காளி மாதிரியே தெரிஞ்சாங்க!!! என்ன பிரச்சனை அம்மாவுக்குன்னு தெரியலையேன்னு நெனைச்சுகிட்டு கிட்ட போனேன். அம்மாவும் வாடா என் ராசாங்க்குற மாதிரி கைய நீட்ட கிட்ட ஓடினேன். அப்படியே ஆசையா என் புறங்கழுத்த பிடிச்சு ஆசை தீர_____________________(மிருகவதை சட்டம் அம்மாவின் மேல் பாய எந்த மகன் ஒத்துப்பான்) அதுல நடுவே டயலாக் வேற " பாவி பயலே பத்து ரூவா தெண்டமாக்க பாத்தியே"ன்னு. இது என்னான்னு புரியாதவங்க பதிவின் இரண்டாம் பாகம் பாருங்க!!


டிஸ்கி:: அப்பாடா, நீயெல்லாம் ஒரு பொம்பளையா ன்னு ஒரு பதிவு போடனும்ன்னு நெனச்சு இத போடலீங்க, சத்தியமா கண்மணி டீச்சர் போட்ட ஆட்டோகிராபின் பாதிப்பால் சுத்துன கொசுவத்தி தான். அந்த வார்த்தை வந்த பின்ன அதையே தலைப்பா வச்சுட்டேன். நீங்க ஆதரவு குடுத்தாலும் குடுக்காட்டியும் நான் ஒன்னாப்பு படிச்சதை அடுத்த பாகத்திலே சொல்லியே தீர்ப்பேன் என்பதை அவையடக்கத்துடன் சொல்லிக்கறேன்:-))

October 23, 2007

மெஹா ஹிட் புகழ் "வலைமாமணி" பெனாத்தலார் அவர்களுடன் ஒரு நேர்காணல்!!!

"வலைமாமணி" என எங்கள் பாசக்கார குடும்பத்தினர் சார்பாக கண்மணி டீச்சர் அவர்களால் பட்டமளிக்கப்பட்ட அமீரக சிங்கம் "பினாத்தலார்" அவர்களின் அதிரடியான "கனவில் வரக்கூடாத தமிழ்மணம்" பதிவின் மாபெரும் வெற்றிக்கு பின் அவரை பேட்டி காண கரண்தர்பாரில் இருந்து டெல்லிதர்பார் வரை பினாத்தலாரின் பேட்டிக்காக காத்து கிடந்தாலும் அமீரக வலைப்பதிவர்களுக்காக ஒரு தொலை பேசி பேட்டிக்கு ஒப்புக்கொண்டார் நம் பினாத்தலார். அமீரக வலைப்பதிவர்கள் சார்பாக அபிஅப்பா நானே துணிந்து கேள்வி கணைகளை வீச அதிரடியாக பதில் சொல்லிய பினாத்தலாரை இந்த இடத்தில் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இதோ பேட்டி ஆரம்பம்!

அபிஅப்பா: வணக்கம் பினாத்தலாரே, நீங்க இந்த மாபெரும் வெற்றி குறித்து எப்படி உணர்க்கிறீர்கள்?

பினாத்தலார்: வணக்கம் அபிஅப்பா, மூணு வருஷமா கட்சி நடத்தி நாலாவது வருஷத்துல அடி எடுத்து வச்சு பல வெற்றிய பார்த்த எனக்கு இதல்லாம் ஜுஜுபி

அ.அ: சரி கேள்விக்கு போவோமா, ஸ்டார் பதிவிலே இருந்து வருவோம், ராமன் பெருங்குடிகாரன் என கலைஞர் பதிவு போட்டாரே அதுக்கு இராமன் சென்னையை அடுத்த "பெருங்குடி" பஞ்சாயத்தை சேர்ந்தவர் எனவும், அல்லது "மேட்டுக்குடி" வர்க்கம் எனவும், அல்லது பெரும் குடிகாரன் எனவும் பல பொருள் தந்து மக்களை குழப்புவதாக பேசிக்கிறாங்களே மக்கள் அது பத்தி உங்க பதில் என்ன?

பினா: ஹி ஹி...இது நான் தன்னிச்சையா சொல்லக்கூடைய பதில் இல்ல. எனவே பொதுக்குகுழு கூடி அதிலே நான் மட்டும் முடிவெடுத்து பின்ன நிருபர்களுக்கு சொல்லிவிடுறேன் அப்ப தெரிஞ்சுக்கோங்க!

அ.அ: சரி, சேது சமுத்திர திட்டத்துக்கு நமீதாவின் ஆதரவு கேட்டு கலைஞர் பதிவு போட்டாரே, அதன் பின்னனியிலே என்ன இருக்கு?

பினா: அதுவா, நீங்க நினைப்பது போல் நமீதா சின்ன ஆள் இல்லை!

அ.அ: ஆமா

பினா: குறுக்க ஜொல்லாதீங்க, அதாவது நமீதா இப்போ ஒரு நீதிபதி ஸ்தானத்துல இருக்கிறாங்க, இது உங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம். ஆனா கலைஞ்ர் டி வி பார்க்கும் எல்லோருக்கும் தெரியும் அது பத்தி. அவர் நீதியை மதிப்பவர் என்பதும் உங்களுக்கு தெரியும், அதனாலத்தான் அவர் நமீதாவிடம் ஆதரவு கேட்டார். அத விட கொடுமை உங்க பையன் நட்ராஜ் கிட்ட கூட ஆதரவு கேட்டதாகவும் அதற்கு அவரும் தனக்கு லாலிபாப்பும், தன் டைகருக்கு பெடிகிரியும் வாங்கி குடுத்தா ஆதரவு கண்டிப்பா உண்டுன்னும் சொன்னதா கூட ஒரு தகவல்!

அ.அ: சரி அப்துல் கலாம் "கனவு (மட்டுமே) காணவேண்டும்" என போட்ட பதிவுக்கு ஏன் ஒரே ஒரு பின்னூட்டம்? அது யார் போட்டது?

பினா: ஓ அதுவா, "ராக்கெட் விட்டால் சோதனையோட்டம், பதிவு போட்டால் சோதனைபின்னூட்டம்" என்னும் கொள்கை படி அவருக்கு அவரே போட்டு கிட்ட சோதனை பின்னூட்டம் தான் அது!

அ.அ: ஓக்கே, கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்ப்போம் என பாஜக பதிவு போட்டது பத்தி?

பினா: அதுவா, மறைமுகமா, நேர்முகமா, பக்க வாட்டிலே என எல்லா பக்கமும் வந்து சொல்லியும் ம.பொ.சி யிம் ஆவி கூட திரும்பி பார்க்காத கோவத்தில் எழுதப்பட்ட பதிவு. ஆனா அதை எழுதிய இல.கணேசன் கூட அதற்க்கு பின்னூட்டம் போட வெக்கப்பட்டதால் சும்மா இருக்குதேன்னு பாவப்பட்டு நம்ம குசும்பம் போய் அதிலே " உங்கள் ஓட்டு உதய சூரியனுக்கே"ன்னு ஒரு பின்னூட்டம் போட்டுட்டு ஓடி வந்துட்டான். ஆனா பாருங்க வந்த பின்னூட்டத்தை ஏன் விடுவானேன்னு அதையும் பப்ளிஷ் பண்ணிட்டாங்க!

அ.அ: செட்டாப் பாக்ஸ் வைப்பது டிவிக்கும் நல்லது பதிவிலே 12 பின்னூட்டம் விழுந்ததே அது எப்படி?

பினா: அதுவா ரத்தன் டாடா, லெச்சுமி மித்தல், பிர்லா குழும ஆடிட்டர்,முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பில்கேட்ஸ், விஜய் மல்லையா, கோத்ரெஜ், பாஜாஜ், சசிகலா, இளவரசி மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் போட்ட பின்னூட்டம் அதெல்லாம்.

அ.அ: "2011ல் நானும் முதல்வர்"ன்னு சரத்குமார் போட்ட பதிவு பத்தி சொல்லுங்க?

பினா: நல்லா ஏமாந்திங்களா, சிபி, குசும்பன் மாதிரி தான் சரத் குமாரும், நீங்க பதிவு உள்ள போய் பார்த்தீங்கன்னா " 2007 ல் ஒரு "நம்நாடு" 2011ல் "நானும் முதல்வர் - நாயகி இன்னார் இன்னார்ன்னு விளம்பரம் கொடுத்திருப்பார் அவர் நடிக்க இருக்கும் படத்துக்கு. சரியான மொக்கை பதிவுன்னு சர்வேசனும் இந்த வருஷத்துக்கு அவார்டு குடுப்பார் பாருங்க

அ.அ: சரி பினாத்தலாரே! காமடி கொஞ்சம் குறைவா இருப்பதா பேசிக்கறாங்களே இந்த பதிவிலே!

பினா: யார் சொன்னது, சொல்றவங்களை என் முகத்துக்கு நேரா வந்து பேச சொல்லுங்க நான் மூஞ்சிய பேத்துடறேன், இத்தோட நான் பேட்டிய முடிச்சிக்கறேன்......

அ.அ: சரி சரி "கேடி" வேலை எல்லாம் செய்யாதீங்க பினாத்தலாரே, கொஞ்சம் இருந்து விளக்கம் சொல்லிட்டு போங்க! கூல் கூல்

பினா: (கொஞ்சம் ஐஸ் வாட்டர் குடிச்சுட்டு ஆசுவாசப்படுத்தி கொண்டு) தோ பாருங்க அபிஅப்பா நான் அதிலே மாத்திரம் மொத்தம் 2 இடத்திலே காமடியை அள்ளி இறைத்திருக்கிறேனே, அதனால இந்த சீரியஸ் பதிவுன் நோக்கமே கெட்டுப்போயிடும் அபாயம் இருந்ததால் அத்தோட காமடியை நிறுத்திக்க சொல்லி எனக்கு பல இடத்திலிருந்தும் தந்தி வந்துச்சு அதனால விட்டுட்டேன்.

அ.அ: நீங்க சொல்றது புரியலையே!

பினா: என்ன அபிஅப்பா, சரியான பல்பா இருக்கீங்களே, பரண்ல பாருங்க "வேலூர் நினைவுகள்"ன்னு வைக்கோ எழுதிருப்பார். இதுல ஒரு விஷேஷம் என்னன்னா அந்த பதிவை யாரும் இன்னும் படிக்காமலே அது சூடான இடுகைல வந்துடுச்சு.

அ.அ: அது எப்படி முடியும்?

பினா: அதாங்க வைக்கோ மகிமை! பேரை கேட்டாலா சும்மா அதிருதில்ல தமிழ்மணம். சும்மா பல்லு முளைக்காத குழந்தை முதல் பல்லு போன பாட்டி வரை அப்படி ஒரு சிரிப்பு கொக்கேபிக்கேன்னு, சரி நல்லா வரவேற்ப்பா இருக்கேன்னு அவர் முகத்தை போட்டு அவர் "ஸ்டாலின் கராத்தே கற்ப்பதை தடை செய்ய வேண்டும்" என போட்ட பதிவை படிச்சுட்டு ஹஹ் ஹஹ் ஹஹ் ஹஹ்

அ.அ: சிரிக்காதீங்க சொல்லுங்க

பினா: முடியல அபிஅப்பா, இப்படிப்பட்ட 2 காமடி சீன் வச்சு மருத்துவர் அய்யா, இளங்கோவன் பதிவெல்லாம் ஈயடிக்க வச்சுட்டேனேன்னு பல இடத்துல இருந்தும் எதிர்ப்பு வந்தும் நீங்க காமடி கம்மியா இருக்குன்னு சொன்னீங்களே அதான் எனக்கு கோவம் வந்துச்சு, சரி இன்னிக்கு எனக்கு போரடிக்குது. 67 பின்னூட்டம் வந்துடுச்சு, நான் தூங்க போகிறேன்! பொது மக்கள் இந்த பேட்டிக்கு வரவேற்பு குடுத்தா நாளையும் பேட்டி தொடரும்!!